Sunday, February 26, 2012

உரையாடல் அரங்கம்

யோ.கர்ணனின் படைப்புலகமும் ,மற்றும்ஜெனிவாவில், இலங்கை தொடர்பான போர்க்குற்றமும் மனித உரிமை விவகாரமும் எனும் தலைப்பிலான அரசியல் உரையாடலும்!
 
மாதமொருமுறை தொடர்ச்சியான சந்திப்பு,உரையாடல் அரங்கம் ஒன்றினை சாத்தியப்படுத்தும் முயற்சியில் பல்வேறு கருத்துநிலை,பார்வை கொண்டோர்களிடையே பல்துறைசார்ந்து உரையாடுவதனை நோக்காகக் கொண்டு இம்மாதம் மூன்றாவது சந்திப்பு அரங்கினை ஒழுங்குபடுத்தி உள்ளோம்.
 
இம்முறை முள்ளிவாய்க்கால் துயரின் நேரடி சாட்சியாளர்களில் ஒருவராகவும் அத்துயரையும் அந்த வலியை அடைவதற்கான அரசியலையும்,அதிகார மையங்களையும் தனது எழுத்தின் ஊடாக பதிவு செய்யும்,ஒரு காலகட்டத்தின் சிதைந்தழிந்த வாழ்வின் கதைசொல்லியான யோ.கர்ணனின் "தேவதைகளின் தீட்டுத் துணி","சேகுவரா இருந்த வீடு"ஆகிய அவரது இரு சிறுகதைத் தொகுதிகளை முன்வைத்து முதலாவது அமர்வும் கருத்துரையும் இடம்பெற உள்ளது.
 
இரண்டாவது அமர்வாக,ஜெனிவாவில், இலங்கை தொடர்பான போர்க்குற்றமும் மனித உரிமை விவகாரமும் எனும் தலைப்பிலான அரசியல் உரையாடலும் கருத்துப் பகிர்வும் இடம்பெற உள்ளது.
 
காலம்-26-02-2012 - 02.30pm -07.30pm (SUNDAY)
இடம்- WANSTEAD QUAKER MEETING HOUSE
BUSH ROAD -LONDON
E11 3AU
 

No comments: