Sunday, February 28, 2010

பெண்களை அடிமைகளாகவே இருக்க வலியறுத்தும் புலவர்கள் -தந்தை பெரியார் -
மனிதன் ஆக்க வேலைக்குப் பயன்பட வேண்டியவன். மனிதன் பகுத்தறிவு பெற்றிருப்பது, உலகிலுள்ள மனித சமுதாயத்தின் ஆக்கத்திற்குப் பாடுபடவேயாகும். ஆக்க வேலையென்றால் பண்பட்ட நிலமாக இருந்தால் அதனைப் பயன்படுத்தி வாழலாம். ஆனால், முள்ளும் புதரும் நிறைந்த காடு போன்ற நிலத்தில் உள்ள முட்கள், புதர்களை ஒழித்து நிலத்தைப் பண்படுத்தி, அதன்பின் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது. அதுபோன்று நம் மனிதர்கள் மனதில் நிறைந்திருக்கின்ற முட்டாள்தனம், மூடநம்பிக்கை, மடமை, அறிவற்றத் தன்மை ஆகிய முட்களையும், புதர்களையும் அழித்து ஒழித்துப் பண்படுத்தி மனிதனை அறிவுப் பாதையில் செலுத்த வேண்டியவர்களாக இருப்பதால் இப்போது நாம் மனிதனிடமிருக்கும் மடமை, முட்டாள்தனம், மூட நம்பிக்கைகளை அழிக்கும் அழிவு வேலையில் ஈடுபட்டிருக்கிறோம்.

ஒருவன் தனக்கிருக்கிற பழைய காரை வீட்டை மாற்றி, புதிய வீடாக்க வேண்டுமானால், பழைய வீட்டை இடித்து ஒழித்துவிட்டு அஸ்திவாரத்தையே மாற்றியமைக்க வேண்டும். இதைச் செய்யாமல் மாடி வீடு கட்டுவது என்பது இயலாது என்பதோடு, கூரை வீட்டிலுள்ள சாமான்கள் எதுவும் மாடி வீட்டிற்குப் பயன்படுத்த முடியாது. அதுபோன்ற கூரை வீட்டை அழித்து மாடி வீடு கட்டும் காரியத்தில் தான் நாம் இறங்கி இருக்கின்றோம். மனிதனின் அறிவுக் கேட்டுக்கு, வளர்ச்சிக் கேட்டிற்குக் காரணமான பழமையை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றோம். ஆனதால் நம்மிடமிருக்கின்ற பழமைகள் அத்தனையையும் மாற்றியமைப்பதில் ஒன்றாகத்தான் இத்திருமண முறையையும் மாற்றியமைத்திருக்கின்றோம்.

பொதுவாக ஒரு ஜீவன், தன் உணர்ச்சிக்காகவும் இனவிருத்திக்காகவும் ஒன்றோடு ஒன்று கூடியதே ஒழிய, இரண்டும் கூடி வாழ்ந்தது என்பது கிடையாது. மனிதனும் முன்பு அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றான். கணவன் மனைவியாகக் கூடி வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. இச்சைப்பட்ட போது ஒருவருடன் ஒருவர் கூடி பிரிந்தார்களே ஒழிய, குடும்பம், இல்லறம், கணவன், மனைவி என்று வாழ்ந்தார்கள் என்பது கிடையாது. இவையெல்லாம் இடைக்காலத்தில் அதுவும் மற்றவர்களால் நம்மிடையே புகுத்தப்பட்டவையே ஆகும்.

கல்யாணம் ஆனால் அதோடு பெண்களின் தனி உரிமை (இண்டிவிஜுவலிசம்) ஒழிக்கப்பட்டு விடுகின்றது. ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் சாகிற வரை அவனோடேயே வாழ்ந்து தீர வேண்டுமென்றிருக்கின்றது. இடைக் காலத்தில் தான் அதுவும் தங்களை உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களிடையே ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் தன் உயிர் போகிறவரை அவனுடன் இருந்து தீர வேண்டும். கணவன் அவளுக்கு முன் இறந்து விட்டால், கடைசி வரை விதவையாக வேறு எவனையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டியது என்பது முறையாகிவிட்டது. இப்படிப் பெண்கள் சமுதாயத்தை எதற்கும் பயன்படாமல், தங்களின் அடிமைகளாக
உரிமைப் பொருளாக ஆக்கிக் கொண்டு விட்டனர்.

நம் புலவர்கள் என்பவர்கள் மூட நம்பிக்கையைப் பரப்புகின்றவர்களாக இருக்கின்றார்களே தவிர, புதுமையைப் பரப்பக் கூடியவர்களாக இல்லை. நம் புலவர்கள் எல்லாம் குறையில்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய பெரும் அறிவாளி புலவர் வள்ளுவர். அவர் முதற்கொண்டு அத்தனைப் புலவர்களும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, ஒருவன் கூட பெண்கள் உரிமையோடு, சுதந்திரத்தோடு, சமத்துவத்தோடு வாழ வேண்டுமென்று சொல்லவில்லை. இந்த வள்ளுவர் தான் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். வள்ளுவன் பெண்களைத் தான் கற்போடிருக்க வேண்டுமென்று சொன்னாரே தவிர, ஆண்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை என்று ஒரு திருமணத்தில் இதுபோன்று குறிப்பிட்டேன்.

அந்தத் திருமணத்தில் திருக்குறள் முனுசாமி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நான் அவரிடம், "சொன்னது தவறாகக் கூட இருக்கலாம். வள்ளுவர் ஆண்கள் கற்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டினால், நான் எனது தவறை மாற்றிக் கொள்கிறேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர் "திருக்குறளிலிருந்து "பிறன் இல்விழையாமை'' என்ற அதிகாரத்தைக் காட்டி, "வள்ளுவர் ஆண்களுக்கும் அறிவுரை கூறி இருக்கிறார்'' என்று சொன்னார். நான் உடனே, "பிறன் மனைவியிடம் போக வேண்டாமென்று சொன்னாரே ஒழிய, கல்யாணம் ஆகாத பெண்களிடமோ, கணவன் இல்லாத பெண்களிடமோ போகக்கூடாது என்று சொல்லவில்லையே. கல்யாணம் ஆன பெண் இன்னொருவனுடைய சொத்து என்பதால், பிறர் சொத்தைத் திருடக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மற்றப்படி பெண்களுக்குச் சொன்னது போல எந்த ஆணிடமும் செல்லக்கூடாது என்று சொல்லவில்லையே'' என்று சொன்னதும் அவரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

18.5.1969 அன்று இரும்புலிக்குறிச்சியில் நடைபெற்ற திருமணத்தில் ஆற்றிய உரை

Friday, February 26, 2010


1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியின் வரலாற்று முக்கியத்துவம்
- சி.கா.செந்திவேல் -

வரலாற்று நிகழ்வுகள் அவ்வப்போது வரலாற்றின் பக்கங்களில் பதிவாகிக்கொள்கின்ற போது அவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமே வரலாற்றுமுக்கியத்துவம் பெறுவதுடன் வரலாற்றுத் திருப்பு முனைகளையும்தோற்றுவித்துக் கொள்கின்றன. அவை தனியே வெற்றிகரமானவைகளாகமட்டுமன்றி தோல்விகளைத் தழுவியவைகள் கூட வரலாற்று முக்கியத்துவம்கொண்டவைகளாகின்றன. அவற்றின் அனுபவங்கள் பட்டறிவுகள் வரலாற்றின்வளர்ச்சிப் போக்கிற்கு பங்களிக்கின்றன. அவற்றின் ஊடே வரலாற்று வளர்ச்சிப்போக்கானது தனக்குச் சாதகமானவற்றை உள்வாங்கியும் பாதகமானவற்றைநிராகரித்தும் கொள்கிறது. இதனை வரலாற்றுணர்வோடு அணுகும் எவரும்எந்தவொரு நிகழ்விலும் கண்டு கொள்ள முடியும்.

அந்தவகையில் இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியத்துவம்கொண்டதும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுமான வரலாற்றுநிகழ்வாகவே 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சி அமைந்து கொண்டது. இரண்டாயிரம் ஆண்டுகாலப் பழைமையானதும் மனித சமத்துவத்தை மறுத்தஅமைப்பாகவும் கொடுமையானதாகவும் நீடித்து வந்த சாதியத்தின் மீது பெரும்தாக்குதலை அவ் எழுச்சி தொடுத்து நின்றது. ஆனால் அவ்வெழுச்சியை ஒருகனதி மிக்க வரலாற்று நிகழ்வாகவோ அன்றித் தமிழர்களின் சமூக வாழ்வில்இடம்பெற்ற பெரும் திருப்பு முனையாகவோ ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலையேதமிழ்த் தேசியவாதப் பரப்பில் இன்றுவரை காணப்படுகிறது. தமிழ்த் தேசிய வாதவரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யும் எந்த ஒருவரும் கூட ஒக்ரோபர் 21 எழுச்சியின் தாக்கம் பற்றியோ அதன் முக்கியத்துவம் பற்றியோ எடுத்துக்கூறுவதில்லை. ஏனெனில் மேட்டுக்குடி உயர்வர்க்க உயர் சாதிய அறிஞர்கள்ஆய்வாளர்கள் எனப்பட்டவர்களே இப்போதும் ஆதிக்க கருத்துப்பரப்புரையாளர்களாக இருந்தும் வருகிறார்கள். இத்தகைய போக்கு இன்றுமட்டுமன்றி வரலாறு முழுவதும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிகளும்போராட்டங்களும் மறைக்கப்பட்டும் அல்லது திரிக்கப்பட்டும் வந்தனவற்றின்தொடர்ச்சியேயாகும். அந்தவகையில் தான் 1966ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் மீண்டும் மீண்டும்பேசவேண்டியுள்ளது. அதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் புதியதலைமுறையினருக்கு அந்நிகழ்வின் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் கடமையும் உண்டு.

1966ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சிக்குத் திட்டமிட்டு நாள் குறித்துக் கொண்டதுசீனசார்பு எனப் பத்திரிகைகளால் சுட்டப்பட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட்கட்சியேயாகும். அன்றைய பழைய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மாக்சிசலெனினிசப் புரட்சிகரக் கட்சியாக பிளவடைந்து 1964இல் தோற்றம் பெற்றதேமேற்படி கட்சியாகும். தோழர் நா.சண்முகதாசன் மற்றும் சிங்களத் தோழர்கள்தலைமையில் புரட்சிகர வேகத்துடன் வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகத்தில்தொழிலாளர்கள் விவசாயிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் அக்கட்சிஅரசியல் தொழிற் சங்க வேலைகளில் ஈடுபட்டு வந்தது. அதன் காரணமாகஅக்கட்சியில் உழைக்கும் மக்கள,; தாழ்த்தப்பட்ட மக்கள் பெருந்தொகையில்அணிதிரள ஆரம்பித்தனர். குறிப்பாக இளைஞர் யுவதிகள்புரட்சிகரமானவர்களாகிக் கொண்டனர். அத்தகைய இளைஞர்களில்ஒருவனாகவே நானும் 1964இல் இப்புரட்சிக் கட்சியில் இணைந்துகொண்டேன்என்பதும் குறிப்பிட வேண்டியதாகும். அன்றைய யாழ் குடாநாட்டு சமூகநிலையில் சாதிய முரண்பாடு கூர்மையடைந்து வந்ததுடன் தாழ்த்தப்பட்ட மக்கள்மீதான, சாதிய தீண்டாமை ஒடுக்குமுறைகள் அதிகரித்தும் வந்தது. அவ்வாறானசூழலிலேயே சாதிய தீண்டாமைக்கு எதிராக மக்கள் போராட்டத்திற்கானஅறைகூவல் விடுப்பதற்கு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்து அதன்பொறுப்பை கட்சியின் வடபிரதேசக் கட்சிக் குழுவிடம் ஒப்படைத்தது. அதன்அடிப்படையிலேயே கட்சியானது 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21ந் திகதியைக்குறித்து சுன்னாகம் சந்தை மைதானத்திலிருந்து ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தைகாங்கேசன்துறை வீதிவழியாக யாழ் நகர் நோக்கி நடாத்தி யாழ் முற்றவெளியில்பகிரங்கக் கூட்டத்தை நடாத்தவும் தீர்மானித்தது. கட்சியும் அதன் கீழான வாலிபர்இயக்கம், தொழிற் சங்க, விவசாய சங்கங்கள் இதற்கான தயாரிப்பில் இறங்கின. பொதுச் செயலாளராக இருந்த தோழர் சண்முகதாசன் உட்பட வேறு சிங்களத்தோழர்களும் கொழும்பிலிருந்து வந்திருந்தனர். யாழ் முற்றவெளிக்கூட்டத்திற்கு ஒளிபெருக்கி அனுமதி கொடுத்த பொலிசார் சுன்னாகத்திலிருந்துஊர்வலம் செல்வதற்கு அனுமதி மறுத்திருந்தனர். இந்த அனுமதி மறுப்பிற்குப்பின்னால் சாதிய ஆதிக்க சக்திகள் இருந்தன. அவ்வேளை ஐக்கிய தேசியக்கட்சியுடன் தமிழரசு - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து அரசாங்கத்தில் அமைச்சர்பதவி பெற்றும் இருந்தனர்.

