Sunday, March 31, 2013

தோழர் சீனிவாசனுக்கு எம் அஞ்சலி.



தோழர் சீனிவாசன்

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் இன்று 5.5.2012, சனிக்கிழமை காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 61.

எழுபது களின் பிற்பகுதியிலிருந்தே அவர் நக்சல்பாரி புரட்சிகர அரசியலின் ஆதரவாளராக இருந்து, பின்னர் அமைப்பு நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக் கொண்டார். அமைப்பு நடவடிக்கைகளிலும், புரட்சிகர அரசியலின் மீதும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் விடுபட்டு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக அமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மகஇக மாநிலப் பொருளாளராகப் பணியாற்றியது மட்டுமின்றி, பல்வேறு போராட்டங்களிலும் முன்னணிப்பாத்திரம் ஆற்றி, பல முறை சிறை சென்றிருக்கிறார்.
பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயங்காமை, அர்ப்பணிப்பு உணர்வு, உழைப்பு ஆகியவை அவர் வெளிப்படுத்திய சிறந்த பண்புகள். 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்த நிலையிலும், அவரிடமிருந்த ஒரு இளைஞனுக்குரிய சுறுசுறுப்புடனும், உற்சாகமும் எள்ளளவும் குன்றவில்லை.

கடந்த ஓராண்டுக்கு முன்னர் தான், அவரை கணையப் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இது ஆட்கொல்லி நோய் என்று மருத்துவர்கள் வெளிப்படையாக தெரிவித்துவிட்ட பின்னரும், கடும் வலியால் வேதனைப்படும் நிலையிலும் கலக்கமோ அச்சமோ சிறிதுமின்றி அமைப்பு நிகழ்ச்சிகள், போராட்டங்கள் பற்றி கேட்டறிதல், நமது பத்திரிகைகளைப் படித்தல், தன்னை சந்திக்க வருகின்ற தோழர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடுதல் என உறுதியையைம் உற்சாகத்தையும் தோழர் வெளிப்படுத்தி வந்தார்.

இன்று காலை அவரது வாழ்க்கை முடிவுற்றது. ஒரு விபத்தைப் போல புற்று நோய் அவரைத் தாக்கியிருக்காத பட்சத்தில், தன் வாழ்நாள் முழுவதும் தன்னை அமைப்புப் பணியில் அவர் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிகர அரசியலில் தோளோடு தோள் நின்று ஓய்வின்றி உழைத்த தோழர் சீனிவாசனுக்கு, கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் விடைகொடுக்கிறோம். தோழர் சீனிவாசனுக்கு எம் சிவப்பஞ்சலி.

அவரது உடல் சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில்
இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலம் மே 6 ஞாயிறு காலை 8 மணிக்கு புறப்படும்.
தொடர்புக்கு: செல்பேசி: 99411 75876


தகவல்: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

Saturday, March 30, 2013

புரட்சிகர தோழர் இ.கா சூடாமணி இறப்பெய்தினார்


பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர தோழர் இ.கா சூடாமணி இயற்கை எய்தினார் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கடசியின் மத்திய குழு உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் தமிழ்பவுத்தகாங்கிரசின் தலைவர்களில் ஒருவராகவும்இருந்து போராட்ட தழும்புகள் பெற்றவரும் லங்கா சீமேந்து தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரும் புதிய பூமி புதிய நீதி பத்திரிகைகளின் நிர்வாகக் குழு உறுப்பினரும் தனது ஜம்பத்தைந்து வருட கால அரசியல் பணியில் பல போராட்டங்களில் பங்கு பற்றி முன்னெடுத்த முன்னுதாரணமிக்க கம்யூனிஸ்ட் போராளியுமாவார் 29.03.2013 அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார் அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வு 01.04.2013 புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கடசியின் தலைமையில் அவரது வவுனியா தோணிக்கல் இல்லத்தில் இடம்பெற்று பூந் தோட்டம் மயானத்தில் புகளுடல் தகனம் செய்யப்படும்.

Sunday, March 24, 2013

பரதேசி-திரை விமர்சனம்

-அமிர்தம் சூர்யா- 

 நாம் குடிக்கும் கதகதப்பான காலை நேரத் தேநீர் உருவாக எத்தனை ஆயிரம் மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டு அவர்களின் ரத்தமும் வியர்வையும் தேயிலைத் தோட்டத்துக்கு எப்படி உரமாகிறது என்பதைச் சொல்லும் கதை ‘பரதேசி’. பஞ்சம் பிழைக்க 1939ல் சாலூரிலிருந்து நாற்பத் தெட்டு நாட்கள் கால்கடுக்க பச்சை மலைக்கு வேலை தேடி நடக்கிறது ஒரு சமூகம். அதில் கதை நாய கன்(அதர்வா) ஒட்டுப் பொறுக்கியும் ஒருவன். போகிற போதே சிலர் செத்து வீழ்கிறார்கள். தேயிலைத் தோட் டத்தில் பனி, அட்டைக்கடி, உணவு பற்றாக்குறை, பாலியல் கொடுமை, தப்பிக்க நினைத்தால் கால் நரம்பு துண்டிப்பு, இவற்றோடு கொள்ளை நோயும் தொடர்ந்து கொள்ள... கொத்து கொத்தாக மடிகிறார்கள் மக்கள். தன்னுடைய அங்கம்மாவை (வேதிகா) பார்க்கவே முடியாத சூழலில் ‘நியாயமாரே’ என்று அழுகிறார் அதர்வா. குழந்தையோடு கொத்தடிமையாக வேதிகா வும் வந்துசேர ‘ஓ’வென வானம் பிளக்கும்படி ‘இந்த நரகுழியில் நீயுமா வந்திட்ட?’ என்று கதறுகிறான் - கதை முடிகிறது. இந்தப்படம் டேனியலின் எரியும் பனிக்காடு நாவலின் தழுவல், தாக்கம் என்று சொல்லப்பட்டாலும் அது இல்லை. அதைவிட கால குளறுபடி, தெளிவாக நிலம் குறித்தான தகவல் இன்மை, கருத்து மோசடிகளை இந்தப் படத்தில் வரிசையாக அடுக்கலாம்.

Thursday, March 14, 2013

சசிபாரதி என்கிற அற்புத மனிதன்.


வாழ்வது   அர்த்தமுள்ளதாய்  வாழ்தல்  வேண்டும். குறைந்த  பட்சம்  மனிதனாய் வாழவேண்டும். அப்படி  வாழ்கின்றவர்கள்  குறைவு.குறை கூறுதல்,பழி சொல்லல்,இருட்டடிப்பு, மனிதரிடையே புரையோடிய மனிதர்களே அதிகம். மாறாக, மனித நேயம்,அன்பு,பழி கூறாமை,அனைவரையும் அன்புடன் நேசிப்பது,முடிந்தவரை ஊக்கப்படுத்துவது என மதிக்கப்பட்ட அற்புத மனிதர் தான் சுப்பிரமணியம் சபாரத்தினம் அவர்கள் ஆவார். அமரர்களான சுப்பிரமணியம்,செல்லம்மா தம்பதியர்க்கு மகனாக புங்குடுதீவில் 26/06/1930 இல் பிறந்தவர். எனினும் வாழ்வின் பல நாட்களை யாழ்ப்பாணம்,கொழும்பு என வாழ்ந்ததினால் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் என்றே  கணிக்கப்பட்டார். புங்குடுதீவு விக்னேஸ்வரா வித்தியாசாலை,புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை, யாழ்/இந்துக்கல்லூரி, யாழ்/ மத்திய கல்லூரி, ஊர்காவற்துறை/புனித அந்தனீஸ் கல்லூரி ஆகியவ்ற்றில் தன் கல்வியைத் தொடர்ந்து க.பொ.த.தரம் வரை பயின்றார். சிறு வயது முதலே பேச்சாற்றல் நிறைந்தவராகவும்,எழுத்தின் மீது ஆர்வம் மிகுந்தவராக காணப்பட்டார். அதனால் கவிதை, கதைகள், நாடகம், கட்டுரை என தன்னைத் தயார் படுத்திக்கொண்டார். ஈழத்து குறுங்கதைகள் எழுதியவர்களில் குறிப்பிடத்தக்க பதிவை ஏற்படுத்தியவர்களுள் ஒருவராக கணிக்கப்படுகிறார்.
புறூப் ரீடராக வீரகேசரி,ஈழநாடு ஆகியவற்றில் கடமை ஆற்றியவர். இ.நாகராஜன், பேராசிரியர்.சு.வித்தியானந்தன் போன்றோரிடம் மதிப்பு வைத்திருந்தவர். இவரின் படைப்புக்கள் யாழ்/ஈழநாடு,விவேகி, ஐக்கியதீபம், வீரகேசரி, சிரித்திரன், மல்லிகை போன்ற ஊடகங்களில் வெளி வந்து பலரின் கவனிப்புக்குமுள்ளானார். சிறப்பான கதை சொல்லும் பாங்கு அவருக்கே உரித்தானது. ஈழநாட்டில் கடமை புரிந்த போது சக நண்பர்களுடனும் அனபாக இருந்ததை அடிக்கடி சொல்வார். நாட்டின் அமைதியின்மை காரணமாக திருச்சியில் வாழ்ந்தாலும் நினைவுகள் ஊரின் நினைவுகளுடனேயே வாழ்ந்தார் என்பது அவருடன் பேசுகையில் சொல்வார். அதிகமாக எழுதாவிட்டாலும் அர்த்தமுள்ள எழுத்துக்களையே தந்திருக்கிறார். இவரின் கதைகளை கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் சங்கம் ஊடாக 1986 இல்வெளி வந்தது. அசுர பசி தொடங்கி கலக்கம் கதைவரை தொகுக்கப்பட்ட அனைத்துக் கதைகளும் அடங்கிய தொகுதி  சசிபாரதி கதைகள் எனும் தொகுப்பாக 1986 இல் வெளி வந்து பலரின் பாராட்டையும் பெற்றன. பேராசிரியர் சு.வித்தியானந்தன் கூட சிறப்பாக பாராட்டியிருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் கூட- லண்டனில் வாழும் ஈழத்து எழுத்தாளர்  உதயணன் அவர்களின் முயற்சியால் அவருக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பலரையும் நெசிக்கின்ற ஒருவரை பலரும் கண்டு கொள்லாமல் இருந்தது அவருக்கும் வருத்தம் இருந்தது. இனிய நந்தவனம் சஞ்சிகை சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டு அவருக்குப் பெருமை சேர்த்தது.

Friday, March 08, 2013

எங்கள் தோழர் எம்மில் வாழ்வார் என்றும்.



எங்கள் காலத்து
நாயகனே......
ஏகாதிபத்திய கதவுகளை
இடித்து..
புரட்சிப் புயலாய் பூத்த
செம்மலரே.
சோசலிசத்தின் நம்பிக்கையாய்
புன்னகையாய் நீ.......
உன் வழி தொடரும்
சிவந்து விடியும் இவுலகம்
தோழனே சென்று வா....