Sunday, January 26, 2014

தட்சிணாமுர்த்தி சுவாமிகள், சாமானியர்களால் புரிந்து கொள்ளப்படாதவர், ராஜாவின் குரு.

-கலைச்செல்வன் -றிக்ஸ்சிஅமிர்தம்-
நந்தா என் நிலா – தட்சிணாமுர்த்தி சுவாமிகள், சாமானியர்களால் புரிந்து கொள்ளப்படாதவர், ராஜாவின் குரு. ஒரு மனிதனின் தோற்றத்துக்கும் அவனின் மேதாவித்தனத்துக்கும் ச...ம்பந்தமில்லையென்பதற்கு இன்னொரு உதாரணம். தமிழ் இசையில் பல புதுமைகளை செய்து அதை இன்னொரு பரிமாணத்துக்கு இட்டுச்சென்றவர் இளையராஜா. அவரின் இசைக்கு கோடிக்கணக்கானவர்கள் ரசிகர்கள். இவர்களில் இசை தெரிந்தவர் தெரியாதோர் என எல்லோருமே அடங்குகிறார்கள். அதுதான் ஒரு நல்ல இசையமைப்பாளனின் வெற்றி. ஆனால் கோடிக்கனக்கானவர்களை தனது இசையால் கட்டிப்போடும் இசைஞானி, இசையைப் பற்றித்தெரிந்து அதற்காகவே தம்மை அர்ப்பணித்த பலரின் தீவிர ரசிகர். அதுமட்டுமல்லாமல் அவர்களின் மேல் மிகுந்த மரியாதை கொண்டுள்ளவர். இசைஞானியைக் கவர்ந்த இசை மேதைகள் உலகில் வாழ்ந்து, காலம் கடந்தும் வாழும் பல இசைப்பொக்கிஷங்களை விட்டுச்சென்ற பாச், பீதோவன், மொசார்ட் போன்றவர்களுடன் இந்திய மேதைகளும் அடங்குகின்றார்கள். தென் இந்திய இசை மேதைகளில் மெல்லிசை மன்னர்கள் , பாலமுரளி கிருஷ்ணா போன்றோருடன் இன்னொருவரிடம் ராஜாவுக்கு அதீத மரியாதையும் ஒருவிதமான பக்தியும் உண்டு என்பதை அவரைப்பற்றிய தேடல்களின் போது நான் அறிகிறேன். அவர் தட்சிணாமுர்த்தி சுவாமிகள் இசைஞானியால் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்படும் ஒருவர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள். கேரளத்தில் பிறந்த இவர் மலையாளத்தில் பலநூறுக்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சென்ற ஆகஸ்ட் டில் திகதி தனது 94 வயதில் இறந்துபோன இவரை ஒரு இசைமேதை என்று இசையை நன்கு தெரிந்தவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.. லீலா. ஜேசுதாஸ், சுசீலாம்மா போன்றவர்கள் மட்டுமல்லாமல் இசைஞானியும் இவரை தனது குருவென்பதில் பெருமை

Friday, January 17, 2014


தலித் பேந்தர் இயக்கத்தின் 

தலித் பேந்தர்ஸ் இயக்கத்‌தின் நிறுவனர்களில் ஒருவரும், மராட்டிய மண்ணின் புரட்சிகர கவிஞருமான தோழர் நாம்தியோ தாசல் அவர்கள் தன்னுடைய 63ஆம் வயதில் உடல் நலக் குறைவால் நேற்று (15.1.14) மரணமடைந்துள்ளார்.

தன்னுடைய 23ஆம் வயதில் மற்றும் இரு நண்பர்களுடன் இணைந்து அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக தோன்றிய கருஞ் சிறுத்தைகள் அமைப்பின் தாக்கத்தில் 'தலித் பேந்தர்ஸ்' என்னும் அமைப்பை தொடங்கினார். அம்பேத்கரிய இயக்கத்தின் புதிய போராட்ட வடிவமாக 'திருப்பி அடி' என்னும் முழக்கத்தை தன்னுடைய எழுத்துக்களிலும் அமைப்பின் செயல்பாடுகளிலும் அறிமுகப்படுத்தினார். இந்த சமூகத்தால் ஒடுக்கப்படும் பெண்கள் உள்ளிட்ட அனைவருமே தலித்துகள் தான் என்று தலித் பேந்தர்ஸ் அமைப்பின் கொள்கையாக பிரகடனம் செய்தார். அவருக்கு இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருதும், சாகித்ய அகாடெமி 'வாழ்நாள் சாதனையாளர்' விருதும் வழங்கி சிறப்பித்தது.