இருப்பினும் குறித்த நாளன்று பிற்பகல் 4.00 மணியளவில் சுன்னாகம் சந்தைமைதானத்தில் கட்சி வாலிபர் இயக்க, தொழிற்சங்க விவசாய சங்கஉறுப்பினர்கள் ஆதரவாளர்கள் சாதியத்தை விரும்பாத நல்லெண்ணம்கொண்டோர் என மக்கள் திரண்டனர். இறுதி நேரத்தில் கூட பொலிஸ்அதிகாரிகளுடன் பேசியும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆயிரத்திற்கு மேற்பட்டமக்கள் பொலிஸ் தடையை மீறி ஊர்வலம் செல்லத் தயாராக இருந்தனர். அதற்குதலைமை தாங்க கட்சியின் தலைவர்கள் புரட்சிகர தலைமைத்துவ உணர்வுடன்முன்வந்தனர். சுமார் 5.00 மணியளவில் சுன்னாகம் கந்தரோடை வீதியின் சந்தைமைதானப் பகுதியிலிருந்து விண்ணதிரும் முழக்கங்களுடன் புரட்சிகர ஊர்வலம்யாழ் நகர் நோக்கிப் புறப்பட்டது. ~~சாதி அமைப்புத் தகரட்டும் சமத்துவ நீதிஓங்கட்டும்|| என எழுதப்பட்ட செம்பதாகை உயர்த்தி முன்னே எடுத்துச் செல்லஅதன் கீழ் கட்சியின் தலைவர்கள் கம்பீரமாக தலைமை தாங்கி முழக்கமிட்டுமுன் சென்றனர். ஊர்வலத்தினர் சாதியத்திற்கு எதிரானதும் தீண்டாமையையும்எதிர்த்து வௌ;வேறான புரட்சிகர முழக்கங்களை முழங்கி உணர்வும்உத்வேகத்துடன் முன்சென்றனர். அன்றைய ஊர்வலத்தின் முன்னே தோழர்கள்கே.ஏ.சுப்பிரமணியம், வீ.ஏ.கந்தசாமி, டாக்டர் சு.வே.சீனிவாசகம், கே.டானியல், இ.கா.சூடாமணி, டி.டி.பெரேரா, மு.முத்தையா, எஸ்.ரி.என்.நாகரத்தினம் ஆகியோர்சென்றனர். அதற்கு அடுத்ததாக வாலிப இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள்விவசாயசங்கத் தோழர்கள், இளைஞர்கள் அணியாக முழக்கம் இட்டுச்சென்றனர். அன்று சாதியத்திற்கு எதிராக சுன்னாகத்தில் எழுந்த புரட்சிகரஆர்ப்பாட்ட முழக்கங்கள் வடபிரதேசத்தில் கட்டிறுக்கத்துடன் இருந்து வந்தசாதியக் கோட்டை மீது எதிரொலித்தன. அதுமட்டுமன்றி எதிர்வரப் போகும்புரட்சிகரப் போராட்;டப் புயலுக்கான முன்னறிவிப்பாகவும் அவ்வூர்வலம்அமைந்திருந்தது. அத்தகைய உறுதியும் உணர்வும் உத்வேகமும் கொண்டஊர்வலம் சுன்னாகம் பிரதான வீதியில் அமைந்திருந்த பொலிஸ் நிலையத்தைஅண்மித்த போது ஏற்கனவே அணிவகுத்து வீதிக்கு குறுக்கே நின்ற பொலிஸ்படை ஊர்வலத்தின் மீது பாய்ந்தது. காங்கேசன்துறை உதவிப் பொலிஸ்உயரதிகாரி தலைமையிலான பொலிசார் மிக மோசமான குண்டாற் தடிபிரயோகத்தையும் துப்பாக்கிப் பிடிகளிலான தாக்குதல்களையும் நடத்தினர். அவர்கள் மத்தியில் சாதி வெறியுடைய தமிழ்ப் பொலிஸ் அதிகாரிகளும்பொலிசாரும் அதிகமாக இருந்தனர். அவ்வாறு அடிகள் வீழ்வதைஉற்சாகப்படுத்திய சில சாதிவெறியர்களும் சம்பவ இடத்தில் இருந்தனர். முன்தயாரிப்போடும் உள்நோக்கத்தோடும் அவ்வூர்வலத்தின் மீதான பொலிஸ்தாக்குதல் அமைந்திருந்தது என்பதை பின்பான தகவல்கள் மூலம் அறியமுடிந்தது. ஆளும் வர்க்கமும் அதன் பாதுகாவலனான அரசு இயந்திரத்தினது ஒருபகுதியான பொலிசும் அடக்கப்படும் மக்களை எவ்வாறு நடாத்தும் என்பதைதாழ்த்தப்பட்ட மக்கள் நேரடியாகவே கண்டு கொண்டனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையம் முன்பாக சாதியை தீண்டாமையை எதிர்த்தஊர்வலத்தின் கட்சித் தலைவர்களிள் தோழர்களின் தலைகளில் இருந்து இரத்தம்வழிந்தோடியது. தோழர்கள் கே.ஏ.சுப்பிரமணியம், வி.ஏ.கந்தசாமி, இ.கா.சூடாமணிஆகியோர் இரத்தம் சொட்டச்சொட்ட மேல் சட்டைகள் கிழிக்கப்பட்ட நிலையில்பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் செல்லபட்டனர். அடிகாயங்கள் பட்டநிலையிலும் கட்சி வாலிப இயக்கத் தோழர்கள் சிதறி பின்வாங்கி ஓடவில்லை. நானும் என்னைப் போன்ற இளம் தோழர்களும் கம்யூனிஸ்ட் ஆகிய பின்முதன்முதல் பொலிஸ் அடியும் காயமும் பெற்றுக் கொண்டமை அதுவாகவேஇருந்தது. அப்போது எனக்கு வயது 23. அவ்வேளை நான் கட்சியின் முழுநேரஊழியனாகிய ஆரம்ப வருடத்தில் வாலிபர் இயக்கத்தில் செயலாற்றிக்கொண்டிருந்தேன். அந்த அடியும் வலியும் எமக்கு புரட்சிகர உணர்வையும்மனவுறுதியையும் தந்துகொண்டது. நாங்கள் தொடர்ந்து ஊர்வலமாக யாழ் நகர்நோக்கிச் செல்வதை வற்புறுத்தினோம். பொலிஸ் அதிகாரிகள் கலைந்துசெல்லும்படி கூறினர். அதனை மறுத்த கட்சி வாலிப இயக்கத் தோழர்கள்அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீண்டும் ஒருதாக்குதலுக்கு பொலிசார் தயாராகினர். ஆனால் ஊர்வலம் செல்வதில்காட்டப்பட்ட மனவுறுதிக்கு முன்னால் பொலிசார் இறங்கிவர வேண்டியதாகவேஇருந்தது. முழக்கங்கள் இடாது யாழ் நகர் நோக்கிச் செல்ல அனுமதித்ததுடன்அதனை கண்காணிக்கவென பெருமளவு பொலிஸ் படையையும் முன்னுக்கும்பின்னுக்கும் பொலிஸ் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்குறிப்பிட்ட தூரம் சென்றதும் ஊர்வலத்தின் எண்ணிக்கை இரட்டைமடங்காகியது. யாழ்நகரை அண்மித்ததும் முழக்கங்களை ஊர்வலத்தில் வந்தமக்கள் இடத்தொடங்கினர். பொலிசாரால் அதனை தடுக்க முடியவில்லை. யாழ்முற்றவெளியில் கொட்டும் மழையிலும் பெருந்தொகையான மக்கள் திரண்டுகொண்டிருக்க பொதுக் கூட்டம் தோழர் டாக்டர்.சு.வே.சீனிவாசகம் தலைமையில்நடைபெற்றது. தோழர் சண்முகதாசன், கே.டானியல், சி.கா.செந்திவேல்ஆகியோர் உரையாற்றினர். தடுத்து வைக்கப்பட்ட மூன்று தோழர்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்குத் தொடர ஏற்பாடு செய்த சுன்னாகம் பொலிஸ் இரவு பத்துமணிக்குப் பின்னே அவர்களை விடுவித்தனர். அன்றைய கூட்டத்தில் தோழர் சண்சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிராக போராட தாழ்த்தப்பட்ட மக்கள்முன்வரவேண்டும் என்ற அறைகூவலை கட்சியின் சார்பாக விடுத்தார். இதுவரைகாலமும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் கொடுக்கும்அடிமைத்தன நிலையை கைவிட்டு அடித்தவனுக்கு திருப்பி அடிக்கும் புரட்சிகரநிலைப்பாட்டை தாழ்த்தப்பட்ட மக்கள் எடுக்க வேண்டும். அதற்கு எமது கட்சித்தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் வழங்கும் எனவும் கூறினர்.

அன்றைய ஒக்டோபர் 21 எழுச்சியானது வெறுமனே வாக்குச் சேகரிக்கும்பாராளுமன்ற நோக்குடையதாக அமைந்திருப்பின் அது வரலாற்றுமுக்கியத்துவத்தை பெற்றிருக்க முடியாது போயிருக்கும். ஆனால் தமிழ்மக்களிடையே எப்போதும் மூன்றில் ஒரு பங்கினராக வாழ்ந்து வந்ததாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வந்த சாதியத் தீண்டாமை கொடுமைகளுக்குஎதிரான புரட்சிகர எழுச்சியாக அமைந்தமையானது வரலாற்று திருப்புமுனையாகியது. அவ்வெழுச்சியைத் தொடர்ந்து குடாநாட்டின் பல பகுதிகளிலும்ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் கூட்டங்கள் இடம்பெற்றன. அவற்றில் எல்லாம்கட்சியும் வாலிப இயக்கமும் தெளிவான கொள்கைகளை மக்களுக்கு எடுத்துவிளக்கி வந்தது. கம்யூனிஸ்ட் கட்சியானது சாதிய தீண்டாமைக்கு எதிரானஇயக்கத்தையும் போராட்டத்தையும் வர்க்கப் போராட்ட கண்ணோட்டத்தில்அனுகியது. குறுகிய சாதியவாதக் கண்ணோட்டத்தில் நோக்கவில்லை. சிலகாலத்திற்கு முன்பு தமிழ் நாட்டின் தலித்தியவாதிகள் முன்வைத்த ~~தலித்துகள்மட்டுமே|| என்ற வாதம் அன்றைய சூழலில் குறுகிய சாதிவாதமாகவே கட்சிகண்டுகொண்டது. தமிழ் நாட்டு தலித்திய வாதிகள் தமக்குத் துணையாக தோழர்டானியலின் எழுத்துக்களை தமதாக்கவும் தமது முன்னோடி டானியலே என்றும்உரிமை கொண்டாடிக் கொண்டதையும் நினைவு கொள்ள வேண்டும். ஆனால்உண்மை என்னவெனில் தோழர் டானியல் அன்று தன்னையொரு குறுகியசாதிவாதியாக அன்றி வர்க்கப் போராட்டப் பாதையில் சாதியத்தை எதிர்த்தும்போராடும் பொதுவுடைமைப் போராளியாகவே நிலைப்படுத்தி வந்தார். அவர் ஒருபோதும் பின்வந்த தலித்திய நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்பவராகஇருக்கவில்லை என்ற உண்மை மறைக்கப்படுவது தமிழ் நாட்டு தலித்தியவாதிகளின் திட்டமிட்ட பரப்புரையாகும். டானியல் மீதான பல்வேறுவிமர்சனங்கள் இருந்துவந்த போதிலும் அவர் இறுதிவரை தன்னையொருபொதுவுடைமை வாதியாகவே வெளிப்படுத்தி வந்தார். அவர் 1966ம் ஆண்டுஒக்டோபர் 21 எழுச்சி ஊர்வலத்தில் பங்கு கொண்ட போது புரட்சிகரக்கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேசக் குழு உறுப்பினராக இருந்தார் என்பதேஉண்மை நிலையாகும். அவரது இளமைக்காலப் பொதுவாழ்வின் ஆரம்பம்கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டதன் மூலமும் கட்சியின் முழுநேரஊழியனாகச் சில காலம் செயல்பட்டதன் வாயிலாகவும் அவர்பெற்றஅனுபவங்கள் அதிகமானதாகும் அதனால் அவர் மாக்சிச உலகக்கண்ணோட்டத்தை ஒரு போதும் தலித்தியத்திற்கு அடகு வைக்காதவராகவாழ்ந்தார் என்பதே உண்மையாகும். அத்தகைய தோழர் டானியலை தமிழகத்து - புலம்பெயர்ந்த தலித்திய வாதிகள் எனக் கூறப்படுவோர் தமது குறுகியசிமிளுக்குள் அடைக்க முற்படுவது நேர்மையீனமாகும். உட்கட்சிவிவாதங்களிலும் வெளிவெளியான கருத்து மோதல்களிலும் ஈடுபட்டநேர்மையான எவரும் டானியல் மீதான விமர்சனங்களுக்கு அப்பால் அவரதுசாதியத்திற்கு எதிரான பொதுவுடைமைக் கண்ணோட்ட நிலைப்பாட்டையும்போராட்டப் பங்களிப்பையும் குறைத்து மதிக்கிடவோ மாட்டார்கள்.

ஒக்டோபர் 21 எழுச்சியின் தொடர்ச்சியான பிரசார இயக்கங்கள் ஆங்காங்கேநடைமுறைப் போராட்டங்களாக வெடிக்க ஆரம்பித்தன. அவை தேனீர்கடைப்பிரவேசமாகவும் சமத்துவ வழிபாட்டிற்கான ஆலய பிரவேசமாகவும்முன்சென்றன. இப்போராட்டங்களில் அந்தந்த ஊர் தாழ்த்தப்பட்ட மக்களேமுன்னின்றனர். வெளியிலிருந்து வந்து அவ்வாறான போராட்டங்களில்பங்குகொள்வது ஆதரவான நிலைப்பாடாக கருதப்பட்டதேயன்றிபிரதானமாக்கப்படவில்லை. சில இடங்களில் மக்கள் இளைஞர்களின்உணர்வையும் பலத்தையும் கண்டு சாதிவெறியர்கள் பின்வாங்கினர். ஆனால்சங்கானையில் தேனீர்க்கடை பிரவேசத்தின் போது கடும் வாக்குவாதம்ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சாதி வெறியர்களும் பொலிசாரும் சேர்ந்துநிச்சாமம் கிராமத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர். அதிலிருந்து போராட்டம்வீறுபெற்றதுடன் வடபுலம் பூராகவும் அப்போராட்டத்தின் பொறிகள் வீழ்ந்துகாட்டுத்தீ போன்று பரவத் தொடங்கியது. அப்போது மக்கள் மட்டுமே வரலாற்றின்உந்து சக்தி என்ற உண்மையும் தாழ்த்தப்பட்ட மக்களிடையேயான போர்க்குணமும் வெளிப்பட்ட சூழல் உருவாகியது.

இக்கட்டத்திலேயே புரட்சிகர கட்சியானது சாதியத் தீண்டாமைக்கு எதிரானபோராட்டத்தை உறுதியாகவும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காகவும் உரியகொள்கையை தந்திரோபாயங்களை மேலும் வகுத்து முன்னெடுத்தது. தாழ்த்தப்பட்ட மக்களும் அவர்கள் மத்தியிலான கம்யூனிஸ்ட்டுகள் வாலிபர்கள்என்போர் அடிப்படைப் போராட்ட சக்திகளாக அமைப்பு வாயிலாகஅணிதிரட்டப்பட்டனர். அடுத்து அதற்கு ஆதரவாக அணிதிரளக் கூடிய மனித நேயநல்லெண்ணம் கொண்ட அனைவரும் ஜனநாயக சக்திகளாக அடையாளம்காணப்பட்டனர். அவர்களில் உயர் சாதியினர் என்றழைக்கப்பட்டோர், முஸ்லிம்முற்போக்கு சக்திகள், சிங்கள இடதுசாரிகள் என்போர் இருந்தனர். எனவே ஒருபரந்து பட்ட ஐக்கிய முன்னணியும் அதற்கான அமைப்பும் தேவைப்பட்டது. காலத்தின் தேவையாக அமைந்த இவ்வமைப்பாகவே தீண்டாமை ஒழிப்புவெகுஜன இயக்கம் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியால் தோற்றுவிக்கப்பட்டது. அதன் முதல் மாநாடு 1967ம் ஆண்டு யாழ் மாநகரசபை மண்டபத்தில் ஒக்டோபர்எழுச்சியின் முதலாவது போராட்டத் தியாகியாகிய சின்னர் கார்த்திகேசுஅரங்கில் இடம்பெற்றது. அம்மாநாட்டிலேயே தோழர் எஸ்.ரி.என் நாகரட்ணம்தலைவராகவும் தோழர் கே.டானியல் அமைப்பாளராகவும் எம்.சின்னையா, சி.கணேசன் இணைச் செயலாளர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். தோழர்களான (மான்).ந.முத்தையா, டாக்டர்.சு.வே.சீனிவாசகம், கே.ஏ.சுப்பிரமணியம் ஆகியோர் உப தலைவர்களாகத் தெரிவாகினர். இவ்வாறுதோற்றம்பெற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தில் கம்யூனிஸ்ட்களும்அல்லாதோரும் உயர் சாதியினரில் உள்ள ஜனநாயக சக்திகளும் அணிதிரண்டுஇருந்தனர். இத்தகைய நிலை முன்பிருந்து வந்த சாதிய அடையாளச் சங்கமுறைமைகளுக்கு அப்பாலான காலத்தின் வளர்ச்சிக்கும் தேவைக்குரியதுமானஒரு வலுவான ஐக்கிய முன்னணி அமைப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமானது புரட்சிகர கம்யூனிஸ்ட்கட்சியின் தலைமைத்;துவ வழிகாட்டலை ஏற்று செயல்பட்ட ஒரு போராட்டஐக்கிய முன்னணி அமைப்பே யாகும். அதன் தலைவராகப் பொறுப்பேற்ற தோழர்எஸ்.ரி.என் நாகரட்ணம் கட்சி உறுப்பினராக இருக்கவில்லை. அவர்இளவயதிலிருந்தே சாதிய ஒடுக்குமுறை அனுபவத்தால் கம்யூனிஸ்ட்ஆதரவாளராகவே இருந்து வந்தார். அவரது வியாபாரத் தொழில் மூலம் கட்சிக்குநிதிப்பங்களிப்பும் வழங்கி வந்தார். 1964ல் கட்சி பிளவுபட்டவேளை அவர்நடுநிலையில் இருந்தும் வந்தார் அவர் அந்நிலையைக் கடந்து 1966 ஒக்ரோபர்எழுச்சி ஊர்வலத்தில் முதல் தடவையாக கொண்டார். அவரது நேர்மைஅர்பணிப்பு உறுதி என்பன வற்றை அக்காலத்தில் அவருடன் நெருக்கமாகப்பழகியவர்களில் ஒருவனாக இருந்த காரணத்தால் நேரில் காணமுடிந்தது. தோழர் எஸ்.ரி. என். உடனான நினைவுகள் இன்றும் பசுமையானவையாகும். ஆனால் கட்சி வழிகாட்டலை ஏற்று உறுதியுடனும் விட்டுக் கொடுக்காமலும்போராட்டக் களத்தில் நேர்மையாகவும் தலைமை தாங்கிய தோழர் ஆவார். அவரது தலைமைப் பாத்திரம் அன்றைய போராட்டச் சூழலில் மிகப்பெறுமதிவாய்ந்ததாக அமைந்திருந்தது. அவ்வாறே கட்சியல்லாத ஏனையவெகுஜன இயக்கத் தலைமைத் தோழர்களும் இருந்து வந்தனர். சங்கானை, சாவகச்சேரி, கொடிகாமம், அச்சுவேலி, உரும்பிராய், கரவெட்டி, கன்பொலவைமற்றும் சிறு சிறு நகரங்களின் தேனீர்க்கடைகளில் உணவகங்களில்சமத்துவத்திற்கான போராட்டங்கள் இடம்பெற்றன. இவற்றில் சங்கானை - நிச்சாமத்தில் மூன்று பேரும், கரவெட்டி - கன்பொல்லையில் ஒரே நேரத்தில்மூன்று பேரும,; கரவெட்டி கிழக்கில் ஒருவரும,; சண்டிலிப்பாயில் ஒருவரும், அச்சுவேலியில் ஒருவரும், போராட்டத்தின் போது நேரடித் தியாகியாகினர். இவற்றுக்கும் அப்பால் ஐந்து பேர்வரை ஆங்காங்கே சாதிவெறியர்களின்தாக்குதலுக்குப் பலியாகினர். அவ்வாறே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்பிரசித்திபெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் பன்றித்தலைச்சி அம்மன்கோவில் ஆகிய இருபெரும் ஆலயங்களில் மூன்று வருட திருவிழாக்களின்போது ஆலயப் பிரவேசப் போராட்டங்களை முன்னெடுத்தது. அங்கே சாத்வீகவழிமுறைகளும் தேவைப்பட்ட சந்தர்ப்பங்களில் பலாத்கார நடைமுறைகளும்தாழ்த்தப்பட்ட மக்களால் பின்பற்றப்பட்டன. இத்தகைய வெகுஜனப்போராட்டங்களால் இறுதியில் ஆலயக் கதவுகள் திறக்கப்பட்டன. அதன்எதிரொலியாக செல்வச் சந்நிதி கோவில், வல்லிபுர ஆழ்வார் கோவில் உட்படஆங்காங்கே பல கோவில்களின் கதவுகள் கடும் போராட்ட அழுத்தங்களின்ஊடாகத் திறந்து வைக்கப்பட்டன. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்நேரடியாகத் தலையிடாமலே குடாநாட்டின் பல தேநீர் கடைகள் உணவங்கள்ஆலயங்கள் தாழ்த்தப்பட்ட மக்களது சமத்துவத்திற்கு திறந்து விடப்பட்டன. அதுபோராட்டத்தின் பிரதிபலிப்புகளேயாகும்.

கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை வெகுஜன இயக்கமும் 1966ம் ஆண்டுஒக்டோபர் 21 எழுச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்த போராட்டங்கள் தேநீர்க்கடைகள் உணவகங்கள் ஆலயங்களின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கானசமத்துவத்தையும் ஜனநாயக மனித உரிமையையும் வென்று கொடுத்தனர். இவைமுதல் 1971 காலப்பகுதியில் இடம்பெற்றவையாகும். ஆனால் அதற்குமுன்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் சாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்குஎதிராகப் போராட்டங்களோ உரிமைக் கோரிக்கைகளோ இடம்பெறவில்லைஎன்று கூறுவது வரலாற்றை மறுப்பதும் இடம்பெற்ற உண்மைகளை மறைப்பதும்ஆகும். 1920களில் ஆரம்பித்து 30கள் வரை இயங்கி வந்த யாழ்ப்பாண மாணவர் - வாலிப காங்கிரஸ் காலத்தில் சாதிய தீண்டாமைக்கு எதிரான கருத்துக்கள்முன்வைக்கப்பட்டு சமத்துவத்திற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்குமுன்பும் சிறு சிறு அமைப்புகள் தனிநபர்கள் சாதியத்திற்கு எதிராகத் துணிவுடன்எதிர்த்து செயலாற்றி வந்திருக்கின்றனர். ஒவ்வொரு கிராமங்களிலும்தனிநபர்கள் மற்றும் ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் இருந்து வந்தன. அதன் பின்பு 40 களில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை கடும் முயற்சிகளையும்இயக்கங்களையும் தாழ்;த்தப்பட்ட மக்கள் சார்பாக முன்னெடுத்து வந்தன யாழ். நகரத் தேநீர்க் கடைகளிலும் நல்லூர்க் கந்தசாமி கோவில், வண்ணை சிவன்கோவில் போன்றவற்றில் சமத்துவம் பெறப்பட்டமை மகாசபைகாலத்திலேயாகும். அவ்வேளையிலும் கூட பிளவுபடாத கம்யூனிஸ்ட்கட்சியானது மகாசபைக்குப் உறுதியான பின்புலமாக இருந்து வந்தது. மகாசபையின் தலைவராக இருந்து கடுமையாகப் பணிபுரிந்தஎம்.சி.சுப்பிரமணியம் வடபுலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை தோழர்மு.கார்த்திகேசனுடன் இணைந்து கட்டியெழுப்பிய முன்னோடிகளில் ஒருவராகஇருந்தவர். அந்நாட்களில் அவரது பணியும் பங்களிப்பும் மிகக்கனதியானவைகளாகவே இருந்தும் வந்தன ஆனால் 1964ம் ஆண்டின் பின்பானபழைய கம்யூனிஸ்ட் கட்சியானது பாராளுமன்ற பாதையில் வழிநடக்கஆரம்பித்ததுடன் எம்.சியும் அதன் வழியில் செயற்பட்டு தனது முன்னையபங்களிப்பைக் கூட களங்கப்படுத்திக் கொண்டார். இருப்பினும் அவரதுமுன்னைய சமூகப் பங்களிப்பை பின்னைய செயற்பாட்டிற்காக எவரும்மறுக்கவியலாது. அதேபோன்று பின்னைய செயற்பாட்டை நியாயப்படுத்தவும்முடியாது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பான சாதிய தீண்டாமைக்கு எதிரானமுன்னைய இயக்கங்கள் போராட்டங்கள் சாதித்தவைகளை விட 1966ம் ஆண்டுஒக்டோபர் 21 எழுச்சி தோற்றுவித்த சுமார் 5 வருடகாலப் போராட்டங்கள்சாதித்தவை தமிழ்ச் சூழலில் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவையாகும். அது ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஆண்டாண்டு கால அடிமைத்தனவாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொண்டது. அதன்அடிப்படையாக அமைந்த காரணி போராட்டத்திற்கான தெளிவுள்ளகொள்கையையும் போராட்ட தந்திரோபாயங்களும் ஆகும். வெகுஜனஎழுச்சிகளையும் மக்கள் பங்குபற்றுதலையும் முதன்மைப்படுத்தி நின்றமைமுக்கியமானதொரு நிலைப்பாடாகும். யாருக்கு சமத்துவம், ஜனநாயகம், மனிதஉரிமை வேண்டியதோ அதே தாழ்த்தப்பட்ட மக்கள் அணிதிரட்டப்பட்டனர். ஐக்கியப்படுத்தப்பட்டு அவர்களே போராட்டத்தில் நடுநாயகமாக ஆக்கப்பட்டனர். அதனால் பரந்து பட்ட போராட்டமாகியது. அதில் இளைஞர்களின் பாத்திரம்முக்கியமானதாக இருந்த போதிலும் அவர்கள் கட்சி வெகுஜன இயக்கம் வாலிபர்இயக்கம் என்பனவற்றின் கொள்கை வழிப்பட்ட கட்டுப்பாட்டுக்குள்ளேயேஇருந்தனர். அத்துடன் ஆயுதங்கள் கையாளப்பட்டமை முக்கிய நடவடிக்கையாஅமைந்தன. அதனால் வெகுஜனப் போராட்டங்கள் சட்ட ரீதியானவையாகவும்சட்டமறுப்பானவையாகவும் விளங்கின. இதனால் பொலீஸ் அடக்குமுறைகளுக்கு மக்கள் முகம் கொடுத்து நின்றனர். பொலீஸ் நிலையங்களில்கடும் சித்திரவதைகளை அனுபவித்தனர். நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டனர். இத்தகைய நடவடிக்கைகளால் அன்றைய போராட்டங்களை முறியடிக்கஆயுதங்கள் முடியவில்லை. தேவையின் பொருட்டு பயன்படுத்தப்பட்டபோதிலும் அவை கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டதாக இருந்தது. எந்தவொருகொள்கையும் போராட்டமும் மேலிருந்தோ அன்றி வெளியிலிருந்தோதிணிக்கப்படக் கூடியவையல்ல என்பதையும் அப்படி திணிக்கப்பட்டால் அவைவெற்றிபெற முடியாதவையாகி விடும் என்பதையும் தாழ்த்தப்பட்ட மக்கள்முன்னெடுத்த அன்றைய போராட்டங்கள் எடுத்துக் காட்டின. சில தலித்தியவாதிகள் கூற முற்படுவது போன்று அன்றைய போராட்டங்கள் குறுகியசாதிவாதப் போராட்டமாக இருக்கவில்லை. அதன் பரப்பும் பங்குபற்றியவர்களின்பங்களிப்பும் மிகப் பரந்ததொன்றாகும். ஜனநாயக நல்லெண்ணம் கொண்டஉயர்சாதியினர், எனப்பட்டவர்கள் முஸ்லிம் மக்கள் - இளைஞர்கள், சிங்களமக்கள் அவர்களுக்கிடையிலான புத்திஜீவிகள் என்போர் ஆதரவளித்துபங்கெடுத்தனர்.

அன்றைய ஒக்டோபர் 21 எழுச்சியும் அதன் பாதையில் முன்னெடுக்கப்பட்டபோராட்டங்களும் ஆண்டாண்டு காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த சாதியஅடக்குமுறைமைகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் பெருமளவிற்குஉடைத்தெறிந்து கொண்டது. அதற்காக வகுக்கப்பட்ட கொள்கைகளும் போராட்டதந்திரோபாயங்களும் தமிழர்களின் சமூகச் சூழலின் யதார்;த்தங்களில் இருந்தேஉருவாக்கப்பட்டன. இந்திய சூழல்களிலிருந்தோ அல்லது அந்நிய ஆதரவுவேண்டியோ அன்றைய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பதுஆழ்ந்து நோக்கத்தக்கதாகும். வெறும் சொல்லாடல்களையும் வீரதீரவசனங்களையும் அல்லது யதார்த்த நிலைமைகளுக்கு அப்பாலானநடைமுறைகளை கைக்கொண்டு அன்றைய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவனத்திற்கு உரியதாகும். அதனாலேயே தாழ்த்தப்பட்ட மக்கள்தமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளையும் நிராகரிப்பட்ட சமூக நீதியினையும்வென்றெடுக்க முடிந்தது. அதனால் அவர்களது ஒட்டுமொத்த சமூக அந்தஸ்துஉரிய சமத்துவ இடத்தையும் அடைய நேரிட்டது. தமிழ்த் தேசிய இனம் என்றுபெயரளவில் தானும் தமிழ்த் தேசியவாதிகள் கூறிக் கொள்ளக் கூடிய அளவிற்குஒரு ஐக்கியத் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்ட சூழல் ஒக்ரோபர் 21 எழுச்சியின்மூலமே உருவாகியது. அதே பாதையில் புதிய சமூக வளர்ச்சிக்கேற்பதொடர்ந்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் சமகால யதார்த்தங்களின் ஊடே புரட்சிகரவெகுஜனப் போராட்ட இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.

தமிழ்;த் தேசிய வாதம் முன்னெடுத்த மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டங்களால் சாதியத்தை மறைக்க முடிந்ததே தவிர அதன் தீவிரத்தையோஅடிவேர்களை அறுக்கவோ முடியவில்லை. இப்போது இந்தியச் சூழலில்காணப்படும் தலித்தியம் என்பதனை இலங்கையில் திணிக்கச் சிலர்முற்படுகின்றனர். ஒரு கொள்கையாக கோட்பாடாக வளர முடியாத தலித்தியம்இந்தியாவில் வாக்குகள் பெறும் பாராளுமன்ற அரசியலுக்கும் பதவிகள்பெறுவதற்கும் அதற்கும் அப்பால் பணம் சேகரிப்பதற்கும் பயன்பட்ட அளவிற்குஇந்தியத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பயன்படவில்லை என்பதே பொதுவானகருத்தாகி வருகின்றது. குறிப்பாகத் தமிழ் நாட்டில் தலித்தியவாதிகள் என்போரின்சீரழிவு மோசமாகி வருவதைக் காணமுடியும். அதே வேளை வர்க்கப் போராட்டஅடிப்படையில் மாக்சிச லெனினிச சக்திகள் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வோடுஇணைந்த போராட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் அவற்றில்வெற்றிகளையும் கண்டு வருகிறார்கள். அவை பிற குறிப்பான மாநிலங்களில்தீவிர வர்க்கப் போராட்ட வடிவங்களைப் பெற்று வருவதையும்அவதானிக்கலாம். அதே நேரம் தலித் என்ற சொல்லாடலையும் தலித்தியம் என்றசீரழிந்த நடைமுறைகளையும் இலங்கையில் திணிப்பதற்குஎத்தனிக்கப்படுகிறது. இந்தியச் சூழலுக்கு பொருந்தக் கூடியதாக இருக்கும்எதையும் இலங்கை மீது திணிப்பது மிகத் தவறானதாகும். இது பிரதிபண்ணும்போக்கேயன்றி வேறுபட்ட சூழலின் யதார்த்தங்களைப் புரிந்து செயற்படுவதற்குஉரிய ஒன்றல்ல.

எனவே 1966 ஒக்டோபர் எழுச்சியும் அதன் பாதையிலான புரட்சிகரப்போராட்டங்களும் செழுமைமிக்க வரலாற்று அனுபவங்களைகொண்டவையாகும். அவற்றிலிருந்து தோல்வியை தழுவியுள்ள தமிழ்த்தேசியவாதப் போராட்டத்தை முன்னெடுத்த அனைத்துத் தரப்பினருமேபடிப்பதற்கு நிறையவே உண்டு. ஆனால் இத்தனை அழிவுகளுக்குப் பின்பும்அந்தப் பக்கத்தைப் பார்ப்பதற்கு எந்தவொரு தமிழ்த் தேசியவாத தலைமையும்தயாராகவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் தெளிவானவையாகவுள்ளன. ஒன்று, ஒக்டோபர் 21 எழுச்சியானது இடதுசாரி நிலைப்பாட்டில்முன்னெடுக்கப்பட்டதாகும். இரண்டாவது, தமிழர்கள் மத்தியில் உள்ளதாழ்த்தப்பட்ட மக்கள் தமது சொந்தக் கால்களில் நின்று தமது சொந்தத்தலைவிதியை தாமே தீர்மானித்து முன்னெடுக்கப்பட்டதாகும். இவ்விரண்டுகொள்கை நிலைப்பாடுகளும் பழமைவாதத்தின் சகல கூறுகளையும்உள்வாங்கிய தமிழ்த் தேசியவாத சக்திகளுக்கு அரசியல் தீண்டாமையே ஆகும். அரசியலில் அவர்கள் கடைப்பிடித்து வரும் இத் தீண்டாமையை கடக்காதவரைஇலங்கையிலும் அல்லது புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த்தேசிய வாதத்தைமுன்னெடுக்கும் எத்தகைய தலைமைகளாலும் முன்செல்ல முடியாது. அவர்களுக்கு அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைப்பதைத் தவிர வேறுவழியில்லை. அதன் மூலம் பழைமைவாத பிற்போக்கிற்கும் ஏகாதிபத்தியசக்திகளுக்கும் சேவை செய்ய மட்டுமே முடியும். தமிழ் மக்களுக்கு எவ்விதவிமோசனத்தையும் கொண்டுவர மாட்டாது.

ஒக்டோபர் 21 எழுச்சிக்குத் தலைமை தாங்கியவர்களில் ஓரிருவரைத் தவிரஏனையோர் மறைந்துவிட்டனர். அதே போன்று போராட்டக் களங்களில்முன்னின்ற போராளிகளில் குறிப்பிடத் தக்கவர்களே இன்றும் உயிருடன்இருக்கின்றனர். ஏனையோர் மறைத்து விட்டனர். மறைந்த அம்மானிடவிடுதலைப் போராளிகளுக்கு இவ்வேளை நாம் தலைவணங்கி அஞ்சலி நினைவுகொள்கின்றோம். உள்நாட்டிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தோல்வி அவலம்தழுவிய நிலையில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் குறிப்பாகஇளந்தலைமுறையினர் இவ் வெகுஜன எழுச்சியின் ஊடே சமகாலச்சூழலுக்குரியவற்றை கற்றுக் கொள்வது பயன் தருவதாகும்.

இனி இதழ் ஐந்திலிருந்து


Wednesday, February 24, 2010


Interview with Ameena Hussein
-by Sanjana Hattotuwa-

Ameena Hussein is one of Sri Lanka’s best known English authors. She is also one half of the Perera Hussein Publishing House, that since 2003 has published some of the best new English writing in the country. The Moon in the Water, Ameena’s first novel, was long-listed for the first Man Asian Literary Award in 2009. Zillij, a collection of short stories I reviewed four years ago, won the State Literary Prize in 2003.

Our discussion touched on Ameena’s tryst with cancer and how this influenced her writing and outlook on life. We also talked about English literature in general, and the quality of contemporary English fiction in Sri Lanka. Ameena also talked about identity, gender and violence – both in and through her fiction and their manifestations in the real world. We spoke at some length on the politics of representation and the contested space for women in Islam, harking back to two articles on Groundviews published last year in a similar vein - Hijab whereforth dost thou commeth? by Nazeeya Faarooq and The Hijab unveiled – a response to Nazeeya Faarooq by Aufidius.

Ameena herself has written cogently on religion, gender and identity in Islam and We, an article in quote from in the interview. As she notes in this short article,

As a Sri Lankan Muslim supposedly descended from Arab traders who married Sinhalese and Tamil women, as a Muslim whose descendents have lived in Sri Lanka for more than ten generations, I want to talk about the limitations of being a Muslim. I want to talk about apostasy. I want to talk about the spiritual inequality of non-Muslims in Islam, I want to talk about interpretation, I want to talk about re-birth. As a Muslim woman I want to talk about gender, inheritance, marriage, female circumcision, sexuality, and polygyny. I want to talk about freedom and free will, and equality.

But I have no space.


The Interview III - Ameena Hussein from Young Asia Television on Vimeo.

Saturday, February 20, 2010


வங்கம் தந்த சிங்கம்!
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு-
வங்கம் தந்த சிங்கம்: ஜோதி பாசு['தோழரே, உங்கள் உடலுக்கு மட்டும் விடை தருகிறோம்' என்னும் தலைப்பில் அண்மையில் ம்றைந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதி பாசு பற்றித் 'தடாகம்.காம்' இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் மீள்பிரசுரமிது.] உலகினை புரிந்துக்கொள்வதற்கும் அதன் சூட்சுமங்களான தத்துவங்களை மக்களிடம் விளக்குவதற்கும் இறு வேறு தன்மைகள் உள்ளன என்று மனித குலம் நீண்ட நாள் நம்பி வந்தது. சாதாரண மனிதர்களால் உலகின் சூட்சுமங்களை அதன் அடிப்படையான தத்துவங்களை புரிந்துக்கொள்ள இயலாது என்றே பல தத்துவஞானிகள் நம்பினர், அவ்வாரே செயல்பட்டனர். ஆனால் கார்ல்மார்க்ஸ் மட்டுமே முதன் முதலாக அந்த வரட்டு நம்பிக்கையை உடைத்தெரிந்து, மக்கள் வாழ்நிலையை சார்ந்தே உலகின் சூட்சுமங்கள் என்று நம்பப்படுகிற தத்துவங்கள் இயங்கமுடியும் என்று நிருபணம் செய்தார். எந்த ஒரு தத்துவமும் சூன்யத்திலிருந்து பிறப்பதில்லை அது மக்கள் வாழ்நிலையை அதாவது பொருள் வயப்பட்ட வாழ்க்கையிலிருந்தே பிறக்கிறது என்பதை விஞ்ஞான அடிப்படையில் நிரூபணம் செய்தார்.

அந்த தத்துவர்த்த அறிவியல் நிரூபணங்களை முதலாய் கொண்டே லெனின், மாவோ, பிடல்காஸ்ட்ரோ, ஹோ-சி-மின் போன்றோர்களால் ஒரு புதுமையான, உழைக்கும் மக்களை முன்னணிப் படையாக கொண்ட ஆட்சிகளை வென்றெடுக்க முடிந்தது. மார்க்சியத்தை முன்னேறிய அறிவியல் துணையிடனும், நடைமுறை போராட்டத்துடனும் மேலும் வளர்த்தெடுத்தார் மாமேதை லெனின். நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பாராளுமன்றத்தை புரட்சிக்கான பாதையில் பயன்படுத்துவது குறித்து அவரால் சிறந்த வழிகாட்டுதல்களை செய்யமுடிந்தது.

இந்தியா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட நாட்டில், வர்க்க அணிதிரட்டலுக்கு தடையாய், ஆயிரக்கணக்கான சாதிகள் உள்ள நாட்டில் நினைத்த மாத்திரத்தில் ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் மாற்றத்தை உருவாகிட முடியாது. அப்படி நினைப்பதும் நடப்பது மார்க்சிய மயக்கநிலை அல்லது வரட்டு சூத்திரம். "மாவோ பாதையே எங்கள் பாதை" போன்ற அறைவேக்காட்டுதனமான கோஷங்கள் பிறந்தது இந்த மயக்க நிலையால்தான். ஆனால் இந்தியாவில் முற்போக்கு அரசியலுக்கு மக்களை திரட்டும் அதே நேரத்தில், இடையில் பூர்ஷ்வா பாராளுமன்றத்தை, சட்டமன்றத்தை மக்கள் நலன் பயக்கும் மன்றமாக ஏன் பயன்படுத்தக்கூடாது? உழைக்கும் மக்கள் தத்துவமான மார்க்சியத்தை இந்தியா போன்றதொரு நாட்டில் கிடைக்கின்ற வாய்ப்பை வைத்து மக்களிடம் எப்படி கொண்டு செல்வது? இந்த கேள்விக்கு இந்தியாவில் வெற்றிகரமாக பதில் அளித்த கம்யூனிஸ இயக்கத்தின் தளகர்த்தாகளில் இ.எம்.எஸ் சும், ஜோதிபாசுவும் முக்கிய தலைவர் ஆவார்கள். இந்த பின்னணியில் தோழர் ஜோதிபாசுவின் பங்களிப்பை பார்பதுதான் அவரது பிரமாண்டமான ஆளுமையை புரிந்துக்கொள்ள உதவும்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடிநாதமாக திகழ்ந்த தோழர் ஜோதிபாசு. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற விவசாயிகளின் உரிமை கேட்ட போராட்டமான தோ - பாகா இயக்கத்தில், தேசப்பிரிவினை காலகட்டத்தில் மதவெறி கலவரத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், 1959 -ம் ஆண்டு பட்டினியால் வாடும் மக்களை பாதுகாக்க நடைபெற்ற மகத்தான உணவு இயக்கத்தில், 1960 -களில் நடைபெற்ற நிலப் போராட்டங்களில், அவசரநிலை பிரகடணத்தை இந்திரா காந்தி அமலாக்கிய அரைப் பாசிச பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரிக்க முடியாத தலைவராக, மக்கள் ஊழியராக திகழ்ந்தார். அவரது தலைமையில் அந்த மாநில மார்க்ஸிட் கட்சி மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடித்தது. அதானால்தான் 1977க்கு பிறகு மதக்கலவரம் நடக்காத மாநிலமாக மேற்குவங்கம் திகழ்கிறது. 1984ல் இந்திரா காந்தியின் படுகொலையை தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கிய மக்கள் வேட்டையாடப்பட்ட போது மேற்குவங்கத்தில் அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர். தோழர் ஜோதிபாசுவின் குறிப் பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்று, சட்டமன்றப் பணியை சட்டமன்றத்திற்கு வெளியில் உள்ள மக்கள் இயக்கங்களேடும், தொழிலாளர் போராட்டங்களேடும் ஒருங்கிணைத்தது.

1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட போது மேற்கு வங்கத்தில் பிரமோத் தாஸ் குப்தாவுடன் இணைந்து மிகச் சரியான உத்திகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி கட்சியை மாபெரும் சக்தியாக வளர்ப்பதில் மிக முக்கியப் பங்காற்றினார். கட்சியின் அரசியல் பிரச்சாரங்களில், வெகுமக்கள் இயக்கங்களில், சட்டமன்றத்தில் தோழர் ஜோதிபாசு மகத்தான தலைமைப் பாத்திரத்தை வகித்தார். 1964-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 9 உறுப்பினர் கொண்ட கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழுவில் கடைசியாக உயிர் வாழ்ந்த தலைவர் ஜோதிபாசு இப்போது இல்லை.

1946இல் மாகாண சட்டசபைத் தேர்தலில் தோழர் ஜோதிபாசுவின் சட்டமன்றப் பிரவேசம் நிகழ்ந்தது. தான் விரும்புகின்ற வரை வெல்ல முடியாதவராக அல்லது மக்களால் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுபவாராக அவர் இருந்தார். அப்போது முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கும், மேம்படுத்து வதற்கும், சட்டமன்றத்திற்கு வெளியே நடக்கும் இயக்கங்களை வலுப்படுத்து வதற்கும் சீரிய முறையில் பயன்படுத்தினார். இரண்டுமுறை அவர் துனை முதல்வராக பணியாற்றினார். 1967 - 70ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் ஐக்கிய முன்னணி அரசில் உள்துறை அமைச்சராக இருந்த சமயத்தில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களில் காவல்துறை தலையிடுவதை அவர் அனுமதிக்கவில்லை. வங்கத்தில் தீவிரமடைந்த நிலப்போராட்டத்தின்போது, பினாமி நிலங்களை கண்டறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளும் விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசு குறுக்கே நிற்காது என்று ஜோதிபாசு அறிவித்தார்.

1977 ஜூன் 21, சரியாக காலை 10.30 மணிக்கு முதலாவது இடது முன்னணி அரசின் அமைச்சரவை பதவியேற்றது. அதன் முதல்வராக தோழர் ஜோதிபாசு பதவியேற்றார். அந்த நிலையை அவர் இப்படி விளக்குகிறார்

"என்னைத்தவிர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ணபாத கோஷ், டாக்டர் அசோக் மித்ரா, பார்வர்ட் பிளாக் சார்பில் கனய் பட்டாச்சார்யா, ஆர்எஸ்பி சார்பில் ஜதின் சக்ரவர்த்தி ஆகியோர் அன்று பதவி ஏற்றனர். மேலும் 16 அமைச்சர்கள் ஜூன் 23ஆம் தேதியன்று பதவி ஏற்றார்கள். மேலும் 7 பேர் பின்னர் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். புதிய அரசாங்கம் மேற்கொண்ட முதல் முடிவு, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது என்பதுதான். அமைச்சரவை பொறுப்பு களை விநியோகிப்பதில் அனுபவத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.

ஒரு சிலரின் நலன்களுக்கு ஏற்ற வகையிலேயே இப்போதுள்ள சட்டங்கள் அனைத்தும் அமைந்திருந்த நிலையில், எங்களுக்கு முன்னால் கடுமையான நேரம்தான் காத்திருந்தது. மாநில அரசிற்கும் மிகக்குறைந்த அதிகாரமே இருந்தது. இவற்றிலும்கூட மத்திய அரசின் தலையீடு இருந்தது. முந்தைய அரசு பறித்த உரிமைகளை மீண்டும் மக்களுக்கு வழங்குவதுதான் எங்களது முதல் கடமையாக இருந்தது.

இதற்கு முந்தைய ஐக்கிய முன்னணி அரசுகளைப் போல இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவே, பதவியிலிருந்து இறக்கவே முடியாது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். முதலாவதாக, முந்தைய காலங்களை ஒப்பிடும்போது இந்த முறை எங்களது வலிமை பெரிதாக இருந்தது. அடுத்து, இந்த முறை இடதுமுன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே ஒற்றுமையும் அதிகமாக இருந்தது. மக்களும் எங்களேடு இருந்தார் கள். எனவேதான் தலைமைச் செயலகத்திலி ருந்து மட்டுமே ஆட்சி செய்ய மாட்டோம் என்ற கோஷத்தை நாங்கள் எழுப்பினோம்".

- இடதுமுன்னணியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்த 36 அம்சங்களில் 21 திட்டங்களை அவர்களால் அமல்படுத்த முடிந்தது. மீத மிருந்தவை ஓரளவிற்கு நடைமுறைப்படுத் தப்பட்டது. நிலச்சீர்திருத்தம்தான் அவர்களது முன்னுரிமை திட்டமாக இருந்தது. குத்தகைதாரர்களை பதிவு செய்யும் இயக்கம் தீவிரமாக நடத்தப்பட்டது.

- விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக்கூலியும் நிர்ணயிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் கொத்தடிமை முறையானது கடுமையான வகையில் நசுக்கி ஒழிக்கப்பட்டது.

- காங்கிரஸ், நக்சலைட் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 1700 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 10,000 வழக்குகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. அரசியல் அமைப்புச்சட்டம் 311(2) சி பிரிவின் கீழ் வேலைநீக்கம் செய்யப்பட்டோர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

- இடது முன்னணி அரசானது ஜனநாயக உரிமைகளை மீண்டும் மாநிலத்திற்கு அளித்தது மட்டுமின்றி, அதை வலுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டது.

- தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமை வழங்கப்பட்டதோடு, நியாயமான காரணங்களுக்காக தொழிலாளர்கள் மேற்கொள்ளும் எந்தவெரு வேலை நிறுத்தத்தையும் அடக்கி ஒடுக்க போலீஸ் அனுப்பப்படாது என்று அறிவித்தனர். போலீஸ்காரர்களும் தங்களுக்கான சங்கம் உருவாக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

- நீண்ட நாட்களாகவே சுயாட்சி பெற்ற அமைப்புகளுக்கும் நகராட்சிகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதையும் செயல்படுத்தினர். மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையை அறிமுகப்படுத்தி, அதிகாரத்தை பரவலாக்குவதற்கான சரியான திசைவழியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

- 1978 ஜூன் 4ஆம் தேதியன்று பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. மொத்தம் 55,952 மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்கள் சரியான நேரத்தில் திரண்டெழுந்தனர். கிராமங்களின் தோற்றமும் மாற்றத்தை நோக்கிச் சென்றது. இந்த பஞாயத்து களின் மூலமாகவே இடது முன்னணி அரசு தனது நிலச்சீர்திருத்த திட்டத்தை துவங்கியது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலங்கள் கைப்பற்றப்பட்டு, நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. மின்சாரம், பாசனம் போன்ற இதர துறைகளிலும் கவனம் செலுத்தப்பட்டது.

கடந்த 33 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் இடது முன்னணி படைத்த சாதனைகளுக்கெல்லாம் இந்த முதல் அரசாங்கம் அடிநாதமாய் இருந்தது எனில் அது மிகையில்லை. இன்று இந்தியாவில் நிலச்சீர்திருத்த சட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ள நிலங்களில் சரிபாதி மேற்குவங்க அரசு கொடுத்திருக்கிறது என்பதோடு ஒப்பிட்டு இந்த மகத்தான சாதனையை நம்மால் புரிந்துக்கொள்ள இயலும். கொடிய உணவு பஞ்சம் தாக்கிய மாநிலம் உணவு உற்பத்தியில் தன்னிரைவு அடைவது மகத்தான சாதனை. இது மக்களுடன் இடையறாது தொடர்பு கொள்ளும் இடத்தில் மட்டுமே சாத்தியம்

தனது சொந்த வாழ்க்கையில் அவர் நினைத்திருந்தால் அன்றிருந்த வங்கத்தில் உள்ள பல செல்வந்தர்களைப் போல் வாழ்ந்திருக்க முடியும். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெறுவது 1930 ஆம் ஆண்டுகளில் அத்துனை எளிதானதல்ல. ஆனால் அவைகளை ஒதுக்கி தள்ளினார். தனது பட்ட மேற்படிப்பை முடித்து திரும்பிய அவர் தொழிற்சங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்தியாவில் இருந்த பலதொழிற்ச்ங்கவாதிகளைப் போல் அவர் செயல்படவில்லை. தொழிலாளர்களுக்கு வர்க்க அரசியலை போதித்தார். அதனால்தான் அவர் தொழிலாளர்களிடம் நிலைத்திருக்க முடிந்தது. அவரது எளிமையான அனுகுமுறை அவரது சித்தாந்தம் கொடுத்தது என்பதை அவர் பெருமையுடன் குறிப்பிடுவார். மிகப்பெரிய தத்துவ விஷயங்களை மக்களுக்கு புரியும் மொழியில் அவரால் விளக்க முடிந்ததால்தான் அவர் பின்னால் மக்கள் அணி திரண்டனர். வெறும் வார்த்தைகளால் அடித்தட்டு மக்களிடம் சுதந்திரத்தை சொன்ன காங்கிரஸ் இந்திய நாட்டின் முதலாளிகளின் நலனை விட்டுத்தரவில்லை அன்றும் இன்றும். ஆனல் உன்மையான சுதந்திரம் உழைக்கும் மக்கள் விடுதலைதான் என்று கம்யூனிஸ்டுகள் போராடினார்கள் அன்றும் இன்றும். விடுதலை போராட்டத்துடன் உழைபாளிகளின் போராட்டத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தையும் ஒன்றினைப்பதில், சுதந்திரத்திற்கு பின் அந்த உழைப்பாளி மக்களின் வாழ்வியல் போராட்டத்தையும் தோழர் ஜோதிபாசு ஒன்றிணைப்பதில் வெற்றி கண்டார்.

ஒரு வலுவான இயக்கத்தை கட்டிட அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். அரசு கொடுத்த வீட்டில்தான் இறுதிவரை வாழ்ந்தார். தனது வருமானத்தை கட்சிக்கு கொடுத்துவிட்டு கட்சி கொடுக்கும் சம்பளத்தில் வாழ்ந்தார். சொத்துக்களை சேர்க்கும் நோக்கம் அவருக்கில்லை என்பது அவரது வாழ்க்கை நிருபணம் செய்துள்ளது. சென்னையில் நடந்த கட்சியின் அகிலைந்திய மாநாட்டில் இதர பிரதிநிதிகளுடன் வரிசையில் நின்று தேனீர் பருகியது அதிசய தகவலாக தமிழக செய்தி ஊடகங்கள் பிரசுரம் செய்தன. இவையெல்லாம் தோழர் ஜோதிபாசுவின் சொந்த குண்நலன் என்று புகழ்ந்துரைப்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. அது தனது இயக்கத்தின் இயல்பு என்பார். தனிநபர்களுக்கு வராற்றில் முக்கிய பாத்திரமிருப்பது உண்மைதான் ஆனால் தனிநபர்களே வரலாற்றை படைக்க முடியாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி என்பதை அவர் புரிந்திருந்தார்.

ஒருவகையில் உண்மையும் அதுதான். திரிபுராவின் முதலமைச்சாராக பத்து ஆண்டுகள் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிருபன் சக்ரவர்த்தி தனது பதவி காலம் முடிந்ததும் கையில் இரண்டு பெட்டிகளுடன் சாலையில் நடந்து சென்றார். நிருபர்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்ட போது எனது கட்சி அலுவலகத்திற்கு என்றார். ஏனெனில் அவருக்கு சொந்தமாய் வீடு கூட கிடையாது. சமீபத்தில் மறைந்த மதுரையில் பத்து ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராய் இருந்த மோகனுக்கு சொந்தமாய் வீடு இல்லை. அவர் வைத்திருந்த வாகனம் எம்.80 கட்சி வாங்கி கொடுத்தது. தனி மனிதர் எவ்வுளவு உயரிய குணத்துடன் இருப்பினும் அவர் சார்ந்திருக்கின்ற இயக்கம் சரியான தத்துவத்தை கொண்டிருந்தால்தான் அந்த தனி நபரால் அதை செழுமைபடுத்த முடியும்.

அதனால்தான் தனக்கு பிரதமர் பதவி வாய்ப்பு கிடைத்த போதுகூட கட்சியின் ஒப்புதலை பெறாமல் அந்த பொறுப்பை ஏற்க முடியாது என்று உறுதியாய் நின்றார். அந்த கட்டுப்பாடும். உறுதியும் அவரது ஆளுமையின் அடையாளம். அந்த ஆளுமைதான் அவரை அரசியல் சிகரத்தில் நிறுத்தியது. மதசார்பின்மைக்காக, சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக, நிலமற்ற மக்களுக்கு ஆதரவாக இறுதிவரை போராட வைத்தது. இந்தியா போன்ற முதலாளித்துவ நிலபிரபுத்துவ அரசமைப்பு அதிகாரத்தினுள் இருக்கும் ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருந்துக்கொண்டே, அதில் கிடைக்கும் வாய்ப்பை, மத்திய அரசின் கடுமையான பழிவாங்கும் போக்கு இருந்தால் கூட மக்களுக்காக எப்படி இயங்கலாம் என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டியவர் அவர். அவரது இழப்பு இந்திய இடதுசாரி இயக்கத்திற்கு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைதான். ஆனாலும் வெற்றிடம் எப்போதும் நிரம்பும் தன்மை உள்ளது என்ற உண்மையும் உடன் வருகிறது.

அரசியல் என்றாலே சாக்கடை என்று தினம்தினம் இளைஞர்கள் மத்தியில் கருத்து பிரச்சாரம் நடத்தப்படுகிறது. தனியார்மயம், தாளாரமயம், உலகமயம் போன்ற மயங்கள் வித்தைத்துள்ள சுயம் சார்ந்த வளர்ச்சி அதற்கு உரம் சேர்க்கிறது. தனது வாழ்க்கை மட்டும் பாதுகாப்புக்குறியது மற்றவர் குறித்து எதற்கு கவலை? என்பது யாரும் போதிக்காமல் ஊடகங்களின் வாயிலாக பொது புத்தியில் அடித்து இறக்கப்படுகிறது. அரசியலில் பதவி பெற எதுவும் செய்யலாம் என்பது தனது வேலைக்கு லஞசம் கொடுப்பதை போல இயல்பானது என நம்பவைக்கப்பட்டுள்ளது. அவரச உலகின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பணம் சம்பாதிக்க படைக்கப்பட்டதாக மின்னனு ஊடகங்கள் போதிக்கின்றன. நெருக்கடிகளில் உழலும் மக்களுக்கு புதிய புதிய வடிவில், தோற்றத்தில், பெயரில் சாமியார்களும் சாமிகளும் தேவையாய் இருக்கிறது. கஞ்சா சாமியார் முதல் கார்ப்ரேட் சாமியார் வரை கடந்த 15 ஆண்டுகளில் அதிகரித்திருப்பது உலகமயத்தின் விளைவு என்பதை புறம் தள்ள முடியாது உண்மையாகி உள்ளது.

இப்போது மீண்டும் துவக்கத்திற்கு வருவோம். சாதாரண மனிதன் தனது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள தனக்கு மேலான ஒரு சக்தியை நம்பத் துவங்கும்போது சூட்சுமங்கள் நிறைந்த தத்துவங்கள் வேகமெடுக்கின்றன. உன்னால் எதுவும் முடியாது, எல்லாம் அவன் செயல் என்று தனது பிரச்சனைகளுக்குகாக போராடாமல் மக்களை பார்வையாளர்களாக வைத்திட இந்த தத்துவங்கள் விரும்புகின்றன. ஆனால் ஜோதிபாசுகள் வேண்டுவது, எதுவும் மக்களை மீறி நடப்பதல்ல, மக்கள் பார்வையாளர்கள் அல்ல பங்கேற்பவர்கள். மக்கள் தங்கள் போராட்ட சக்தியின் மீது நம்பிக்கைவைக்க வேண்டும். அரசியல் சாக்கடை என்று போதிக்கப்படுவது இளம் தலைமுறையை அதிலிருந்து விலக்கிவைக்கதான். ஏன் நேர்மையான அரசியல் இல்லை. என்னைப்போன்றவர்கள் இருப்பது தெரியவில்லையா? என்று தனது வாழ்க்கை மூலம் வினா எழுப்புகிறார். பதில் சொல்வது இளம் தலைமுறையின் கடமை என கருதுகிறேன்.

உங்கள் உடலுக்கு மட்டும் விடை தருகிறோம்

தோழர் ஜோதிபாசு! வீரவணக்கம்.
நன்றி :தடாகம்

Friday, February 19, 2010

Thursday, February 18, 2010


"ராவணேசன் " (கூத்துருவநாடகம்) என் பார்வையில்
-தர்ஷாயணீ லோகநாதன் -

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு அவர்கள்.

இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை.
காலம்- சனி(13.02.2010) மாலை 6.30மணி.


சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார்.
இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன்.


நாடகங்கள் என்றவுடன் வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண்ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறைஇதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள்மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப்பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லைஎனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது.


எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்றுஇடந்தரவில்லை .இருப்பினும் யாராவது ங்கள் நலிந்து போன கலைகளைமறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு காட்சிப்படுத்த மாட்டார்களா என்றிருந்தஎனக்கு இது மிகப் பெரும் தாக சாந்தி.இந்த கலைச் சேவையை பேரவாவினால்கொழும்பு- கலையிலக்கியப் பேரவை' தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
"இராவணேசன்" என்கிறது மரபு தழுவிய கூத்துருவ நாடகக்கூத்து,
மரபைத்தழுவிய ஒரு பரீட்சார்த்த நாடக முயற்சி என்பதால் இப் பெயர்வரவேற்கக் கூடியதே. தனியே கூத்து என்றால் மரபு சார்ந்த எதிர்ப்பையும் , நாடகம் என்றால் அதன் கூத்துருவையும் நிராகரிக்க வேண்டி வந்திருக்கும், இன்றைய காலத்திட்கேற்ப இரண்டையும் இணைத்து தந்திருக்கிறார்கள். நாடகத்துக்கு உதவி நெறியாள்கை விமல் ராஜ் அவர்கள்.
(நன்றி- கஜேந்திரன் அண்ணா -புகைப்படங்கள் )
பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் நினைவோடு தொடங்கப்பட்டது.1960 களில் பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்களைக் கொண்டு அரங்கடப்பட்டஇந்நாடகம், இன்று சுமார் 45வருடங்களின் பின்னர் எம்மவர் பார்வைக்காக, காலமாற்றத்தோடு புரையோடி, உருத்திருந்தி காட்சிப்படுத்தப்பட்டது.


மேடை நாடகங்களைப் பொறுத்த மட்டில் அவற்றின் த்திரத்தன்மையை காட்டக்கூடியவை, அவை தங்கியிருக்கும் மேடை,களரி,அரங்கு போன்ற மக்கள் சூழ்அமைப்பேயாகும்;இருந்த போதிலும் இவை யாவற்றையும் பொருட்படுத்தாதுஒரு எளிமையான அரங்கில், விருப்பம் நிறைந்த பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு, குறுகிய இடப்பரப்புக்குள்ளாகவே ஆடல்கள்,பாடல்கள், போர்க்காட்சிகள், துரித அரங்க மாற்றங்கள் யாவற்றையும் மட்டக்களப்பிலேஇருந்து குழுத்தாங்கி வந்து செயல்புயலாக்கி விட்டார்கள். இந்தஇடப்பற்றாக்குறை அரங்கம் ஐரோப்பிய அரங்கின் தாக்கத்தைத் தந்தது உண்மை ! முதற்கண் அந்த திருப்தியான அர்ப்பனத்திட்கு நன்றிகள். உள்ளடக்க நிலையிலும்சமகால அரங்கப் போக்கில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக்கொண்டுஇருப்பதினாலும் விமர்சனத்துக்குரிய நல்ல நாடகம் என்ற வகையில் இதனைப்பற்றி எழுத முற்படுகிறேன். மேடையமைப்பை திருமதி .காஞ்சனா அவர்கள்நிர்வகித்திருந்தார்.


இந்நாடகம்,
# பழங்கூத்தை புத்தாக்கம் செய்து மரபியல் நெறிகளை சேர்த்துக்கொண்டமை,
# கூத்துருவ நாடகம் என்ற சட்டத்துக்குள் நின்று நவீன சிந்தனைப் பாங்கில்உள்ளீட்டை அமைத்துக்கொண்டமை,
# காப்பியப் பொருளை சமகாலத்து மக்களின் உணர்வுக்குள் கொணர்ந்தமைபோன்ற ரீதியில் முதன்மை பெறுகிறது.
தமிழர்களின் மரபு வழிப்பட்ட தேசிய வடிவம் கூத்து என்பதில் எவ்வித ஐயமும்இல்லை, இந்த ஒரு தேசியம் என்கிற விடயத்தை நாடக அரங்காககாட்சிப்படுத்தியமையும், அதனுடன் பிரதேச மரபை இணைத்துவடமோடியாடலாக அமைத்துக் கொண்டமையும் வலிமையான விடயம்.


அங்கு, கட்டியமுரைத்தல், பாத்திர அறிமுகம் போன்றவற்றை எடுத்தும், கூத்தின்யாப்பு என்று கூறக்கூடிய காப்பு ,மங்கலம் போன்றவற்றை விடுத்தும், நாடக; கூத்து முறைக்குள் நவீனத்தை சொருகி இருந்தார்கள். கட்டியக் காரர் அதாவதுகதை சொல்லி சூத்திர தாரியைப்போல் நாடகத்தின் கதைப்போக்கைஎடுத்தியம்புகிற பாணி கிரேக்க 'ஹோரசின்' சாயல். இவ்வுத்தி எமது நாடகக்கலைக்கு புதிது.


இசையைப் பொருத்தமட்டில் மரபுக் கருவிகளே பெரும்பாலும் பாவிக்கப் பட்டன, எனினும் ஹார்மோனியம், வயலின்(சரஸ்வதி) போன்றவையும்பயன்படுத்தப்பட்டமை குறிப்படித்தக்கது. பம்பை, தபேலா ( வேணுதாஸ்) மத்தளம்,உடுக்கை, சிம்பல்,( பேரா.மௌனகுரு) மற்றும்ஹார்மோனியம்(ஐரோப்பிய நாடகக்கலையில் பாவிக்கப்படுவது)( ரோஜின் ) யுத்தக் குறியீடான போர் முரசை மட்டும் அண்ணாவியார் உபயோகித்தமை, இளஞ்சந்ததியிடம் போர் தவறு என்கிறதயுணர்த்துவதாகப் பட்டது, இதுவும் நவீனபடிமக் குறியீடே.!
நாடக வெற்றியில் இன்னுமொரு பங்களிப்பு பாத்திரப் பொருத்தமும் நடிப்பும். இலக்கியத்தின் பாத்திரங்களை ஒப்பனையிலும், உருவகத்திரும் அந்த பிரதேசவாரியான பாங்கிட்கமைய மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இராவணன், மண்டோதரி, கும்பகர்ணன், இராகவன், லக்குமணன்,அங்கதன், இந்திரசித்து,அனுமன், நீலன்.. பாத்திரங்களோடு பௌதீக அமைப்பும்எதுவாயிருந்தது. தனிப்பட்ட ரீதியில் பாத்திரங்களை விமர்சிக்கப் போகையில்நடிகர்கள் அனைவரும் ஓரளவு இசையுடன் பாடக்கூடியவர்களாயும், ஜதியில்ஆடக் கூடியவர்களாயுமிருந்தது, நுணுக்கம்!
அரங்கு நிறைந்த பார்வையாளர்கள்.ஒரு கட்டத்தில் திறந்த வெளியரங்கில்அரங்காடுபவர்களுக்கு மிகக் கிட்டவாகவே பாய் போடப்பட்டு அதிலும் நிறைந்தரசிகப் பெருமக்கள். பெரும்பாலும் குழந்தைகள்,பள்ளி மாணவர்களைக் காணமுடிந்தது. கூடவே அவர்கள் குதூகலப் படுவதையும்.
அரங்காடலுக்கு முந்தியதாக நாடகப் பாத்திரங்கள் சிலரை அரிதாரஒப்பனைகண்டதும் ஒரு குழந்தையைப் போல மனம் குதூகலிக்கத்தொடங்கிவிட்டது!
நாடகம் தொடங்கு முன் கலைஞர்களின் மும்மொழியிலுமான அறிமுகம்,பின்இலங்கையின் நவீன சிங்கள நாடகத்துறையின் பிதாமகர்களில் ஒருவரான திருபராக்கிரம நிரிஎல்ல அவர்களின் அறிமுகஉரை.


தொடர்ந்து பேராசிரியர் மௌனகுரு அவர்கள் மட்டக்களப்புக் கூத்தை நவீனநாடக அரங்கிற்குள் கொண்டு வந்தவர், தன்னை ஒருஎழுத்துரு,ஆடற்பயிட்சி,ஒருங்கிணைப்பு,தயாரிப்பு,நெறியாள்கை எல்லாமும்சார்ந்த அண்ணாவியாராக இன்றைக்கு நிலைப்படுத்திக்கொண்டார்.
அழிந்து வரும் நம் இயல்பியல் கூத்துகள்,நாடகங்கள்,நாட்டுப்புற இசைகள், இசைக்கருவிகள் யாவும் ஆவணப்படும் வகையில் பல நூறு இறுவட்டுக்களைஆவணப்படுத்தி இவற்றுக்கெல்லாம் நிலைப்பாடு தேடித்தந்தவர். பேராசிரியர். சு. வித்தியானந்தன் அவர்களின் நினைவுகளோடு இற்றைக்கு நாற்பத்தைந்துவருடங்களுக்கு முன் இதே நாடகத்தில் கும்பகர்ணப் பாத்திரத்தில் தாம் தமதுவது வயதில் நடித்தமையையும் நினைவு படுத்திக் கொண்டார். அதேஇளமைத்துடிப்புடன் போர் முரசை உரக்க முழங்கிய போது, கலைகளைவாழவைக்கும் கலைஞன் என்றும் இதே இளமையுடன் வாழ வேண்டும் என்றுமனது சொல்லிக் கொண்டது!


ஒரு நாடகத்தின் பாத்திர வடிவமைப்பிட்கும் அதன் இசைவுக்கும் ஒப்பனைமிகவும் இன்றியமையத ஒன்றாகும். இப்பின்னணியிலேயே ஒப்பனைக்கலைபற்றி அணுகவேண்டும். நாடகத்தில் இருவகைப்பட்ட ஒப்பனைக் கலைத்திறன்வெளிப்படுகிறது. முதல் படியாக நாடகக் கலைஞர்களுக்கு ஒப்பனை செய்தல். இரண்டாவது படியாக நாடக அரங்கினை அழகுபடுத்துதல் என இருபடிகளில்ஒப்பனை அமைகிறது
மரபுவழி நாட்டுக்கூத்துக்கள் பெரும்பாலும் ஊர்களிலே வட்டக் களரிகளிலேதிறந் வெளி அரங்கில் இரவிரவாக அதிகாலை வரை நடைபெறும் . ஒளிஅமைப்பு வசதிகள் குறைந்த அந்தக் காலத்தில் நடிகர்களின் ஒப்பனைதுலக்கமாகத் தெரியும் பொருட்டு மிகையாக இருக்கும். இன்று அப்படியல்ல; இயல்பாய் இருந்தது. . நவீன நாடகங்களில் குறியீட்டு முறையிலானஓப்பனைகளைச் செய்து பாத்திரத்தின் குணாம்சங்களே மிகைப்படுத்திக்காட்டப்பட்டது. .


ஒப்பனையில் மரபு ரீதியாக 'வடமோடிக் கூத்தின்' ஒப்பனைகளை நோக்கினால், அரச பாத்திரங்களுக்கு 'சகிட முடி' என்கிற ஆபரணம் அணிவிக்கப்படும்.அது, கூம்பிய கோபுரம் போன்ற அமைப்புடையது. அழகிய பெரிய வேலைப்பாடுகள்கிரீடத்தைத் தாங்கி காணப்படும். பாரம் குறைந்த மரத்தைக் குடைந்தே இதனைச்செய்வர். மினுங்கல் கடதாசிகளும்,வர்ணங்களும் பூசப்பட்டிருக்கும், பார்ப்பதற்கும் மிகவும் கவர்ச்சியாகவும் இது அமைந்திருக்கும். தலையை விடஅளவில் பெரிதாய் இருக்கும் அக் கிரீடத்தை தலையிலே துணியைச் சுற்றிஅதன்மேல் அசையாதவாறு கட்டிவிடுவர். இது தான் மரபு. ஆனால் இங்குதுணியினால் செய்யப்பட்ட ஆபரணங்களையே அரச வம்சத்தார்அணிந்திருந்தனர்.

வடமோடியில்(மட்டக்களப்பு) அரசர்களுக்கு இடுப்பில் அணியப்படுவதுகரப்புடைஎனப்படும்.இங்கு கரை வைத்த காலுடையே அணியப்பட்டிருந்தது. இடுப்பிலிருந்து முழங்கால் வரைக்கும் பிரம்பாலான வட்டங்கள் கட்டப்படும். இங்கு கழுத்தணியில் மட்டுமே இது உபயோகிக்கப் பட்டது. முழுவதுமாககூத்தை அடிப்படையாகக் கொண்டதல்லாதது என்பதினால் குறைகூறுவதற்கில்லை. இங்கு ஒப்பனையை மேற்கொண்டிருந்தவர், ஜனகரளியகுழுவின் கைதேர்ந்த ஒப்பனைக் கலைஞர், திரு . பாலித அபேலால் அவர்கள்.


இன்று இங்கு நாடகக் கலையில் "பார்சி" நாடக மரபு ஒப்பனையே கடை பிடிக்கப்பட்டது. நவீன நாடகங்களில் இம்முறையே இப்போது கடைபிடிக்கப் படுவதுகுறிப்பிடத்தக்கது.
நாடக ஆரம்பத்தில், அத்தனை குழு நபர்களையும் அரங்கத்தில் வட்டமாக நிறுத்திவைத்து,ஆட்டத்தின் போது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கக் கூடியஅசைவுப் பயிற்சியையும், மனதின் திடத்திட்கு 'ஓம்' என்கிற ஆழ்ந்தஉச்சரிப்பையும் பார்வையாளர்களுக்கு முன்பாகவே நிகழ்த்தி,ஒவ்வொருமாணாக்கருக்கும் கைலாகு கொடுத்து,, அண்ணாவியாருக்கும்மாணாக்கருக்குமுள்ள பரஸ்பரம் உணர்த்தப்பட்டது. இது வழமையான மரபுஎன்கிற போதும்,பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு எப்படியிருந்ததோ, எனக்குகண்ணீர் வரச் செய்கிற நெகிழ்வைத் தந்தது. இந்த மாதிரியான பாரம்பரியங்கள்தாங்கிய செயற்பாடுகள், இளையவர்களுக்கு எதையோ புரியவைக்கிறது மாதிரிக்கிடந்தது. இவை தான் ஒரு நெறி கடந்த கலையின் நீடித்த நிலைக்கு அத்திவாரம். கலை வளர்க்கும் சாதனங்கள்!


தட்டியினால் ஆன அரங்க மாற்றம், குறிப்பாக சொல்லப்பட வேண்டியதே, இராவண சபையிலே பச்சை வர்ணத்தில் இருந்தமை இலங்காபுரி பசுஞ்சோலைமிக்கது என்று காட்டுவதாயும்; இராகவனது சேனையைக் காட்டும் போது, வெண்தட்டியரங்காகவும் இருந்தது. அதுவே இராகவனது துணையிழந்தசோகத்தைப் பிரதிபலிக்கும் படிமமாயமைந்தது.

தட்டி தாங்கி யுத்த வீரர்களாக இறுதியில் அறிமுகமான நாடகத்தின் அரங்கமாற்றுகையாளர்கள் நிர்மலகாந்தன் , மதிராஜ், திருச்செந்தூரன் , நிராஜ் , கின்ஸ்லிபேரின்பாகினி , மற்றும் பிரதீப் ஆகியோரே. இவர்களது நடிப்பும் உயர்வானதே.


அடுத்த காட்சி மாறுகையில், மாய்ந்து கிடக்கிற இராவணனது வைரமார்பிலேமண்டோதரி புலம்பியழுகிற காட்சிகளில், அரங்கம் வெண்தட்டியாக மாறுகிறது; சோகத்தின் பிரதிபலிப்பு. துக்கத்தின் வர்ணம் வெள்ளையாகிறது அங்கு;இந்நிலைபெயருகின்ற அரங்க நுட்பம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குபெருவியப்பாயமைந்தது.
கட்டியம் கூறுபவர்கள்(காளிதாஸ் மற்றும் மோகனதாஸ் ) "இராவணேசன்" பெயர் விளக்கமும் ,கூத்தின் நாயகனையும் அறிமுகம் செய்கின்றனர்.
'Take this road' ஈழத்து சினிமாவில் அறிமுகமான முகமும், 'ஜனகரளிய' அமைப்பின் கைதேர்ந்த நடிகருமான காளிதாஸ் அவர்களின் மிடுக்கான கட்டியக்கதை எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. மற்றுமொரு கதைசொல்லியானமோகனதாசுக்கு மொழியை விட பம்பை,மத்தளம் போன்ற வார்த்தியங்கள் உச்சக்கட்டக் காட்சிகளின் போது கைகொடுத்தது. போர்க்காட்சிகளில் அவருடையவேகமான உணர்ச்சிக் குரலும் வார்த்திய வாசிப்பும் பார்வையாளர்களைஇருக்கையின் நுனிக்குக் கொண்டுவந்ததென்னமோ உண்மை.


'இராமன் இல்லையென்றால் அவதாரம் இல்லை:இராவணன் இல்லைஎன்றிருந்திருந்தால் இராமாயணம் இல்லை' என்கிற யதார்த்தக்கட்டியவுரையுடன் நாடகமாரம்பமாகிறது..!


இராவணன் என்கிற கம்பீரத்தின் தோற்ற முதல்வாயும், கூத்தின் நாயகனுமகியதிரு. ஜெயசங்கர் ஒப்பனையின் செழிப்போடு ஒரு துரித ஜாதிப்பாடலோடுஅறிமுகமாகிறார். ஆரம்பத்திலேயே குரலில் ஒரு விதத் தொய்வு, எதிர்பார்ப்பைக்குறைகின்றது. இராவண கம்பீரம் குறைந்து விட்டது போலக் கொஞ்சம் நெருடல். அன்றைக்கு முன்னம் இரண்டு தடவை பாரம்பரிய முறைப்படி ஒத்திகைநடந்ததும் இதற்கொரு காரணமாயிருக்கலாம்.
அங்கதன்(பிறேம்) , இராவண சபைக்குள் நுழைந்த விதம் யார் முகத்திலும்ஈயாடவில்லை, காப்பியத்தில் அவனது குறும்புத்தனம் அருமையாக விளக்கப்பட்டிருக்கும் இருப்பினும், இராவண அங்கத ஏட்டிக்குப் போட்டியானஉரையாடல்கள் அவ்வளவு உணர்ச்சிக்குள் இட்டுச் செல்லவில்லை.
அடுத்து நாடகம் முழுக்க வரக் கூடிய அருமையான பாத்திரம் மண்டோதரி,(சுயானந்தி) ஒவ்வொரு காட்சிகளிலும் சிறப்பான கைதேர்ந்த நடிப்பு, நேர்த்தியான பயிற்சியைக் குறிக்கின்றது. குரலிலும் இனிமை, ஜாதியுடன்இசைந்த பாடலைப் பாடுகையில் ஒரு இடத்தில் தனும் சுருதி பிசகவில்லை, அதுவே பாத்திரத்துக்கு இன்னுமொரு பக்கபலம்.
" போருக்குப் போகாதே மன்னா" என்று இராவணனைத் தடுக்கும் காட்சியிலும், இந்திரசித்து மடிந்து கிடக்கிற காட்சியில் "அம்மா, அம்மா, என்று அழைத்தபடிதிரிந்த என் புத்திரன் போர்க்களத்தில் அலறி விழுந்த போது யார் பெயரைஉச்சரித்தானோ என்று கதறும் போதும், எனக்குப் பக்கத்திலிருந்த 'பெரிய மனிதர்' ஒருவர் 'உச்சுக் கொட்டிக்' கலங்கியதைக் கண்டேன் ;பாத்திரத்தின் வலிமையது. மண்டோதரியின் ஒப்பனையும், தாயையும், துணைவியையும் ஒருபாத்திரத்துக்குள் கொணர எடுத்த முயற்சியும், இன்னுங்கூட நாடகம் முடிந்தபின்னும் மண்டோதரி நினைவில் நிற்கிறார். இராவணன் இறந்து போனகாட்சிகளில் மண்டோதரி புலம்பல் என்ற தனிப்படலமே கம்பராமாயணத்தில்இருக்கிறது, இருப்பினும் அக் காட்சிகளின் நீளம் போதாது ஒரு குறை. சீதையாகட்டும்,பாஞ்சாலியாகட்டும்,கிரேக்கத்தின் ஹெலன் குமாரிஆகட்டும்பெண்களை வைத்துத் தான் ஆண்கள் போர் செய்கிறார்கள்............ -- மண்டோதரி கூறுகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் சமகாலத்துக்குப்கச்சிதமாகப் பொருந்துகிறது.
கும்பகர்ணன்,(விமல் ராஜ்) இன்னுமொரு சிறப்பான நடிகன். ஆடைஆபரணங்களும், ஒப்பனையும் சிறப்பு. கையில் 'கதை' தவிர்த்து வேல்வைத்திருந்தமையின் படிமம் இறுதிவரைக்கும் புரியவேயில்லை. போருக்குப்புறப்பட்டெழும் போததன் நாட்டியம், தீவிர பயிற்சியும்,தேர்ச்சியும் இருந்திருக்கவேண்டும் அவையே நடுக்குகிறது;அத்தனை ஆர்ப்பாட்டம். சிறு பாத்திரம் தான்என்றாலும் அருமை.

அடுத்து இந்திரசித்து,(தவராஜா) இராவணனின் வீர புதல்வன் என்கிற கம்பீரம்எல்லா இடத்திலும் குறைவு. போர்க்களத்தில் விபீடனச்சிற்றப்பனைக் கண்டுதிரும்பிவந்து எடுத்துரைக்கிற காட்சிகளின் முகபாவனையால், அரங்கில்எதிர்பார்ப்பில்லை. அத்தனை மத்திமம்!
இராகவன் (தயாபரன்) அளவான நடிப்பு, இன்று போய் நாளை வா என்று இராமன், சொல்கிற தருவாயில் இராவணனுடைய முகம் அஷ்ட கோணலாக ஒருதினுசான முகபாவம் காட்டும்; தேர்ச்சி மிக்க நடிப்பது.

