Saturday, February 27, 2016

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 12- 13 - 14)

-விஜய பாஸ்கரன்-

சம உரிமைப் போராட்டமாக தொடங்கி எதிரிகளின் கொலைவெறியால் இப்போது சமூகங்களிடையேயான பழிவாங்கலாக மாறிவிட்டது.நமது சமூகத்தினர் திடீரென அமைதியானார்கள்.வழமைபோலவே செயற்பாடுகள் இயல்பு நிலை திரும்பின.ஆனாலும் இரத்தினம் பற்றிய பேச்சு தொடர்ந்தது.இரத்தினம் இல்லாத்தால் மீண்டும் அவர்கள் ஊரைத் தாக்கலாம் என்ற அச்சம் சிலரிடையே இருந்தது.அவரகளும் அமைதியாக செயலாற்றினார்கள்.அவரகளில் சிலர் இரண்டு கைக்குண்டுகளை கொண்டுவந்தார்கள்.இது திரியை வாயால் இழுத்து எறிவது.இது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.ஆனால் இதை யார் வைத்திருப்பது,எங்கே வைத்திருப்பது என்ற பிரச்சினை உருவானது.வைத்திருப்பவர் கண்டிப்பாக அதனுடன் இருக்க வேண்டும்.இது உயிர் பாதுகாப்பு சம்பந்தமானது.அத்துடன் பொலிஸ் கெடுபிடியும் கூடியது.அப்போது எமது ஊரில் எல்லா வீடுகளும் குடிசைகளே.அது என்னவென்றே தெரியாதவர்கள்.ஆகவே இதை காட்டில் உள்ள கூழா மரத்தின் அடியில் வைத்திருந்தனர்.இதை யாழ்பாண நகரில் இருந்து ஊருக்கு கொண்டுவர இரண்டு நாட்கள் எடுத்தன.

சில வாரங்கள் கழிய ஒரு தகவல் கிடைத்தது.எதிரிகள் கொடிகாமத்தில். வேலாயுதம் என்பவர்கள். வீட்டுக்கு வந்து போவதாக சொன்னார்கள்.எதிரிகளின் பலம் எமது தேவைக்கான போக்குவரத்துக்கள் யாவும் அவர்கள் பகுதியூடாகவே நடைபெறும்.இது எமக்கு பெரிய பாதகமான விசயம்.கொடிகாம்ம் நடந்து போவதாயின் இரண்டு மைல்கள் பெரும் புழுதி ஒழுங்கைகளால் போகவேண்டும்.றோட்டால் போவதாயின் நான்கு மைல்கள் வரும்.வேலாயுதம் வீடு கண்டி வீதியில் இருக்கிறது.காரில் போய் அங்கே இறங்கமுடியாது.மேலும் ஒரே ஒருவர்தான் நமது ஆள் வாடகைகார் வைத்திருந்தார்.எமது எல்லை சிறு தூரம் தாண்டிய பின் எல்லா வீடுகளுக்கு வெள்ளாளர் கோவியர் வசிக்கும் பகுதிகள்.பகலில் போக முடியாது.அடையாளம் தெரியும்.இரவில் நம்மூர் நாய்களின் ஊளைகள் காட்டிக்கொடுக்கும். ஆனால் இவை எல்லாவற்றையும் யோசிக்கும் மன நிலையில் எமது ஊர் இளைஞர்கள் இல்லை.எப்படியோ திட்டமிட்டவரகள் யாரிடமும் சொல்லாமல் இருளும்போது புறப்பட்டார்கள்.வேலாயதம் வீடு ட வகையில் சுற்றிவளைக்கப்பட்டது.
துருவிப்பாரத்தால் வேலாயுதம் அங்கே இல்லை.அவர் வாடகை கார் வைத்திருப்பவன்.கார் இல்லை.இவரகள் துணிவோடு அவன் வளவுற்குள்ளே ஒழிந்து கிடந்தார்கள்.நேரம் செல்ல கார் உள்ளே நுளைந்தது,கார் லைற் நூரத்து காரால் இரண்டு கதவாலும் இறங்க வெடி விழுந்தது. குறி தவறவில்லை .இரண்டு பேர் விழுந்தனர்.இவரகள் கார் லைற் அணைந்ததும் ஆட்களை அடையாளம் பிடிக்க முடியவில்லை.வெடி பட்டது டிரைவருக்கும் இன்னொருவருக்கும்.
இவரகளின் எண்ணம் வேலாயுதம் ,தில்லைநாதன் ஆகியோர் இறந்துவிட்டனர் என நினைத்து ஊருக்குத் திரும்பினர்.வரும்போது துணிவாகவும் எச்சரிக்கையாகவும் வந்து சேர்ந்தனர்.மறுநாளே இவர்களுக்கு இறந்தவர்கள் யாரென்று தெரிந்தது.இவரகளுக்கு பெரும் ஏமாற்றம் தந்தது.ஆனால் சாதிவெறியர்கள் நிலை குலைந்தனர் .காரணம் இவ்வளவு தூரம் ஊடுருவி துணிச்சலாக செய்துவிட்டு அவர்கள் பகுதியாலேயே திரும்பிவிட்டார்கள்.
இரத்தினம் இறந்தபின்பே அவர்கள் விலை கொடுக்கத் தொடங்கினர்.உண்மையில் எந்த பழிவாங்கல் உணர்வின்றி உரிமைக்காக தொடங்கிய போராட்டம்,ஆதரவளிக்க வேண்டிய அவர்களே எம்மை எதிரிகளாக கருதி எதிர்களத்தில் நின்று உயிரிழக்கிறார்கள்.
சங்கானை,அச்சுவேலி,மந்துவில்,மாவிட்டபுரம் எல்லாக் களத்திலும் கோவிய சமூகமே வீணாக பலியானது.
வேலாயுதம் வளவு சம்பவத்தை அடுத்து சந்தேகத்துக்கு இடமானவர்கள் மட்டுமன்றி பயந்தாங்கொள்ளிகள் கூட கிளிநொச்சி கண்டாவளை பரந்தன் என ஓடிவிட்டனர்.
ஆனாலும் மந்துவில்,உறங்கவில்லை.நீறுபூத்த நெருப்பாக அமைதியானது.

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 13)
---------------------------------------------------
இந்த போராட்டம் தொடங்கியபோது அச்சுவேலியிலும் சில இளைஞர்கள் தொடங்க ஆவலாக நின்றனர்.அவரகள் எமது ஊருக்கு வந்து போவார்கள்.அச்சுவேலி தாழ்த்தப்பட்டவர்கள் பெருமளவில் வாழும் பிரதேசம்.பொருளாதார வளம் நிறைந்த மக்கள்.ஆனாலும் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க துணியவில்லை.ஆனாலும் ஒரு சிலர் சேர்ந்து குழுவாக இயங்கினர்.அதில் எனது உறவினர் அரியண்ணை என்று நாங்கள் அழைக்கும் அரியரத்தினம் சந்தர்.

வர் அச்சுவேலி பிள்ளையார் கோவில் திறப்புக்காக தன் நண்பர்களுடன் போராடினார்.ஒரு தடவை தவராசன் இனி கோவிலடிப் பக்கம் கண்டால் கொல்லுவேன் என சவால் விட்டு அனுப்பினான்.இவர் கோவிலை சுற்றிவந்து நான் இங்கே நிற்கிறேன் வா என அவனுக்கு தகவல் அனுப்பினார்.
இவர்களுக்கு ஊர் ஆதரவு தர தயங்கியதால் போராட முடியவில்லை.இவரகள் தாங்களே ஒரு முடிவை எடுத்தனர்.கைக்குண்டு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் அரியரத்தினம் இறந்துவிட்டார்.இதை அடுத்து அச்சுவேலி இளைஞர்கள் போராட்டத்தை விட்டுவிட்டனர்.
இதே காலகட்டத்தில் மட்டுவில் மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் அ.பொ.செல்லையா என்பவர் கொண்டுவந்த பாவாடை தாவணி எதிர்ப்பு சண்டை,சரஸ்வதி பூசைப் போராட்டம் ஆகியவற்றில் எமது ஊர் மாணவரகளோடு கைகோர்த்து பெரும்பலமாக நின்ற மட்டுவில் வடக்கு மானாவளை பகுதி மக்கள் எங்களுக்கு தமது தார்மீக ஆதரவு தந்தார்கள்.முழுமையான ஆதரவு அவர்கள் மூலமாக கிடைத்தது.இது நமது ஊர் போராளிகளுக்கு பலத்த உத்வேகம் தந்தது.
இந்த வேகத்தில் கல்வயல் பகுதியில் இருந்து இருவர் ஆர்வம் காட்டினார்கள்.அவரகளில் ஒருவர் காசிப்பிள்ளை.அப்போது அவருக்கு 20 வயது இருக்கும்.மிக மெல்லியவர். மிக துணிவானவர்.

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 14)
-----------------------------------------------------
வேலாயதம் வளவு கொலையைத் தொடர்ந்து மீளவும் அவர்கள் தமது ஊர் மீது தாக்குதல் நடாத்தினால் இம்முறை கைக்குண்டை வீசலாம் என தீர்மானித்து கைக்குண்டை தேடிப்போக சில நாட்களுக்குள்ளேயே அதை சுற்றி புற்று கிளம்பிவிட்டது.அதை எடுக்க முடியவில்லை .ஒரு குண்டு கொஞ்சம் தெரியவே அதை துப்பாக்கியால் சுட்டு வெடிக்க வைக்கப்பட்டது.

சில நாட்களின் பின் எமது உறவுக்கார இளைஞர் ஒருவர் அச்சுவேலி பத்மமேனிக்கு உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பினார்.வரும்போது அச்சுவேலி பஸ் ஸ்ராண்ட் களபேரமடைந்து காணப்பட்டது.தவராசனும் அவனது கூட்டாளிகளும் சாதியைச் சொல்லி சிலரை அடிக்க எவனுமே திருப்பி அடிப்பதாக இல்லை.அப்போது சொன்னானாம் ஆனானப்பட்ட காட்டுவாடி இரத்தினத்தையே போட்டவன் நான். என இறுமாப்பாக சொல்லி அடித்தான்.இதை கண்ணால் கண்டவர் நமது ஊர் போராளி.அவரும் வந்து விசயத்தை சொல்ல உடனே திட்டம் தீட்டப்பட்டது .இரண்டு துப்பாக்கிகள் மற்றும் வாள்கள் என்பன கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவந்து நம்பிக்கையானவரகளிடம் கொடுக்கப்பட்டது.எல்லாம் ரெடி.நாளையும. தீர்மானித்து வந்தார்கள்.அவரகள் மீண்டும் துப்பாக்கியை கிணற்றில் போட்டுவிட்டார்கள்.எமது போராளிகள் கோபமும் எரிச்சலும். அடைந்தார்கள்.
இனிப் போய் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.வேடிக்கை என்னவென்றால் நமது ஊரவர்களுக்கு தவராசன் யார் என அடையாளம் தெரியாது. அவனைக் காட்ட நம்பிக்கையானவரகளைக் கேட்டால் அவர்களும் தயாராக இல்லை.இறுதியில் குணம் என்பவர் ஒத்துக்கொண்டார்,அது கூட வேடிக்கை .அவர் சொன்னது அவன் வரும்போது அவளருகின்றன நின்று விசில் அடிப்பேன். அதில் எவன் உயரமானவனோ அவன்தான் தவராசன் .ஏற்கனவே நம்மவரும் ஒரு தடவை பாரத்ததால் சரி என சொல்லிவிட்டார்கள்.
இதில் இன்னொரு முடிவை எடுத்தார்கள்.வேலாயுதம. தப்பியதுபோல இவனும். தப்பக்கூடாது.வெடிவைக்கும்போது தப்பினால்அவனை வெட்டிக் கொல்லவேண்டும் .யாரை விடுவது துணிவான அதேநேரம் தோற்றமில்லாதவர்களே தேவை.ஏனெனில் அவன் சந்தேகப்படக் கூடாது.இருவர் தயாரானாரகள்.ஆனால் அவர்கள் இருவரையும் தவராசன் ஒரு கையாலேயே போட்டுவிடுவான்.எனினும் அவர்கள் துணிவோடு களம் உறங்கினார்கள்.
தவராசன் வரும்நேரம் யாருக்கும் தெரியாமல் ஒரு கடைமேலே துப்பாக்கிகளுடன் சின்னத்தம்பி செல்லத்துரை,காசிப்பிள்ளை துப்பாக்கியுடன் தயாரானார்கள்.தவராசன் வர அவன் அருகே சென்ற குணம் விசிலடித்துவிட்டு ஓட்டம் பிடித்தார்.காசிப்பிள்ளை முதல்வெடி வைத்தார். இலக்கு தவறியது.ஏற்பாடு செய்த இளைஞர்கள் தவராசனுக்கு அருகே வாளை ஓங்கியபடியே வந்தனர்.தவராசன் காணவில்லை.அவன் துணிவாகவே சத்தம்போட்டு வெடிவந்த திசையை பார்க்கிறான்.அடுத்த துப்பாக்கி செல்லத்துரை,அங்கே அவன் பின்னால் நிற்பவர்கள் அவரது இரத்த உறவுப்பெடியள்.அவரகளைக் காட்டித் வெடிவைக்க தயங்கினார்.வெடி அவரகள்மீது பட்டால் என்னவாகும் என்றார்.அப்போது காசிப்பிள்ளை சொன்னார் நீ இப்ப வைச்சாலும் வைக்காவிட்டாலும். அவளங்களை தவராசன் கண்டால் சாவுதான்.வை என்றார்.மனங்கேளாத செல்லத்துரை காலை குறிவைத்து வெடிவைக்க தவராசன் வீழ்ந்தான் ஒரு வாயக்காலுக்குள்.அவனுடன் வந்தவன் தப்பி ஓடிவிட்டான்.பின்னால் நின்ற இளைஞர்கள் அவன் அருகே வாளுடன் சென்று அவனை எழும்பவிடாமல் தடுக்க எல்லோரும் வந்து அவனைத் தூக்கி நிறுத்தி நீதானா இரத்தினத்தை கொலை செய்தாய் கேட்டனர்.அவன் ஓம் என்று உயிருக்கு மன்றாட இவர்கள் விடவில்லை.இதை மந்துவிலிருந்து வந்து நாங்களே உன்னை கொல்கிறோம் என சொல்லி இருவர் தூக்கிப்பிடிக்க நெஞ்சில் வெடி வீழ்ந்தது.அப்படியே வாய்க்காலில் போட்டுவிட்டு ஊர் திரும்பினார்கள்.
இதுவும் ஒரு யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இவரகள் இங்கே வந்ததும் எமது ஊர் இளைஞர்கள் உடனே சைக்கிளில் வந்து தவராசன் உடலைப் பார்த்து திரும்பினர்.இதைத் தொடர்ந்து ஏனைய எதிரிகள் எச்சரிக்கையுடன் தலைமறைவானார்கள்.

No comments: