Wednesday, February 27, 2013

என்றும் எதற்கும் விலைபோகாத மக்கள் தொண்டன் தோழர் சண்முகலிங்கம்


- கனேடிய ஜனநாயக தமிழர் கலாச்சார பேரவை (CDTCA)
008சண், சண் அண்ணா என அழைக்கப்படும் தோழர் பொன்னம்பலம்  சண்முகலிங்கம் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பின்னர் 22-02-2013 அன்று கனடாவில் காலமானார். அவரது  மரணம் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது அவரது உறவினர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரையும் சொல்லணாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் இளம் பராயத்திலிருந்தே அரசியல் ,சமூக விடயங்களில் ஆர்வமுள்ளவராக  இருந்தார் .இடதுசாரி இயக்கம் அவரை இளம் பராயத்தில் ஈர்த்துக்கொண்டது .மலையகத்தில் தொழில் பார்த்தபோது  தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டதனால் அரசினால் கைதுசெய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்தார் .பின்னர் இவர்  வவுனியாவில் இயங்கிய காந்தீயம் அமைப்பில்  இணைந்து  அப்பகுதியிலுள்ள மிகவும் வசதி குறைந்த   மக்களுக்கு அளப்பரிய சேவை செய்தார் .
கனடாவிற்கு புலம்பெயர்ந்த தோழர் சண் அவர்கள் ,தானும் தன்பாடும் என்றிருக்காமல் தன்னலமற்ற தனது சமூக அரசியல் செயற்பாடுகளை  பற்றுறுதியுடன் தொடர்ந்தார்  .இவ்வகையில் ரொறன்ரோ தேடக அமைப்பு  தமிழ் சமூகத்தில் ஜனநாயகம், சமத்துவம், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் மற்றும் பன்முகத்தன்மை போன்ற நோக்கங்களுக்காக செயற்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்  தோழர் சண் அவர்கள் மிகுந்த அர்ப்பணத்துடன்     அவ்வமைப்பில் செயற்பட்டார் . கனேடிய  தமிழ் சமூகத்தில் மாற்றுக்கருத்துக்கான இடைவெளியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார் . சகல விதமான சமூக அநீதிகளுக்கெதிராக தர்மாவேசத்துடன் போராடிய சண்  சில சமயங்களில் தாக்குதல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி இருந்தது . இப்படிப்பட்ட தாக்குதல்களை அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் எவ்வித குரோதமோ, சலனமோ, பயமோ இன்றி தனது பணியை தொடர்ந்தார் .

Sunday, February 24, 2013

அன்பும் மதிப்பும் மிக்க தோழர் சண் அண்ணா அவர்கள் காலமானார்

இலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம், காந்தீயம், தேடகம் போன்ற அமைப்புகளின் முன்னாள் உறுப்பினரான தோழர் சண்முகலிங்கம் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை 22-02-2013 இரவு 10:30 மணியளவில் காலமானர் என்ற தகவலை உங்கள் அனைவரோடும் தேடகம் பகிர்ந்து கொள்கிறது. தோழர் சண்முகலிங்கம் அவர்களின் மறைவையொட்டி இன்று ஞாயிறு 24-02-12013 நடக்கவிருந்த தோழர் சண்முகதாசன் 20வது ஆண்டு நினைவும் நூல் வெளியீடும் பின்போடப்பட்டுள்ளது. Tamil Resource Centre (Thedakam) Toronto, Ontario, Canada 416 840 7335 http://www.trcto.org/

Friday, February 08, 2013

காலம் சஞ்சிகை லண்டனில் அறிமுகம்


“காலம்” சஞ்சிகை லண்டனில் அறிமுகமும் கலந்துரையாடலும்.

09.02.2013 யன்று மாலை 3.30 மணிக்கு லண்டனில் ஈஸ்ட்காமில் “காலம்” சஞ்சிகை 40வது இதழ் அறிமுகமும் கலந்துரையாடலும் செய்யப்படுகிறது. “விம்பம்” ஏற்பாடு செய்துள்ளது. அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
“காலம்” சஞ்சிகை லண்டனில் அறிமுகமும் கலந்துரையாடலும்.

09.02.2013 யன்று மாலை 3.30 மணிக்கு லண்டனில் ஈஸ்ட்காமில் “காலம்” சஞ்சிகை 40வது இதழ் அறிமுகமும் கலந்துரையாடலும்  செய்யப்படுகிறது. “விம்பம்” ஏற்பாடு செய்துள்ளது. அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

Sunday, February 03, 2013

புகைப்படம் + கவிதை = புதிய அனுபவம்


 -ப்பிரஸ்த்தன்-
14, 15 நவம்பர் 1986ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமயந்தியின் புகப்படக் கண்காட்சி பற்றி 07.12.1986ம் ஆண்டு வெளியான ஈழமுரசு பத்திரிகையில்  ப்பிரஸ்த்தன் என்ற பெயரில் நிலாந்தன் எழுதிய விம்ர்சனம். ஒரு மீள் நினைத்தல்.

வெறுப்பு வளர்கிறது.
தோலுக்கு மேல் தோலொடு
ஒவ்வொரு அடி விழும் போதும்
தோல் மேல் தோலோடு
வெறுப்பு வளர்ந்து வருகிறது.
-பாப்லோ நெரூடா-

இந்த வரிகளினூடாக தமயந்தி எங்களிடம் சொல்ல முயலும் விசயம் என்ன...?
கரடு முரடான, முட்கள் மலிந்த எம்முடைய நாட்கள், வெறுமனே வெடிச் சத்தங்களுக்கும், வெற்று ரவைகளுக்கும் நடுவே நகர்ந்து கொண்டிருப்பவை மட்டும்தானா? இல்லை துயரங்களை மாற்றி எழுத நினைத்து, தூக்கிய துவக்குகளும் கழுத்தைத் திருகும் புதிய துயரங்களாய் மாறிய நிலைமை! இது தமயந்திக்கும் தெரிகிறது.

கடற்கரை வரையும் நடந்து பிறகு அலைகளுக்கிடையில் "காணாமல்" போய்விட்ட காலடித் தடங்களினூடாக- எமது போராட்டங்களுக்குள்ளேயே போராடி வெல்லப்பட வேண்டிய ஏதோ ஒன்றைப் பற்றி (மீண்டும் அவனைக் காணவில்லை என்று சொல்லி) எங்களையும் கவலைப்படச் செய்கிறார். அவரைப் பொறுத்தவரை எம்முடைய நாட்கள் அப்படித்தான் இருக்கின்றன.