சிறிய பாத்திரமேயானாலும் இலக்குவனது ( விவானந்த ராஜா) பாத்திரம் நீண்டநேரம் மனதில் நிற்கிறது, போராடல்களின் போது கையாண்ட திறமான நாட்டியக்கட்டங்களும் அதன் போததன் இசையும் உயர் ரகம். எனக்கு முன்னால் இருந்தசுடு மூஞ்சி' நண்பரொருவரே கையில் தாளம் போடத்தொடங்கிவிட்டாரென்றால், பார்வையாளனை எந்தளவுக்கு இசைஆக்கிரமித்திருக்கென்பதை நீங்களே ஊகித்துவிடுங்கள்.


தேராக வந்த இரு பெண்கள், டிலகஷனா ஆங்கிலத்தில் ஆரம்ப உரை சொன்னலாவண்யா , தேர்க்குதிரைகள் போலவே துரிதம். ஒரு ஜதியில் அவர்கள் தருகிறவிறுவிறுப்பு, முகத்துக்கு முகம் இராகவனும், இராவணேசனும் சந்திக்கிறபொழுதுகளின் உச்சக்கட்டத்தை மெருகூட்டியது.
நாடகத்தில் பொதுவாகவே, இறுதிக் காட்சிகளே அடிக்கோடிட்டுக் காட்டக்கூடியவை. அந்த யுத்தக் காட்சிகள் ஒவ்வொருவரையும் இருக்கையின் நுனிக்குக்கொண்டு வந்ததென்றால் மிகையாகாது, யுத்த பேரிகைகளின் முழக்கமும், கொம்பு ஊதப்படுவதும், தட்டி தாங்கிய போர் வீரர்கள் அரங்கத்தைமாற்றியமைப்பதும், "'ஹோ"' என்கிற பேரிரைச்சலும் ஆயிரம்யுத்தக்களங்களைக் கண்ட தமிழர் நமக்கு அன்றைக்கும் புத்திதாகத் தானிருந்தது. ஒவ்வொரு அரங்காடட்காரர்களினதும் தீவிர உழைப்பு அந்த இறுதிநொடிகளிலேயே புலப்பட்டுப் போக, சுமார் பத்து நிமிடங்கள் அவை யுத்தபூமியாகிவிட்டது, அரங்கினுள் நுழைந்து, எழுந்து, சென்று ஜய கோஷம்போடவேண்டும் போல் உணர்ச்சி வசப்பட்டிருந்தேன் . (யாரும் பார்த்திருக்காவிட்டால் அதைதான் செய்திருப்பேன். )யுத்தத்தின் போததன், இராவணேசனின்மாயப்படையால் தான் மறைக்கப் படுதலும் ,வீரர்கள் தேடித் திணறுகின்றகாட்சியும், அம்புகளின் மலைக்குள் இராகவனை மறைந்து விடுகிற சாகசமும், இறுதியில் இராகவனது முகம் பார்த்தபடி இராவணன் நிலத்தில் வீழ்ந்து மாய்ந்துபோகிறதும், உண்மையிலேயே உணர்ச்சிமயமான தருணங்கள்..!


"வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க, மனம் அடங்க, வினையம் வீய,
தெவ் மடங்க, பொரு தடக் கைச் செயல் அடங்க, மயல் அடங், ஆற்றல் தேய,
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா, நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும் மடங்கு பொலிந்தன, அம் முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா"

சமகால நிகழ்வு எதையோ கண்முன் கொணர்ந்து நிறுத்தின மாதிரிக்கும் ஒருசிலேடை எண்ணம்; நடிப்பின் வழியும் காட்சியின் தாக்கமும் நாடகம்சற்றைக்குள் முடிந்து விட்டதே என்று சலிப்பாகப் போய் விட்டது, இன்னும் விடியவிடிய பாரம்பரிய முறையில் அரங்காடியிருந்தால் பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம் போலத்தோணியது .

மேடைக்குப் பின் செயற்பட்டவர்களைப் பற்றிக் கூறவேண்டும், உடை, மேடைவடிவமைப்பு, மேடைப் பொருட்கள் போன்றவற்றை அழகிய முறையில் ஆவனசெய்திருந்தார் திருமதி. வாசுகி.ஜெய்சங்கர்.
காட்சி மாற்றங்களின் போததன் இசையமைப்பு, பாடல்களில் தொனித்ததெளிவும், இயல்பும் நாடகத்தோடு ஒன்றிவிட வைத்தது,மரபு தழுவிய இசையைகூத்துருவ நாடகம் முழுதுமாக ,நுணுக்கமாகத்தந்திருந்த திரு .பிரதீபன்அவர்களை பாராட்டுக்கள் சென்றடைகின்றது. இசையின் மற்றுமொருஅங்கமான , பின்னணிப் பாடகிகளை பின்னிணைப்பாக சொல்லி விடுவதில்எனக்கு உசிதம் இல்லை, குறிப்பாக செல்வி. கீதா அவர்களின் குரல், மண்டோதரியின் புலம்பல்க்காட்சிகளில்,

'அன்னேயோ! அன்னேயோ! , கொடியேற்கு அடுத்தவாறு! அரக்கர் வேந்தன்
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ?
முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ? படித் தலைய முகங்கள்தானோ?
என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! '
சோகத்தைப் பிழிகிறது போன்ற கணீர் குரல், யாரைத்தான் கலங்கடித்திராது?,
மேழும் அபிராமி, சிவகௌரி, துஷ்யந்தி, ரூபினா, ஜெகதா, இவர்களதும்குழுயிசைப்பு, இவர்கள் மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக் கல்லூரிபட்டதாரி மாணவிகள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


அதர்மம் தோற்க, தர்மம் வென்றதென்ரும், பெண்ணால் கெட்டான் இராவணேசன், உயிர்களைப் பிறப்பித்துப் போடும் பெண்கள் போர் விரும்பாதவர்கள். என்கிறதுபோன்ற பல வியாபகமான இறுதிக்கருதுகோளகளையும் பார்வையாளனைசுமந்து செல்லவைத்தது, நாடகம்.
இவ்வாறாக இரண்டு மணி நேரம் பார்வையாளனைக் கட்டிப் போட்டிருந்தகூத்துருவ நாடகம், இளந்தலை முறையினருக்குப் புதிது என்ற போதிலும் அதன்தார்ப்பரியத்தையும் மரபு தழுவிய சாடல்களையும் அதனது உத்வேகப்போக்குடன் கைப்பற்றிக்கொண்டோம். இதுவே ஒரு சிறப்பான கலைப்படைப்பின் உச்சக்கட்டமும் கூட...!
உண்மையில் நலிந்து போகின்ற இவ்வாறான கலைகளை புதிய போக்கில், இளஞ்சமுதாயத்தினருக்கு இட்டுக் காட்டுவதும், ஊக்குவிப்பதுமே இன்றையமுன் சமுதாயம் செய்ய வேண்டிய தலையாய கடமையாகும். ஈழத்தமிழர்களின்முது சோம்' என்ற வகையில் கூத்துக்கள் அங்கீகரிக்கப் படுகின்றன. கிட்டத்தட்டதமிழ்த் தேசிய சிந்தனையாக்கத்தின் விளைவு இது என்று கூடச் சொல்லலாம். எனவே எமக்கான தனித்துவங்களையும், மரபுகளையும் பேணுகின்றவகையிலும், எதிர்வினைகளின் அழகியல் முனைப்பிலிருந்து விடுபட்டுத்தெளிவதற்கும் நாம் இவ்வாறான கலைகளை செம்மையாக ஆதரிக்க வேண்டும். இன்றைக்கு இதன் தேவை கட்டாயம் என்றும் கூறலாம்.

நாடகத்தோடையே ஒன்றிப் போய் விட்டதால் இறங்க வேண்டிய தரிப்பிடம்தாண்டி இறங்கி விட்டு நடந்தே வீடு போய்ச் சேர்ந்தேன் என்றால் நம்புவீர்களோஎன்னமோ?...
நன்றி : உறுபசி

Wednesday, February 17, 2010



தோழர் கே .டானியலின் கல்லறை இருக்கிறது- கல்வெட்டு மட்டுமே காணவில்லை
-ஆதவன் தீட்சண்யா
எழுத்தாளர் தோழர் கே.டானியல் அவர்களின் கல்லறையை கண்டுவர முடியாத என் ஆதங்கத்தை நண்பர்கள் பலரும் தங்களது வலைப்பூக்களிலும் இணையதளங்களிலும் வெளியிட்டிருந்தார்கள். தீக்கதிர் நாளிதழும் வெளியிட்டிருந்தது. இன்னும் சில நண்பர்கள் இந்தக் கட்டுரை வேறுசில இணையதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறதே என்று புருவத்தை உயர்த்தி தமது தளத்தில் வெளியிட முடியாதென உதட்டைப் பிதுக்கியிருந்தனர். எல்லாவற்றுக்கிடையிலும் டானியலின் கல்லறை பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. டானியல் கல்லறை குறித்த விசயம் இப்போது அந்த சுடுகாட்டில் மண்டியுள்ள புதர்களை சுத்தப்படுத்தும் வேலையை கிளப்பிவிட்டிருக்கிறது.
பிப்ரவரி 2 ம் தேதி வாக்கில் ஊருக்குப் போகவிருப்பதாகவும் அப்போது இதுகுறித்து விசாரிப்பதாகவும் தோழர் மார்க்ஸ் தெரிவித்ததையடுத்து ...இடுகாடு முழுவதும் மண்டிக்கிடக்கும் முட்புதருக்குள் டானியலின் கல்லறை சேதமின்றி இருக்கிறது தோழரே, நீங்கள்தான் சரியாய் தேடிப்பார்த்திருக்க தவறிவிட்டீர்கள் என்று மார்க்ஸ் சொல்ல வேண்டுமேன்று விரும்புகிறேன்...’ என்று முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
நான் விரும்பி எதிர்பார்த்த அந்த தகவல் கிடைத்திருக்கிறது. டானியலின் கல்லறை என்னவானது என்று பார்த்தறியுமாறு தன்னிடம் .மார்க்ஸ் தெரிவித்ததன் பேரில் பொ.வேல்சாமி தஞ்சை இடுகாட்டுக்குப் போய் பார்த்துவிட்டு 08.02.10 அன்று அங்கிருந்து என்னை தொடர்பு கொண்டார். டானியலின் கல்லறை அவ்விடத்தில் இருப்பதாகவும் ஆனால் கல்லறையின் மீதிருந்த கல்வெட்டை யாரோ பெயர்த்தெடுத்துள்ளதால்தான் உங்களால் அடையாளம் காண முடியாமல் போயிருக்கிறது என்றும் தெரிவித்தார். ஆறுமாதங்களுக்கு முன்பும்கூட அந்த கல்வெட்டு இருந்ததாகவும், வேண்டுமென்றே ( அதாவது வேண்டாமென்று) பெயர்த்தெடுப்பதைப் போலிருப்பதாகவும், கல்வெட்டு இருந்த இடத்தில் தாறுமாறாக சிமெண்ட் பூசப்பட்டிருப்பது ஏனென்று தெரியவில்லை என்றும் வருத்தப்பட்டார். கல்லறையுள்ள பகுதியை யாரோ சிலதினங்களுக்கு முன்பு செதுக்கி சுத்தப்படுத்தியிருப்பதாகவும் கூறினார். எப்படியாயினும் தனது நண்பர் செல்வபாண்டியன் மூலமாக மீண்டும் புதிதாக கல்வெட்டு பதிக்க ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். டானியல் கல்லறையை அடையாளம் காட்டியமைக்காக .மார்க்ஸ்- பொ.வேல்சாமி ஆகியோருக்கு நன்றி.
காணவில்லை- டானியல் கல்லறை என்ற எனது முந்தைய கட்டுரையிலுள்ள கீழ்க்காணும் தகவல் பிழைகளுக்கு வருந்துகிறேன்.
1. கல்லறை எழுப்பியதில் .மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியோரது பங்களிப்பு குறித்து விடுபட்டிருந்தது. ‘டானியலின் கல்லறையை மக்கள் கலைஇலக்கியக் கழகம் கட்டியெழுப்பியிருந்ததாக தோழர்கள் சிலர் கூறினார்கள். .மார்க்ஸூக்கும், பொ.வேலுசாமிக்கும் இதில் கூடுதல் பங்களிப்பு இருந்திருக்கிறது...’ என்ற திருத்தத்தை கவின்மலர் மூலமாக நிச்சாமம்.காம், உயிர்மெய்.காம் உள்ளிட்ட தளங்களுக்கும் அனுப்பிவைத்தேன். சிலர் அந்த திருத்தங்களை வெளியிட்டுள்ளனர்.
2. மக்கள் கலைஇலக்கியக் கழகம் கல்லறையை எழுப்பியது என்ற குறிப்பும் பிழையானது. அந்த அமைப்பு இதனோடு யாதொருவகையிலும் தொடர்புபடவில்லை. உடன் வந்த தோழர்கள் சொன்ன இந்த தகவலை தோழர்.மார்க்ஸ் போன்றவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளாமல் நானும் குறிப்பிட்டிருக்கக்கூடாது. உண்மையில் தானும் தனது சகோதரர்களுமே இக்கல்லறையை எழுப்பியதாக பொ.வேல்சாமி 08.02.10 அன்று என்னிடம் தெரிவித்தார்.
3. டானியல் பற்றிய வி.ரி.இளங்கோவன் கட்டுரையில் வெண்மணிக்குப் போய்விரவேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறவில்லை என்பதான தொனி இருந்ததை வைத்து அதை அவ்வாறே குறிப்பிட்டிருந்தேன். டானியல் வெண்மணிக்கு சென்று வந்திருக்கிறார் என்ற தகவலை கரவைதாசனிடம் வி.ரி.இளங்கோவன் குறிப்பிட்டிருக்கிறார்.

Labels: