Wednesday, April 14, 2010

ஆமைக் கோதும் மனிதனும்

யுத்தம் ..! முத்தம்...!! யுத்தம்..!!?
என் முதல் முத்தத்தினை - இந்த
யுத்த முனையில்தான்
உமிழ்ந்து பார்த்திருக்கிறேன்.

அது
யுத்தத்திற்கும் சப்தத்திற்கும் இடையேயான
காத்தே புக மறுக்கும்
சிறு இடைவெளியில் நடந்தவை.

அவ்வேளை...
அன்புக்கும்
அமைதிக்கும்
காதலுக்கும் சின்னமான என் இதயமே!
இரத்தம் வடிதலை பொறுக்காது
உடைந்து நொறுங்கும்.

கணப் பொழுதும் பிசகாது
குருதி குடித்துக் குடித்து
கொப்பழிப்பதிலேயே மகிழும் என் இதயமே!
சடுதியாய் தலை கால்களை உள்ளே புகுத்தி
தானே மறைந்ததாய் வாழும்
ஆமையாய் கூனிக் குறுகி
மண்டியிட்ட வேளையினை என்னவென்பேன்.

யுத்தம்.... ம்
அது என் உணர்ச்சியின் உறைவிடம்
முத்தம்....ம்
அது என் உணர்வின் உந்து கோல்
பசி .... ம்
அது என் உயிருடன் கலந்தது.

கரமிரு உழைத்திடும்
பறந்திடும் பசியது.... அல்லேல்
அடி முடி மாற்றி
ஆரம்ப இடத்திற்கே மீண்டு சென்று-
எங்களை நாமே அடித்துப்
புசித்து
குடிமனை அழித்துக் காடுகள் வளர்த்து
கல்லணை படுத்து மிருகங்கள் போல
கலவிகள் செய்து பிறப்பதை உண்டு - பின்பாய்
மனிதத்தை வளர்ப்போம்.

அதற்காக....
அதுவரை....
ஆயுதம் விளைத்து
மனிதமாய் தெரியும் மனிதர்களாகி
யுத்தங்கள் மீது முத்தங்கள் பதிப்போம்.

மாறாக...
யுத்தம் வெறுத்து முத்தம் விரும்பும்
குருதி குடித்துக் குடித்து குமுறும் இதயத்தை
அரிந்தெடுத்து அழித்தே ஒதுக்க
யாரால் முடியும்

லோகன் செல்லம்

1 comment:

மதுரை சரவணன் said...

//மிருகங்கள் போல
கலவிகள் செய்து பிறப்பதை உண்டு - பின்பாய்
மனிதத்தை வளர்ப்போம்.//
வலிக்கிறது . கவிதை கண்ணீர் வடிக்கச் செய்கிறது. வாழ்த்துக்கள்