Monday, May 31, 2010


மனிதாபிமான உதவி நிறுவனங்கள் மீதும், வைத்தியசாலைகள் மீதும், பொதுமக்கள் மீதும் திட்டமிட்டே இலங்கை அரசாங்கம் தாக்குதல்நடாத்தியுள்ளது
-லூயிஸ் ஆர்பர் -

நான் லூயிஸ் ஆர்பர். சர்வதே நெருக்கடிகள் குழுவின் தவைராக உள்ளேன். இலங்கையில் இடம் பெற் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் கடந்தவாரம் ஒருஅறிக்கையை நாம் வெளியிட்டிருந்தோம்.

இந்த
அறிக்கையில் கடந்த வருடம் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைஅரசாங்கப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போரில்மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான மிக முக்கியமானகுற்றச்சாட்டுக்களை தகுந்த ஆவணங்களுடன் தொகுத்திருக்கிறோம்.

குறிப்பாக
இறுதி ஐந்து மாதங்களும் நடந்த போரில் பொதுமக்கள் மீதுமேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் வன்முறைகள் அவர்களுடைய அடிப்படைஉரிமைகள் மறுக்கப்பட்டமை போன்றன குறித்து குறிப்பிட்டிருக்கிறோம்.

மனிதாபிமான
உதவி நிறுவனங்கள் மீதும், வைத்தியசாலைகள் மீதும், பொதுமக்கள் மீதும் திட்டமிட்டே இலங்கை அரசாங்கம் தாக்குதல்நடாத்தியுள்ளமையை அங்கிருந்து கிடைக்கும் ஆதாரங்களின் மூலம்உறுதிப்படுத்தக் கூடியதாயிருக்கிறது.

அவ்வாதாரங்களின்படி
அரசாங்கத்தினதும் படைகளினதும் உயரதிகாரிகளுக்குபடையினரால் பொதுமக்கள் பெருமளவுக்குப் படுகொலை செய்யப்படுவதுதெரிந்திருந்தும் அவர்கள் அவற்றைத் தடுக்கவோ பொதுமக்களைப்பாதுகாக்கவோ முனையவில்லை என்பதனை நம்பக்கூடியதாயிருக்கிறதுஎன்றும், இது போரியல் விதிகளை மீறிய செயல் என்றும் சர்வதேசமனிதாப்மானச் சட்டங்களுக்கு எதிhனவை என்றுமே சர்தேச நெருக்கடிள் குழுகருதுகிறது.

இந்த
அடிப்படைகளிலேயே இலங்கையில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள்குறித்த விரிவான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று சர்வதேசநெருக்கடிகள் குழு கருதுகிறது.

இந்த
அறிக்கை வெளியானதிலிருந்து வெளிப்படையான பொறுப்பணர்வுடன்கூடிய ஒரு விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புக்களும்ஊடகங்களும் எமது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இலங்கை
அரசாங்கமும் அவர்களுடைய ஆதரவாளர்களும் இந்த அறிக்கையில்குறிப்பிடப்பட்ட தகவல்கள் அதற்கான ஆதாரங்களி; அடிப்படைகள் என்பவற்றைஎல்லாம் கண்டுகொள்ளவில்லை. இந்த அறிக்கையி;ல் குறிப்பிட்டு;ள்ள எந்தவிடயங்கள் குறித்தும் பொறுப்புணர்வுடன் கூடிய பதிலெதனையும்அளிக்கவில்லை.

அரசாங்கம்
இவ்வறிக்கை சுட்டிக்காட்டியவாறான ஒரு சர்வதேச விசாரணையைஎதிர்ப்பதிலேயே தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால்
இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வந்த போக்கிலிருந்து அதுவிடுபட்டுள்ளது என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். அத்தோடு தமிழ் மக்களும்இலங்கையின் மக்களும் தாங்கள் உண்மையில் விடுதலைப் புலிகளிடமிருந்துவிடுவிக்கப்பட்டு இருக்கிறோமென்பதனை அவர்கள் நம்பவும் உறுதிப்படுத்தவும்வேண்டும்.

அதற்கு
இவ்வாறான ஒரு சர்வதேச விசாரணைக்கு இலங்கை அனுமதித்தாகவேண்டும். தன்னுடைய இந்தப் பொறுப்புணர்வு குறித்து விசாரணையைநடாத்தாமலோ நடாத்த அனுமதிக்காமலோ இலங்கை அரசாங்கம் ஒரு போதும்தனது நன்மதிப்பை நிறுவிவிடமுடியாது.

No comments: