Saturday, January 01, 2011

புத்தாண்டுச்செய்தி

இலங்கை அரசுக்குள் நெருக்கடி உக்கிரமடைகிறது.
                        -வ.அழகலிங்கம்-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அன்றாடம் மக்கள் ஆதரவை இழந்துவருவதாக இங்கிரியவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சிரேஸ்ட அமைச்சரும் முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். அரசு இழைக்கும் தவறுகளின் காரணமாக ஜனாதிபதி மஹிந்தர் ராஜபக்ஸ்ச மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை அருகிவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் முக்கியமாகத் தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு,

இன்றைய நிலைமைக்கு அரசை இட்டுச் செல்வதற்காக ஆலோசனை வழங்கி வரும் கும்பல் குறித்து தனக்கு தெரியாது என்றும் அவர்களுடைய ஆலோசனைகளின்படி நடக்கும் அரசுக்கு மக்கள் உரிய பதில் அளிப்பர் என்றும் கூறினார்.

பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன் அதுகுறித்து மக்கள் மிகுந்த வேதனை அடைகிறார்கள், எவ்வித திட்டமொன்றும் இல்லாமல் பொருட்களின் விலை அதிகரிப்பதனால் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இல்லாமல் போகிறது.
    அனேக சிரேஷ்டமந்திரிகளுக்கு நிர்வாகப் பணிமனை வசதிகள்கூட அளிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். 'நீங்கள் எங்கே வதிக்கிறீர்கள் என்று சில சீரேஷ்ட மந்திரிகளைக் கேட்டதிற்கு, அவர்கள,; நாங்கள் காற்றிலே வசக்pகிறோம்' என்று விடையளிக்கிறார்கள். அமைச்சர்கள் வசதியின்மையால் சரியான படி செயற்பட முடியாமலும் திட்டமிட முடியாமலும் இருக்கிறார்கள்.
    நாங்கள் மக்கள் முன்சென்று எமது தவறுகளைச் சொல்ல வேண்டும். அவர் 'அப்பி வவமு றட்டே நகமு' 'யிi றயஎயஅர சயவய யெபயஅர'  வேலைத்திட்டமும் சரியாக நடக்கவில்லையென்று குறிப்பிட்டார். விவசாயிகளின் விளைபொருட்களை விற்க முடியாமல் தவிக்கிறார்கள் என்று கூறினார்.
    மாஜி பிரதம மந்திரியும் சிரேஷ்ட மந்திரியுமான விக்கிரம ரத்தின இதை நேருக்கு நேரே ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஸ்சவுக்குச் சொல்லாமலும், மந்திரிசபைக் கூட்டத்து;ள் சொல்லாமலும் தனது சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசியற்குழு, மத்தியகுழு மற்றும்  பேராளர் காங்கிரஸ், அங்கத்தவர் கூட்டங்களில் சொல்லாமல் வெகுசனங்களுக்குச் சொல்ல நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார். இதுவே அரசாங்கம் உள்ளுக்குள் இருந்து உளுக்கிறது என்பதைச் சமிக்ஞை செய்வதாகும்.
    மனோகரா சினிமாப்படத்திலே அந்தப்புரச் செய்தி அரசவைக்கு வருவானேன் என்று சிவாஜி கணேசன் வசனம் பேசியதுதான் ஞாபகம் வருகிறது.
'வட்டமிடும் கழுகு, வாயைப் பிளந்து நிற்கும் ஓநாய், நம்மைச் சுற்றி நிற்கும் மலைப்பாம்பு... என்று கனவிலே இருந்த கலைஞர் கதைவசனம் தான் நினைவுக்கு வருகிறது.
    வால்மீகி ராமாயணத்திலே மாரீசன் சொல்கிறான்:-'இலங்கையின் ஆட்சி மக்களுக்கு அச்சமூட்டுவதாலும், கொடுமை புரிவதாலும் நடைபெறுகிறது. மக்களுடைய நலனுக்கு எதிராக நீதிக்குப் பணிதல் இன்றிக் கடும் தண்டனை விதிப்பதால் நாட்டை ஆளமுடியாது. கொடுமையால் ஆளும் அரசனுக்கு ஆலோசனை கூறியும் துணைபுரிந்தும் வாழ்கின்ற ஆணையர் அவ்வரசனோடு அழிவர்.'
    மாரீசன ;வாயால் வால்மீகி மேலும் சொல்லுகிறான்:-' அரசே நீ கேட்க விரும்பும் ஆலோசனைகளை மாத்திரமே எப்பொழுதும் சொல்லும் மந்திரிகளையும் ஆலோசகர்களையும் பெறல் மிகமிக எளிது. நீ கேட்க விரும்பாத, ஆனால் உனக்கும் மக்களுக்கும் தேசத்திற்கும் நன்மை பயக்கும் ஆலோசளைச் சொல்வோர் கிடைத்தல் அரிதிலும் அரிது. அவர்கள் சொன்னாலும் அச்சொல்லைச் செவிமடுக்கும், பொறுத்துக் கொள்ளும் அரசன் கிடைப்பது அதனிலும் அரிது.'
    கும்பகருணன் வாயால் கம்பன் சொல்லுகின்றான்:- இராவணனுடைய மந்திரி சபையின்தகுதியின்மையைக் கும்பகருணன் ;போருக்குப் போகுமுன்பு சுட்டிக்காட்டுகிறான். அவனுடைய இறுதி அறிவுரை இது:-
    ' உனது மந்திரிகள் நீதியும் ஒழுக்கமும் அறியாதவர்கள். அவற்றை மதிப்பவரும் அல்லர். ஆட்சிமுறைகளைப் பற்றிக் கவலைப் படுவோரும் அல்லர். பொருள்நூல் அறியாத அவர்களோ பெற விழைவதோ பெருஞ் செல்வம். செருக்கால் அறிவிழந்து உனக்கு அடாதனவற்றைப் பிதற்றுகின்றனர். அப்பிதற்றலை உனக்;;காகவும் தேசத்தின் நன்மைக்காவும் சொல்கின்றனர் என்றெண்ணி நீயும் ஏற்கிறாய். சிறிது நன்மைகூட அவர்கள் செயல்களாலும் ஆலோசனைகளாலும் வரப்போவதில்லை. ஒவ்வொரு செயலுமே மாசு அடையும். பேரழிவைக் கொண்டுவரும். அவர்களின் சொல்லைக் கேளாதே. அவர்களை மந்திரி சபையிலிருந்து நீக்கு.'
    இவையெல்லாம் இன்று எம் கண்ணுக்கு முன்னால் மீண்டும் இலங்கையில் நடப்பது போன்று இருக்கிறது. சரித்திரம் மீளவும் வரும் என்பது உண்மையாகுமோ என்ற அச்சத்தை ஊட்டுகிறது.
    தசரதன் இறந்தபின்பு மார்க்கண்டேயர் முதலியபுரோகிதரும் அமைச்சர்களும் வசிட்டனிடம் கூறுகின்னர்:-
அரசன் இன்றி சட்டத்தின் ஆட்சி நிலவாத நாட்டிலே:-
'கணவனுக்கு மனைவியும், தந்தைக்கு மகனும் கட்டுப்படார்.
--கணவன் மனைவி என்ற நெறிமுறை இராது.
--சொத்துரிமை இராது
--கலைகள், விழாக்கள் குன்றும்
--வாணிகம் நடைபெறாது.
--பாதைகளில் பாதுகாப்பு இருக்காது.
--குடிமக்கள் இரவினில் நிம்மதியாகத் தூங்க மாட்டார்கள்.
--முயற்சியும், முயற்சியின் பயனுக்கு உறுதியும் இரா.
n    படைகளால் புறப்பகைவரை எதிர்க்க முடியாது.
n    நாட்டில் எந்தப் பொருளும் ஒருவனின் உடமையாக இராது.
n    பெரிய மீன் சிறிய மீனை விழுங்குவது போல வலியார் மெலியாரை விழுங்குவர்.
n    சமூக வரம்புகள் இரா.
n    சம்பிரதாயங்கள் நிராகரிக்கப்பட்டு நாசசேலைகள் பெருகும்
n    நாத்திகம் பரவும்
n    யாருடைய ஆணையும் செல்லுபடியாகாது.
-- தண்டனைப் பயம் அகலும்

நல்லாட்சி நடவாத நாட்டினிலே என்ன நடக்கும் என்று வள்ளுவன் கூறுகின்றான்.
'ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவா விடில்'
ஆக்கத்தால் அதாவது பல்வேறு தொழில்களால் வரும் பயன் குன்றும். நானாவிதத் தொழிலாளர்களும் கற்றுக்கொண்ட தொழில்களைப் பிரயோகிக்க முடியாமையால் தொழிலால் பண்டங்களைப் படைக்கும் வழிமுறைகளை மறந்து போவார்கள்
    எவ்வாறு பிரபாகரனின் அச்சுறுத்தலால் தமிழ் சமூகம் நலிவுற்றதோ அதே போல் இலங்கையின் ஒட்டுமொத்த சமூகமும் இராணுவ, உளவுப்படை, வெள்ளைவான் கடத்தல்களால் அச்சுறுத்தப்பட்டு நலிவுறுகிறது.
    2010 .12.30  டெய்லிநியுஸ் ஆசிரியர்தலைப்பில் கூட பெரிய குற்றவாளிகள் அரச நிர்வாகத் துறையிலேயே இருக்கிறார்கள் என்று வெளியிட்டுள்ளது.. யாராவது பிரஜை ஒருவர் அரச திணைக்களங்களுக்குள் சென்றால் அங்கே ஆளில்லாத இடங்களில் மின்விசிறி தானே ஓடிக்கொண்டிருக்குமென்றும் குளிர்சாதான பொறிகளும் தேவையில்லாமல் இயங்கிக் வீண்விரயம் செய்துகொண்டிருக்குமென்றும் எழுதியுள்ளார். அரச ஊதுகுழலான டெய்லி நியூஸ்  அரச நிர்வாக துர்ப்பிரயோகங்களை அம்பலப் படுத்தத் தொடங்கியுள்ளது.

  The biggest culprits in this regard are the Government institutions. Any visitor to a Government Department today will confront the all too common site of fans rotating at full blast over vacant seats or Air-conditioners operating at full throttle in untenanted office areas.
2010.12.31 சிறீ ஜெயவர்த்தன புர சர்வகலாசாலை மாணவர்கள் 14 பேரை இடைநிறுத்தம் செய்ததையும் அதற்கெதிராக  முழுப் பல்கலைக்கழக மாணவர்களும் சத்தியாக்கிரகப்போராட்டத்தைச் செய்வதையும்  டெய்லிநியூஸ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
    நாட்டில் கட்டுக்கடங்காத விலைவாசி ஏற்றமானது சாதாரண சனங்களுக்கு அதை எதிர்கொள்ள வகையில்லாததால் திடிரென்று கொலைசெய்து கொள்ளையடிப்பது தென்னிலங்கையில் அதிகரித்துள்ளது. சட்டத்தின் ஆட்சியென்பது மருந்துக்கும் இல்லாததாகி விட்டது.
    'பசியோடு இருக்கும்ஒரு மனிதன்குற்றம் புரியாமல் இருந்தால்தான் வியப்படைவேன்' என்று தீர்க்கதரிசி முகமதுவின்தோழர் ஒருவர் கூறியுள்ளார்.
டிசெம்பர் மத்தியில் சிங்களமக்கள் வாழும் தென்னிலங்கையில் ளுநடடயறயாயபந Pலையளநயெ (54)   செல்லாவாககே பியசேனா(54) என்ற ;இரும்புக்கடை மில்லியாதிபதி மிகவும்பாதுகாப்பான களனிப்பிரதேசத்தில் தலுகம என்ற இடத்தில் இரண்டு இராணுவ விட்டோடிகள் என்று சொல்லப்படுபவர்களால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
டிசெம்பர் 11, 2010 இல்  பட்டப் பகலில்; மீரிகமவிலுள்ள அங்குறவெல்ல என்ற இடத்தில் ஒரு நகைக்கடை வியாபாரி கொள்ளையடிக்கப் பட்டுள்ளார். இந்தக் கொள்ளை நடந்த முறையையும் நேரத்தையும் கருத்திலெடுத்த வெகுசனங்கள் இதிலே இராணுவ பொலீஸ் உச்சியிலுள்ள அதிகாரிகள் சம்பந்தப் பட்டதை உடனே ஊகித்துள்ளனர். அவர்களது குற்றச்சாட்டுகளை மூடிமறைப்பதற்காக அந்த இடத்தில் பொலீஸ் கொள்ளையர்களிடையே நடைபெற்ற சண்டையில் இருபகுதியிலும் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
    நவம்பர் முற்பகுதியில் கொக்கறல்லப் பிரதேசத்தில் 3 கனவான் உடையணிந்தவர்கள்  புதைபொருள் ஆய்வுத்திணைக்களத்தின் உத்தியோக பூர்வ வாகனத்தில்  றாஜ மகாவிகரைக்கு வந்து தாம் உத்தியோக பூர்வ வேலைக்கு வந்ததாகக் கூறி விகாரையின் பக்கத்தைத் தோண்டி விலைமதிக்க முடியாத தொல்பொருட்களை எடுக்கத்  தொடங்கினர். விகாரையின் பிக்கு ஊர்ச்சனங்களுக்கு சந்தேகத்தின் பேரில் சொல்லவே சனங்கள் சூழ்ந்து அவர்களைப் பிடித்துப் பொலீசிடம் கொடுத்தனர். (சுரியஎயாiniஇ ஊPஊஇ வுiஅடிநச ஊழசிழசயவழைn யனெ வாந ர்னுகுஊ டீயமெ. ) அவர்களுள் ஒருவர் ரூபாவாகினியில் வேலைசெய்பவரும் மற்றவர் மரக் கூட்டுத்தாபனத்தில் வேலை செய்பவரும் மற்றயவர் ஏச்டீஎப்சீ வங்கி ஊளியருமாகும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
    தென்னிலங்கையில் ராஜபக்ஸ்ச குடும்ப குறுங்குழு கும்பலாட்சிக்கு எதிரான வெறுப்பானது பெருக்கல்விருத்தி வேகத்தில் வளர்ந்துகொண்டு செல்கிறது. தென்னிலங்கையில் உள்ள குசினிகளின் அடுப்புக்களை நாய்விறாண்டத் தொடங்கியுள்ளது. தேங்காய் அரிய அற்புதப் பொருளாகி விட்டது. தேங்காய் திறந்த சந்தையில் வாங்க இயலாது. ரூபா 60 வதுக்குக் கூட ஒரு தேங்காய் வாங்க இயலாது. இத்தனைக்கும் பல மந்திரிகள் தெங்குத்துறை உற்பத்தியை நிர்வகிக்கின்றனர்.
பாண்விலை ரூபா 50. அதுவும் இலகுவில் கிடைக்காத பொருளாகி விட்டது. அரைறாத்தல்பாணும் சம்பலோடும் உயிர் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் திடீர்சாவை நெருங்குகின்றனர். சாத்துக்கு எளிய சூடைமீனின் விலை ரூபா50 இல் இருந்து ரூபா150-ரூபா200 வரை ஏறி விட்டது. முன்பு ரூபா150 விற்ற கிளாத்தி மீன் ரூபா 650 ஆக உயர்ந்து விட்டது. வெங்காயத்தின் விலை ரூபா60 இல ;இருந்து  ரூபா 200 க்கு உயர்ந்து விட்டது. அரிசி விலை ரூபா60. சாதாரண காய்கறிகளின் சராசரி விலை கில்லோவுக்கு ரூபா100 இல் இருநது; ரூபா 130 வரை உள்ளது.
மத்தியதர வர்கம் உண்ணும் கோழி இறைச்சியும் முட்டையும் கிடைக்கவே கிடைக்காது. போன வருடம் ரூபா250 விற்ற கோழியின் விலை இப்பொழுது ரூபா450. ஒரு கிளாஸ் பிளேன் ரீ ரூபா20. ஒரு கிளாஸ் பால்ரீ ரூபா35. ஏறத்தாள 30 வீதத்திலிருந்து 50 வீதம் வரை விலையேற்றம். ஒரு சோத்துச் சாப்பாடு இரண்டு காய்கறிக் கறியோடும் ஒரு துண்டு மீனோடும் விலை ரூபா50 ஆக இருந்தது. இப்பொழுது விலை ரூபா125 ஆகிவிட்டது. முன்பு இதற்குத் தேங்காயச் சம்பலும் தருவார்கள். இப்பொழுது அது நிறுத்தப்பட்டு விட்டது.
    மின்சக்தியைப் பாவித்த கட்டணத்தை எவ்வாறு கட்டுவது என்பதே பேசுபொருள். அதுவும் ஒவ்வொருமாதமும் வௌ;வேறு கணக்கீடுகளோடு கைகளுக்கு வருகின்றன. மக்களின் ஏளனச்சிரிப்போடும் பெருமூச்சோடும் மந்திரி சம்பிக்க றணவாக்கை பற்றிய நக்கல் நையாண்டி ஏளனங்களோடும் முடிந்து விடுகின்ற.
    
    2010 ஆம் ஆண்டு போரின் கடுமையை, போரின் அனைத்து விளைவுகளையும் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல இலங்கையின் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உணர்த்திக் கொண்டிருந்தது. 2011 ஆம் ஆண்டின் தலைவாயிலில், அனைத்தும் நழுவிக் கொண்டும், நொருங்கிக் கொண்டும், இருப்பதுபோலவும், எதையும் பற்றிக் கொள்ள முடியாதது; போலவும், எதன் மீதும் சாய முடியாதது; போலவும்,  தோன்றுகிறது. சரத்பொன்சேகா சொன்ன தமிழ்கொடி சிங்கள மரத்திலே படரவேண்டும் என்பதுகூட இயலாமல் போய்விட்டது. சிங்கள மரமும் பராமரிப்பார் இன்றிப் பால்வற்றிப் பட்டு உக்கி உழுத்துக் கறையான் அரித்து அழிவின் வழிம்பில் நிற்கிறது. மிகவும் நம்பிக்கை இழந்துகொண்டிருக்கிற, பொருளாதார வகையில் வாடி உலர்ந்து போயுள்ள, மிகவும் பாழ்பட்டு நிற்கின்ற ஒரு நாட்டை, அதை ஆழ்கின்ற அரசுக்கு ஆதரவழிப்பதே சந்தேகத்திற்கு இடமின்றி மக்கள் துN;ராகமாகிக் கொண்டிருக்கும் மறுக்கமுடியாத பேருண்மைக்கு மத்தியில, தமிழ் சிங்கள முஸ்லீம் மூன்றுசமூகத்திலுமுள்ள புலமைச்செருக்கின் சுவடுகளைக்கூடக் காணமுடியாத படித்த பண்பாளர்கள் எல்லோருக்குமே ;அரசியல் என்றதுமே இதயம் வெடிக்கிறது. சிங்கள மக்கள் அலுத்துச் சலித்து விரக்தியின் வழிம்பில் நிற்கிறார்கள். கிட்லர் பாசிசத்தின் முன் நாட்களில் ஜேர்மன் மக்கள் இப்படியே அலுத்துச் சலித்து வாழ்ந்தார்கள்.
தேசியத் தற்சார்பைக் காத்துக் கொள்வதற்கும் வேண்டிய உயிர்ச்சாரத்தை இழந்திருக்கும் ஒரு நாட்டைக் கண்டொருவர், அதுவும் அந்த நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஒருவர் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. அங்கு உணவு இல்லை. மருந்து இல்லை. போக்குவரத்து சீர்குலைந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் நீக்கமறச் சதிகள் தோன்றிக் கெண்டிருக்கின்றன. அனைத்தும் தேசமும் தேசியமும், வாழுகின்ற எல்லா இனங்களின் கலாச்சாரமும் கண்ணுக்கு முன்னிலேயே மறைந்து கொண்டிருப்பது அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் எதை எங்கு தேடுவது என்பது எவருக்கும் தெரியாமல் இருக்கிறது. மிகவும் எளிய நாளாந்தப் பணிகள்கூட பெரும் முன்மயற்சியை  வேண்டும் கடும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. புலிப் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின்போது பாதித் துணைவர்களாக இருந்தவர்கள் தங்கள் தற்போதய செயல்களிலுள்ள மக்கள் விரோதத்தைச் சட்டைசெய்யாமல் குறுங்குழு குடும்பநலக் கொடுங்கோன்மை அரசுக்கு முண்டுகொடுப்பதன் மூலம் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் துரோகிகள் என்பதை மெய்ப்பிக்கின்றனர்.
    மனித வரலாற்றில் பலவகை வேறுபாட்டுக் கூறுகள் இருப்பதும், அவற்றில் கோழைத்தனமான வரலாற்று விதி வாதங்களுக்கு எதிராக விவாதங்கள் முறையாக வைக்கப் படுவதும், அப்படிவைக்கப்படும் அனைத்துப் பருமையான வினாக்களுக்கும் காரணகாரிய விதிகளின் பின்னால் அக்கூறுகள் செயலற்று ஓடி ஒளிவதும் -ஒரு கணம் மிகமுக்கியமான கூறான வாழ்ந்துகொண்டும் செயற்பட்டும் கொண்டுமிருக்கும் கூறான மனிதனை அவை புறக்கணித்து விடுவதையும் நாம் பார்க்கலாம். இன்று இலங்கை முழுவதிலுமே தலைகீழான சிலமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. புலிப் பாசிச காலமோ நித்திய நிரந்தரக் கொலைக் காலமாக இருந்தது. இன்று; இலங்கை முழுவதும் நித்திய நிரந்தரக் கொலைக் காலமாக மாறிவிட்டது. யுதத்தத்தின் போது கோடி கோடியாகக் கொள்ளை பணம் சேர்த்தவர்கள் தாங்கள் பழக்கத்திற்கு அடிமையான ஆடம்பர வாழ்க்கையைத் தொடர்ந்து பேண புதிய குள்ள வழிகளை நாடியுள்ளனர். முழத்திற்கு முழம் ஆயுதப் படைகள் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் நாளாந்தம் கொலை கொள்ளை நடப்பதை வேறு வழியில் வியாக்கியானப் படுத்த முடியாது. அதன் விஸ்தரிப்பே தென்னிலங்கையின் அவலம்.
    எதிர்ப்புரட்சிக்கான அரசியல் மாற்றங்கள் மனிதர்களையும் மாண்புகளையும் பேராவுலுடன் விழுங்கும். வலியவர்களை அவர்களின் அழிவுக்கு வழி நடாத்தம். நெஞ்சுரம் குன்றியோரின் ஆன்மாக்களை அழிக்கும்.
    இலங்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிவதற்கே அதிபராக்கிரமமும் அமானிடபுலமையும் தேவைப்படுகிறது. எண்ணற்ற ஊடகங்கள் குறுக்கும் மறுக்குமாக ஊடறுப்பதால் எதையும் பொதுமைப்படுத்துவது இரத்தம் காய்ந்த வேலையாகிறது. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அப்படியே உணருவது பாதிவெற்றியை ஏற்கனவே உறுதிப்படுத்துகிறது. புரட்சிகர அரசியலாளன் ஒருவனின் அறிவுத்திற வீழ்ச்சிக்கு வெகுசனங்களை ஏமாற்றுவதைவிட வேறு மிகப்பெரிய சான்றுகள் தேவையில்லை. இலங்கை மக்கள் உயிர்தப்பிப் பிழைப்பதற்காகவும் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழவேண்டுமென்பதற்காகவும் மிகமிகக் கனத்த சிலுவையை இறக்கிவைக்க வாய்பில்லாது முப்பது வருடங்கள் சுமந்தார்கள். இன்றோ என்னும் எத்தனை வருடம் மேலும் சுமக்க வேண்டும் என்ற அடுத்த அங்கலாய்ப்போடு வாழ வேண்டியிருக்கிறது.
    எந்தவித வெட்கமும் இல்லாமல் பொய்பேசவும் அதையே வழக்கமாகவும் கொண்ட ஒரு ஜனாதிபதியின் கீழ் இலங்கைமக்கள் வாழ்வதோடு தமது எதிர்காலப் பரம்பரையை ஈடேற்றவும் வேண்டியுள்ளது. ராஜபக்ஸ்ச இனவாத குறுங்குழு சர்வாதிகார அரசு இராணுவ சட்டகங்களால் உருவாக்கப்பட்டு அரசியல்போர்த்த அமைப்பு ஒன்றாகும். முப்பது வருடப் புலிப்பாசிசத்தின் கதகதப்பில் அது அப்படித்தான் உருவாக்கப்பட்டது. அது ஜனனாயக ஆட்சிமுறை, தன்னிறைவான கோட்பாடுகளிலிருந்து வடித்தெடுக்கப்படாமல் ஆதிக்க வகுப்பின் தேவைகளிலிருந்து, அதன் உட்தருக்கத்தின் சக்திகளாலும் அதற்குள் அதுவே உட்படுத்திக்கொண்ட புகலிட உரிமையாலும் வடித்தெடுக்கப் பட்டதாகும்.
    மக்களின் சகிக்கமுடியாத வாழ்துயரங்கள் வருகின்ற ஜனவரி 26 எதிர்க்கட்சிக் கூட்டுக்களின் ஆர்ப்பாட்டமாக உருவெடுத்துள்ளது. ஒரு லட்சம் பேர் ஊர்வலத்திற்கு வருஉள்ளதாக ஊகிக்கப் பட்டுள்ளது. இது என்னமாதிரி 1953 கர்த்தால் எதிர்பாராத வெகுஜன எழுச்சியாக மாறினதோ அதேபோலவே அதிகமாக அபிவிருத்தியடையும். 1953 இல் உலக பொருளாதாரம் மேலேறிப்போகும் வளர்ச்சிக்கோட்டில் சென்றது. இன்றோ நிலமை வேறு. ஆயிரம் லட்சம் மடங்கு உலக பெருளாதார நெருக்கடி நிலவும் காலத்தில் நடக்க இருக்கிறது. வங்கி நெருக்கடி, பொருளாதாரக்கட்டுமான நெருக்கடி, கடன் நெருக்கடி வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை, ராஜதந்திர நெருக்கடி யுத்தநெருக்கடியென்று எழுபதுவரடமாகத் திரண்ட முதலாளித்துவ நெருக்கடியாக வந்துள்ளது.
    இலங்கையோ ஒரு பிரத்தியேக நிலையில் உள்ளது. வெகுஜனக் கிளர்ச்சி எழுச்சிகளின் பின் எதிர்ப்புரட்சி அபிவிருத்தியடைவதே வழமை. இன்றய இலங்கையோ மூன்று தசாப்த எதிர்ப்பரட்சி அழிவுகளின் பின் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. எதிர்ப்புரட்சி முற்றுப் பெற்றபின் இரண்டு வருடம் கூட ஆகவில்லை. என்னுமொரு எதிர்ப்புரட்சியை நாடு தாங்காது. ஒரு சமூகப் புரட்சிக்கான அத்தனை புறநிலைச் சூழலும் இலங்கையில் உள்ளது. இராணுவம் ஏற்கனவே பிளவு பட்டுவிட்டது. புரட்சியின் அகவயக்காரணியபன பலமுறை வர்க்கப்போராட்டத்தில் பரீட்சிக்கப் பட்ட சர்வதேச ஐக்கியத்தோடு கூடிய புரட்சிக் கட்சி கருநிலையிலேயே உள்ளது. இலங்கைத் தொழிலாளி வர்க்கம் தன்னிடமுள்ள அத்தனை புரட்சிச் சமன்பாடுகளையும் பிரயோகிக்க நாமும் உதவ வேண்டும். எழுபது வருடமாக முதலாளித்துவ அமைப்புக்குள் வைத்து தமிழ்தேசியப் பிரச்சனை உள்ளிடட் இலங்கையின் எந்தப் பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை என்பதே உண்மையாகும். எழுபது வருடம் பரிசோதித்துப் பார்த்த முதலாளித்துவத்தின் கீழ் அதே பரிசோதனையை வேறு விளைவு வரும் என்று முட்டாள்கள்தான் நம்புவார்கள். தமிழ் மக்களின் பிரச்சனையைச் சோஷலிசம் மாத்திரம்தான் தீர்க்கும் என்பதை எம்மால் அடித்துக் கூறமுடியும். சிங்கள தமிழ் முஸ்;லீம் தொழிலாளரிடையே சகோதரத்துவம் மலருவது கபடமான ஒன்றல்ல. சுனாமியின்போதும் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போதும் அது நடைமுறையில் தமிழ்மக்களுக்கு உரைத்துக் காட்டப்பட்டது. அமிலப் பரிசோதனையால் நிறுவிக்காட்டப்பட்டது. தைபிறந்தால் வழிபிறக்கும் என்பதை நினைப்போமாக. சிங்கள தமிழ் முஸ்லீம் சகோதரத்துவத்தின் பேரால் எமது இனிய புரட்சிகர புத்தாண்டு வாழ்த்துக்கள் உரியதாகுக.
2010.12.31

No comments: