Monday, March 28, 2016

குமார்குணரத்தினத்தின் நீதிமன்ற உரை

எனது அரசியற் செயற்பாடுகள் ஒருவிதத்தில் இந்த நாட்டு ஜனநாயகம் புதையுண்டு இருந்த இவ்வாறான நிலையில், ஜனநாயகத்தை ஒருவிதத்தில் வெற்றிகொள்ள நடைபெற்ற போராட்டத்துடன் தொடர்பு கொண்டது.

கௌரவ நீதிபதி அவர்களே!

கேகாலை நகரில் பிறந்து வளர்ந்த என்னை விசா காலம் முடிந்தும் இங்கு வசித்த வெளிநாட்டவன் என்ற காரணத்தைக் காட்டி கைது செய்து வைத்துள்ளனர்.

எனது வீட்டின் முன்வாசலுக்கு வந்தால் என்னால் பொது மயானத்தைக் காணமுடியும். எனது தந்தை உட்பட எனது சொந்தங்கள் அடக்கம் செய்த, தகனம் செய்த மயானம் அதுவாகும். நான் வீட்டில் இருந்து கொழும்பு-கண்டி வீதிக்கு வந்தால் றோமன் கத்தோலிக்க மயானத்தைக் காண முடியும். அங்கு எனது தாயின் சொந்தங்கள் எனது தந்தைவழி பாட்டனார் ஆகியோர் அடக்கம் செய்யப்ட்டுள்ள புதைகுழிகள் இன்றும் இருக்கின்றன.

Tuesday, March 15, 2016

கலைஞர் கே.எஸ்.இரத்தினம் - ஓர் அஞ்சலிக் குறிப்பு.

-வைரமுத்து திவ்வியராஜன்- 

கம்யுனிசக் கட்சியில் இணைந்தும் , தேசிய கலை இலக்கியப் பேரவையில் இணைந்தும் பொதுத் தொண்டுகள் ஆற்றிய வகையிலும் இவருடன் நான் நெருக்கமாக பழகி இருக்கிறேன்

கலைஞர் கே.எஸ்.இரத்தினம் அவர்களை நான் திருமணம் முடித்து கரவெட்டிக்கு வந்தபின்னரே நேரடியாகப் பழகவும் அவரது கலைப் பங்களிப்பினை காணவும் வாய்ப்பு ஏற்பட்டது. காலம் பறித்து சென்றுவிட்ட கலைஞர்கள் நாடகத்திலகம் நற்குணம் , அமரர் தங்கமணி ,அமரர் தங்க பாஸ்கரன்,இவர்களுடன் இணைந்து இவர் ஆற்றிய கலைப் பங்களிப்புகளும் சிறி நாரதா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பங்களிப்புக்களும் எவரும் நன்றியோடு நினைவு கூரத்தக்கவை . இதனை விட கம்யுனிசக் கட்சியில் இணைந்தும் , தேசிய கலை இலக்கியப் பேரவையில் இணைந்தும் பொதுத் தொண்டுகள் ஆற்றிய வகையிலும் இவருடன் நான் நெருக்கமாக பழகி இருக்கிறேன். இவர் மனித உரிமை செயற்பாட்டாளரும் போராளியும் ஆவார். . எப்போதும் அமைதியான- மென்மையான பேச்சும் , சிரித்த முகமும், வசீகரிக்கும் தோற்றமும் அடக்கமாகவே தன்னை பெரிதுபடுத்தாமல் ஆற்றிய பொதுத் தொண்டுகளும் எல்லோராலும் நினைவு கூரத் தக்கவை .இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிள்ளைகள் குடும்பத்தவர் அனைவருடனும் நாமும் துயரத்தினை பகிர்ந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறோம். அவரது நாமம் வாழட்டும்.

மக்கள் கலைஞர் கே.எஸ். இரத்தினம்



Saturday, March 05, 2016

அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் - சிறுகதை

-நந்தினி  சேவியர்- 







இடதுசாரியச் சிந்தனையாளரான நந்தினி சேவியர்  அவர்களின்  இச் சிறுகதை 1972 ல் மல்லிகையில் வெளிவந்தது. தொடர்ச்சியில்  1994 ல் சுதந்திர இலக்கிய விருதினையும் அதே ஆண்டில் தமிழின்பக் கண்காட்சி விருதினையும் பெற்றது .
நாங்கள் வழமைபோல குந்தியிருக்கும் ஞான வைரவர் கோவில்ஆலமரத்தின் கீழ் குந்தியிருந்தோம். சின்னையரின் தேநீர்க்கடைஇன்னமும் திறக்கவில்லை. முன்புறத்துத் தட்டியை இழுத்துச்சாத்திக் கட்டியிருக்கும் கயிற்றின் முடிச்சு வழமைபோல இறுகியேஇருந்தது. மனிதர் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு தட்டியைஅவிழ்க்க ஆறுமணியாகிவிடும். அது எங்களுக்குத்தெரிந்துதானிருந்தது. காலைநேர வயிற்றுப் புகைச்சலைத் தவிர்க்கசின்னையர் போட்டுத்தரும் தேநீருக்காக நாங்கள் காத்துக்கிடந்தோம்.எங்களது அணியச் சாமான்கள் ஒதுக்குப்புறமாக விழுதுகளில்சாய்த்து வைக்கப்பட்டிருந்தன .
முதல்நாள் ஆறுமுகத்தானின் "வாய்ச்சி "ஆணியொன்றில்பட்டுவிட்டதால் எங்களது அணியத்தில் ஒரேயொரு பொருள் மட்டும்குறைந்திருந்தது .


"கம்மாலைக்குப் போய் அதைத் தோய்வித்துவிடவேண்டும்"

என்று ஆறுமுகம் அடிக்கடி முனகிக் கொண்டிருந்தான். வலதுகை ஊனமாகிவிட்டது போன்ற  மனவருத்தம் அவனுக்கு. ஆப்புகளைப்போட்டுக் கட்டியிருக்கும் சாக்குப் பையையும் ‚வல்லுட்டுக் குத்தி‘யையும் எடுக்கப்போன செல்லையன் இழுகயிறை எடுத்துவரும்கந்தனோடு தொலைவில் வருவது தெரிந்தது. வாய்க்கசப்பைத் தீர்க்கவெற்றிலையைக்கூடப் போடமுடியாமல் சின்னையர்கடைத்தட்டியைத் திறப்பதை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தோம். அந்தஅதிகாலை வேளையில் எம்மைப்போல் எத்தனையோ மனிதப்பிரகிருதிகள் இப்படித் தொழிலுக்குத் புறப்பட்டுப் போவதையும்காத்துக் கிடப்பதையும் நாங்கள் மனப்பூர்வமாக அறிவோம். வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துக்கொண்டுபோகும் இந்தநாட்களில் எம்போன்றோரின் அவல நிலைகளை நாம் எமக்குள்எண்ணிப்பார்த்துப் புழுங்குவோம். எமது கைகளின் வலுவானதுசற்றுத் தொய்யுமாக இருந்தால் நாம் மழை இல்லாதபயிர்களாகிவிடுவோம் என்பது எமக்குத் தெரியாமலில்லை.இவற்றைப் பற்றிச் சிந்திக்குந்தோறும் நாம்உணர்ச்சிவசப்பட்டுவிடுவோம்.



எங்களது மனைவி மக்கள் எங்களோடு சேர்ந்து பாடுபட்டபோதிலும்எம்மால் அன்றாடச் செலவுகளைக் கூடச் சரிக்கட்டமுடியாதுசங்கடங்கள் எறபடுவதைப் பற்றித் தீவிரமாக சம்பாஷிப்போம்.படிப்பறிவற்ற எம்மைப்போன்றோருக்கு இவையாவும் புதிர்களாகஇருந்த காலமொன்றிருந்தது. நமது பிள்ளைகளை நாம் ஓரளவிற்குப்படிக்கவைத்தோம் .அவர்கள் ஓரளவிற்காவது நமக்குச்சகலவற்றையும் விளக்கக்கூடிய வல்லமை பெற்றவர்களாகஇருந்தார்கள். எமது கிராமம் பின்தங்கிய நிலையிலிருந்து விடுபடஎமது வாலிபப் பிள்ளைகள் உற்சாகத்தோடு உழைத்தார்கள்.  நாமும்அதற்கு உடந்தையாக இருந்தோம். எமது கிராமம் ஒரு மாறுபட்ட –வித்தியாசமான - மறுமலர்ச்சியுடன் புத்துயிர் பெற்று வருவதை நாம்அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதற்கு எல்லாம் மூல காரணம்எமது ஒற்றுமையும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் நமதுபிள்ளைகளின் உற்சாகமுமே.