Saturday, March 30, 2013

புரட்சிகர தோழர் இ.கா சூடாமணி இறப்பெய்தினார்


பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர தோழர் இ.கா சூடாமணி இயற்கை எய்தினார் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கடசியின் மத்திய குழு உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் தமிழ்பவுத்தகாங்கிரசின் தலைவர்களில் ஒருவராகவும்இருந்து போராட்ட தழும்புகள் பெற்றவரும் லங்கா சீமேந்து தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரும் புதிய பூமி புதிய நீதி பத்திரிகைகளின் நிர்வாகக் குழு உறுப்பினரும் தனது ஜம்பத்தைந்து வருட கால அரசியல் பணியில் பல போராட்டங்களில் பங்கு பற்றி முன்னெடுத்த முன்னுதாரணமிக்க கம்யூனிஸ்ட் போராளியுமாவார் 29.03.2013 அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார் அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வு 01.04.2013 புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கடசியின் தலைமையில் அவரது வவுனியா தோணிக்கல் இல்லத்தில் இடம்பெற்று பூந் தோட்டம் மயானத்தில் புகளுடல் தகனம் செய்யப்படும்.

No comments: