Friday, May 22, 2015

நீதிகோரி தெற்கில் மே 26

சகோதரி வித்தியாவின் படுகொலைக்கு நியாயம் கோரி தெற்கின் சகோதர -சகோதரிகள் - தோழர்கள் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். கொழும்பு வாழ் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.
இடம் : Kanatta roundabout , Boralla
நேரம் : on the 26th at 4 pm.
In Jaffna, in the recent past, they raped logarani, saranya and now vithya. If you want to show solidarity and demand justice for this victim please come, wearing black, to Kanatta roundabout , Boralla on the 26th at 4 pm. Please share the news with your friends and networks.

சகோதரி வித்தியாவின் படுகொலைக்கு நியாயம் கோரி தெற்கின் சகோதர -சகோதரிகள், தோழர்கள் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். 
கொழும்பு வாழ் அனைவரும் ஆதரவளிக்குமாறு வேண்டுகிறோம். 


26 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளும் - கோசங்களும்

1. We need justice for Sivaloganaadan Vithiya, Expedite the hearing - 

விசாரணைகளை துரிதப்படுத்து, சிவலோகநாதன் வித்யாவுக்கு நீதி வழங்கு. 

2. Justice Delayed is Justice Denied. Expedite judgments in all rape cases - 

தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்! அனைத்து பாலியல் வல்லுறவு வழக்குகளுக்கும் விரைந்து தீர்ப்புகள் வழங்கு

3. No bail or suspended sentence for rapists - 

பாலியல் வன்புணர்வாளருக்கு வழக்குகளின் பிணை வழங்குவதையும், தண்டனையை இல்லாமல் செய்வதனையும் நிறுத்து. 

4. She is still a minor. Reform the law stipulating that raping a girl under the age of 18 is a statutory rape. 
அவள் இப்போதும் சிறுமிதான் ! 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதை a statutory rape(பாலியல் வன்முறைக்கு குற்றவாளியே முழுப் பொறுப்பு ) என சட்ட சீர்திருத்தம் மூலம் நிர்ணயம் செய்!

5. Establish a separate court for women and children's matters - 

பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்களைக் கவனிக்க தனி நீதிமன்றம் அமை! 

6. Politicians don’t try to fish in troubled water. Rape against a Tamil, Sinhala, or Muslim girl-it is all the same. It is gruesome.- 

அரசியல் வாதிகளே , கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முயல வேண்டாம். பாலியல் வல்லுறவு தமிழ் , சிங்கள மற்றும் முஸ்லீம் பெண்கள் - எவர் மீது நடத்தப்பட்டாலும் அது ஒன்றே . அது கொடூரமானது

7. Five Rapes a Day!! Can you sleep at night? 

ஒருநாளில் ஐந்து பாலியல் வல்லுறவு ! உங்களால் நின்மதியாக உறங்க முடியுமா? 

8. No exceptions, no excuses- Stop Rape Now - 

எந்த விதிவிலக்கும் காரணங்களும் தேவையில்லை - பாலியல் வன்புணர்வை உடனே நிறுத்து ! 

9. Enough is Enough-- Stop rape now - 

நடந்தவைகள் போதும்! பாலியல் வல்லுறவை உடனே நிறத்து ! 



විත්‍යා සිවලොගනාතන් සඳහා යුක්තිය! මැයි මස 26 වන අඟහරුවාදා සවස 4 ට බොරැල්ලේ කනත්ත වටරවුමට කළු පැහැති ඇඳුමින් සැරසී පැමිණෙන ලෙස කාරුණිකව ඉල්ලා සිටිමු. 
---------------------------------------------------------------------- 

1. විත්‍යා සිවලොගනාතන් සඳහා යුක්තිය අවශ්‍යය -- නඩුව පමා නොකර විභාග කල යුතුය.

2. යුක්තිය පමා අයුක්තිය වේ -- සියලු දූෂණ නඩු කඩිනමින් විභාග කරනු.
3. දූෂිතයින්ට ඇප දීම තහනම් කරනු, අත්හිටුවන දඬුවම් දීම අත්හිටවනු.
4. ඇය බාල්වයස්කාරියකි. 
5. ළමා සහ කාන්තා නඩු සඳහා වෙනම උසාවි පිහිටවනු.
6. දේශපාලකයිනි, බොර දියෙහි මාළු බෑම නවත්වනු -- දූෂණයට ලක්වූ යේ සිංහල හෝ දමිළ හෝ මුස්ලිම් හෝ වෙන කවුරුන් හෝ වේවා, දූෂණයෙහි කෲරත්වය සහ ප්‍රචණ්ඩත්වය එකමය. 
7. දවසකට පස් දෙනෙකු දූෂණය වන රටක සුව නින්දක් නිදාගැනීමට හැකිද? 


Thanks: Malinda Seneviratne,piraththiyal

Thursday, May 21, 2015

தேர்தல் முறைமாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் - ஒரு கவலை

-மல்லியப்பு சந்தி திலகர்-
தேர்தல் முறைமாற்றம் தொடர்பில் ' 20வது அரசியலமைப்புத் திருத்தமும் மலையகமும்' எனும் கட்டுரையை கடந்த வாரம் ஞாயிறு தினக்குரல், நமதுமலையகம்.கொம், அததெரண தமிழ் இணைத்தளம் மற்றும் கருடன்நிவ்ஸ் போன்றன 'சிறப்புக்கட்டுரையாக' வெளியிட்டிருந்தன. கட்டுரையை வாசித்த பலரும் தொலைபேசி மூலமும் நேரடியாகவும் உள்பெட்டி செய்தியாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். குறிப்பாக சரளமான மொழிநடையில் அதனை எழுதியிருக்கிறேன் என்பது பலரது அபிப்பிராயமாக இருந்தது.
இந்த தேர்தல் முறைமாற்ற விடயம் மக்களுக்கு சரள மொழியில் எடுத்துச் சொல்லப்படல் வேண்டும் எனும் ஆர்வம் எனக்குள் அதிகமாகவே இருக்கிறது. காரணம் சமூகத்தின் எதிர்கால இருப்பைத் தீர்மானிக்கும் அடிப்படை உரிமையான வாக்குகள் அது அளிக்கப்படும் முறை அதன் மூலம் பிரதிநிதிகள் தெரிவாகும் முறை போன்றவற்றை தீர்மானிக்கும் திருத்தமாக இந்த '20வது திருத்தம்' அமைகிறது.
இதனால் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல்வேறு உரையாடல்கள், செயலமர்வுகள், கூட்டங்களில் கலந்துகொண்டு கற்று வருகிறேன். அவற்றையே கட்டுரை வடிவிலும் இத்தகைய பதிவுகள் ஊடாகவும் பதிவு  செய்து வருகிறேன். நேற்றைய நாளிலும் 'தேர்தல் திணைக்களம்' ஒழுங்குசெய்திருந்த செயலமர்வு ஒன்றில் பங்குகொண்டேன். அப்போதெல்லாம் விளக்கமளிக்கும் வளவாளர்கள் (கட்சி சாராத) நிபுணர்கள் உரையாற்றும்போது, விளக்கமளிக்கும்போது என்னையறியாமல் ஒரு கவலை எனக்குள் வருகிறது.

Wednesday, May 06, 2015

இந்து சாதி அமைப்பு தான் முதலாளித்துவத்தின் தாய்

-அருந்ததி ராய்-
'' இன்று உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் புத்தகமான Capital in the 21st Century என்கிற தனது புதிய புத்தகத்தில் ஃபிரெஞ்ச்எழுத்தாளரும் பேராசிரியருமான தாமஸ் பிகெட்டி அமெரிக்காவில் ’தங்க முலாம் யுகம் ’ என அழைக்கப்பட்ட 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்ததையொத்த பொருளாதார சமநிலையின்மை இப்போதும் உலகில் உருவாகி வருவதை சுட்டிக்காட்டியிருக்கிறார். வங்கிகளும்நிறுவனங்களும் கோலோச்சும் இந்த காலகட்டத்தில் கூட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சமமற்ற தன்மையை உருவாக்கும் எந்திரமாக இருப்பது குடும்ப சொத்துக்களும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு (வாரிசுகளுக்கு)அவை கை மாறுவதும் என்பதை வலுவான ஆதாரங்களோடு நிறுவியிருக்கிறார் பிகெட்டி. இதன் படி பார்த்தால் சொத்து, அறிவு,சலுகைகள் எல்லாம் வாரிசுரிமை அடிப்படையில்தான் என்கிற கோட்பாட்டைப் புனிதப்படுத்தியிருக்கும் இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய்.''