Wednesday, July 11, 2012

வல்வை கடலோடிகள் நூல் வெளியீட்டு விழா

இந்த நூலை கனடாவில் வாழ்ந்து காலஞ்சென்ற ஈழத்து பூராடனார் எழுதியுள்ளார்..
இங்கிலாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை வல்வை நலன்புரிச் சங்கம் பிரித்தானிய ஆதரவில் வல்வை கடலோடிகள் என்ற வரலாற்று ஆவண நூல் வெளியீடு செய்யப்பட்டது. இந்த நூலை கனடாவில் வாழ்ந்து காலஞ்சென்ற ஈழத்து பூராடனார் எழுதியுள்ளார். ஈழத்து பூராடனார் வல்வையைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தன்னால் திரட்ட முடிந்த தகவல்களை எல்லாம் ஒன்று திரட்டி ஆவணப்படுத்தியுள்ளார். இவரோடு மேலும் பலர் துணை நின்றுள்ளனர்.
கனடாவில் வல்வை தொடர்பாக நடைபெறும் பல்வேறு ஆவணப்படுத்தல் முயற்சிகளில் காலம் சென்ற அ.சி.விஷ்ணுசுந்தரம் நினைவு மையமூடாக அவர்கள் நினைவாக தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் அவருடைய புதல்வர் வி. அருட்செல்வம் ( விஷ்ணு ) இதை வெளியீடு செய்துள்ளார்.
இந்த வெளியீட்டு நிகழ்வில் வல்வையின் கடலோடிகள், கேப்டன் பணியாற்றிய பலர் பங்கேற்று சிறப்பித்தது கவனத்தைத் தொட்டது. கேப்டன் துரைலிங்கம் அவர்களுடைய பாரியார் விளக்கேற்றி நூல் வெளியீட்டு விழாவை ஆரம்பித்து வைத்தார். வல்வையின் அன்னபூரணி அமெரிக்கக் கரையை தொட்ட சாதனையை நூல்வடிவாக்கிய திரு. ரீ. இராஜகோபாலும் கலந்து சிறப்பித்தார். மேற்கண்ட நூலின் முதல் வெளியீட்டு நிகழ்வு கனடாவில் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.
புலம் பெயர்ந்து வந்தாலும் தாய் மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவலில் எடுக்கப்பட்ட இந்த முயற்சி மிகவும் பாரமானது, அதை சிறப்பாக செய்த விஷ்ணு அவர்கள் தமிழ் சங்கத்தால் பாராட்டி கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நன்றி: அலைகள்

No comments: