Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Tuesday, October 14, 2014

காவலூர் அவர்களுக்கு அஞ்சலி

ஈழத்தமிழினத்தின் முற்போக்கு இலக்கியத்தளத்தின் பங்காளியும் மூத்த எழுத்தாளரும் கலைஞருக்கு கலைஞருமாகிய காவலூர் ராஜதுரை அவர்கள் அவுஸ்திரேலியாவில் காலமகிவிட்டதான செய்திகிடைத்தது. காவலூர் அவர்கள் சிறுகதை, நாவல் ,கட்டுரை, திரைக்கதைவசனம்,விளம்பரம் வானொலி நிகழ்ச்சி என பல்வேறு உருவங்களில்  படைப்பினை உருவாக்கும் திறன்கொண்ட படைப்பாளியாக திகழ்ந்தவர். இவரின் தேவ கிருபையை முன்னிட்டு வாழும் என்ற சிறுகதை இலங்கை தமிழ்ப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. முற்போக்கு  எழுத்தாளர் சங்கச் செயற்பாட்டளருக்கு எமது அஞ்சலி.

http://www.tamilauthors.com/01/296.html

Thursday, April 03, 2014

கோபாலன் நினைவுக்கூட்டமும் மலையக நூற்கள் அறிமுகமும்

ஒல்போவில் 05.04.2014 சனிக்கிழமை, கலை இலக்கிய அரசியற் செயற்பாட்டாளர் கொக்குவில் கோபாலன் நினைவுக்கூட்டமும் மலையக நூற்கள் அறிமுகமும்

கலைஇலக்கிய அரசியற்செயற் பாட்டாளர் கொக்குவில் கோபாலன் நினைவுக்கூட்டமும் நூல் அறிமுகமும்

நிகழ்ச்சிநிரல் 

ஒளியேற்றல்
வரவேற்புரை
நினைவுரை
நூலறிமுகம் 
நன்றியுரை


நிகழ்வில் பங்குகொள்வோர்
இ.சரஸ்வதி
க.சிவசிதம்பரம்
ம.மரியதாஸ்
க.சிவா
க.நவரட்ணம்
இ.கண்ணதாஸ்
கி.கிருஷ்ணாநிதி
த.யோகராசா
த.தர்மகுலசிங்கம்
அ.குமாரதுரை
எம்.சி.லோகநாதன்
த.பிரேம்ராஜ்
 க.ஆதவன்
மு.நித்தியானந்தன்
கரவைதாசன்


Sunday, March 30, 2014

தோழர் றொசாரியோ பெர்னாண்டோ அவர்களுக்கு அஞ்சலி


தோழர் றொசாரியோ பெர்னாண்டோ காலமானார் !
இலங்கைத் தோட்டத் தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் ஸ்தாபகரும் பிரபல இடதுசாரி தொழிற்சங்க வாதியுமான தோழர் றொசாரியோ பெர்னாண்டோ கடந்த 29.03.2014 இல் காலமானார். கடந்த சில மாதங்களாக அன்னார் நோய்வாய்ப்பட்டு இருந்தார். 
ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸில் காலஞ்சென்ற திரு. அஸீஸ் அவர்களுடன் பணிபுரிந்த தோழர் றொசாரியோ இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தலின் பேரில் காலஞ்சென்ற தோழர் சண்முகதாசனுடன் இணைந்து மலையகத்தில் 1960களில் செங்கொடி சங்கத்தினை ஸ்தாபித்தவர் ஆவார். மலையக தொழிலாளர் மத்தியில் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த செங்கொடி சங்கத்தின் சார்பில் கீனாகொல்லை, மடகும்பர முதலிய முக்கிய தோட்டத் தொழிலாளர் போராட்டங்களை தோழர் றொசாரியோ மிக வெற்றிகரமாக நடத்தியதோடு தனது தொழிற்சங்க ஈடுபாட்டின் காரணமாக பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார். 
1970களில் மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியிலும் மலையகத்தின் இளம் புத்தி ஜீவிகள் மத்தியிலும் இடதுசாரி சிந்தனைகள் ஆழமாக வேரூன்றுவதற்கும் தோட்டத் தொழிலாளர் மத்தியில் போராட்ட உணர்வு வளர்வதற்கும் தோழர் றொசாரியோவின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் மாக்சிய சிந்தனையின் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் காரணமாக அமைந்தன. அத்துடன் தேசிய இடதுசாரி போராட்டங்களிலும் ஆர்வம் கொண்டிருந்த தோழர் றொசாரியோ 1960களில் யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சங்கானையில் மேற்கொள்ளப்பட்ட சாதி எதிர்ப்பு போராட்டத்தில் தோழர் கார்த்திகேசன், நீர்வை பொன்னையன் போன்றவர்களோடு தோளோடு தோள் நின்று போராடினார். 

Thursday, August 22, 2013

வெகுசனப்போரளி நரேந்திர தபோல்கர் அவர்களுக்கு அஞ்சலி

 -கரவைதாசன் -
பொருள் முதல், கருத்து முதல் என்று எதையோ வைப்பைவர்களுக்கிடையே சீரான முறையில் மக்களை சிந்திக்க வைத்து வாழ்ந்து மறைந்த ஒரு சமகால அற்புதம்

 நரேந்திர தபோல்கர் கடந்த செவ்வாய் கிழமை 20.8.13  காலை புனே ஓம்கரேஷ்வர் பாலம் அருகில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் தலையிலும் நெஞ்சிலும் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நரேந்திர தபோல்கர் அவர்கள் பகுத்தறிவாளர், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான முற்போக்கு சிந்தனையாளர், சமூக ஆர்வலர் , முன்னாள் தேசிய விளையாட்டு வீரர் (கபடி), மருத்துவர், எழுத்தாளர் வெகுசனப்போரளி அறுபத்தி ஏழு வயதில் வாழும் காலத்திலேயே  அவர் வாழ்வு பறிக்கப்பட்டுள்ளது.

தபோல்கர் கொலை செய்யப்பட்டதையடுத்து அவரது சொந்த ஊரான சடாராவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் அவரது வீட்டில் திரண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். இதையொட்டி அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.


மகாராஸ்டியின் சிந்துதாத் மாவட்டத்தில் தாப்கோலி என்னும் குக்கிராமத்தில் அஜ்யுட் தாராபாய் தம்பதிகளின் பத்தாவது கடைசி மகனாக நரேந்திர தபோல்கர் அவர்கள்   கார்த்திகை மாதம் முதலாந்திகதி ஆயிரத்திதொளாயிரத்தி நாற்பத்தி ஐந்தாம் ஆண்டு  பிறந்தவர். 

இவரது தந்தையாரும் பகுத்தறிவாளர் ஆவர். மூத்த தமையனார் சிறந்த கல்வியாளர்.  தொழில்ரீதியாக  மருத்துவரான  நரேந்திர தபோல்கர் அவர்கள். பகுத்தறிவுப் போராளியான சைலா அவர்களை  மணம் புரிந்தார். இவர்களுக்கு கமித்,முக்தா என இரு பிள்ளைகள். 

1980 லிருந்து வெகுசன முற்போக்குச் செயற்பாட்டில்     தீவிரமாக செயல்பட்டு வந்த     நரேந்திர தபோல்கர் அவர்கள் முதலில்  1989களில் மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூட நம்பிக்கை எதிர்ப்பு இயக்க நிறுவனத்தினை நிறுவினார். முதலாளித்து அமைப்பில் அதன் அசைவின்  இயங்குதலுக்காக சங்கிலிப் பின்னலாக கொழுவி வைக்கப்பட்டிருக்கும் மதம்,சாதி,பால்,நிறம் தொடரின் அடிப்படை மூடத்தினை தகர்க்க வலுவான பலவீனத்தினை கண்டறிந்து மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவரை ஒத்த தோழர்களுடன் சேர்ந்து தீவிரமாக இயங்கினார். இதுவரையில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இவரால் சுமார் மூவாயிரம் கருத்தரங்குகள். நடத்தப்பட்டிருக்கின்றன.

Monday, April 01, 2013

BBC சுசரித்த கம்லத் அவர்கள் மரணம்


இலங்கையின் பிரபலமான மொழியியலாளரும் எழுத்தாளருமான சுசரித்த கம்லத் அவர்களின் மரணம் இலங்கையின் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பு என்று பலரும் கூறியுள்ளனர்.
சனிக்கிழமையன்று காலமான அவரது இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளன.
ஆங்கில-சிங்கள மொழி அகராதியை மேம்படுத்தியவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு.
மார்க்ஸிய இலக்கிய திறனாய்வை சிங்கள் மொழியில் அறிமுகம் செய்தவர் இவரே என்று கூறுகிறார் அவருடன் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் எம். ஏ. நுஃமான்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்ததால், அவர் சிங்கள ஏகாதிபத்தியவாதிகளின் எதிர்ப்பையும் சந்தித்திருந்ததாகவும் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் கூறியுள்ளார்.
சுசரித்த அவர்களால், பிபிசி சிங்கள சேவையில் 15 வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்ட ''ஹீ மினி ஆர'' என்னும் சிங்கள பாடல் வரிகளின் இலக்கியம் பற்றிய நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக திகழ்ந்த ஒன்றாகும்.

Saturday, March 24, 2012

இலங்கை வானொலிக் குயில் மறைந்தார்

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளராகிய திருமதி ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் தனது 72 ஆவது வயதில் வெள்ளியன்று மாலை யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார்.




மார்ச். 16. 1940 தொடக்கம் மார்ச். 23. 2012 வரை வாழ்நாள் காலத்தைக்கொண்ட இராஜேஸ்வரி சண்முகம், இலங்கையில் புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளரும் நாடகக் கலைஞரும் ஆவார்.


இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். இனிமையான குரல் வளத்தை இயற்கையின் கொடையாகப் பெற்றிருந்த இவர், வானொலி நாடகங்களிலும் தனது குரல் வளத்தைப் பயன்படுத்தி சிறந்த நாடகக் கலைஞராகவும் திகழ்ந்தார்.

இலங்கை மற்றும் தமிழக வானொலி நேயர்கள் மத்தியில் வானொலி குயில் என  புகழ்பெற்றிருந்த இவர் .செய்தி வாசிப்பதில் தனக்கென ஒரு பாணியைக் கைக்கொண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தனித்துவமிக்கவராகத் திகழ்ந்தார். தொழில் ரீதியில் அறிவிப்பாளர்களுக்கு இவர் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் நிகரில்லாத ஆசானாகவும் விளங்கினார்.